முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சிந்திக்க வைத்த மூதாட்டியின் கேள்வியும், இதன் விளைவாக இஸ்லாத்தை தழுவிய கின்னஸ் பேட்டியாளரும்...


பாலஸ்தீன், 06/2016: 124 வயதுடையை மரியம் ஹம்தான் அம்மாஸ் என்பவர் பாலஸ்தீனிய பெண்மணியாவார்.
ஐந்துமுறை ஹஜ்ஜும், பத்து தடவை உம்றாவும் செய்துள்ள இவர், எப்பொழுதும் ஹிஜாபுடனேயே காணப்படுவதுடன், மிகவும் உறுதியான ஈமான் கொண்டவர்.
இவருக்கு 9 பிள்ளைகளும் 600 வழித்தோன்றல்களும் உள்ளனர்.
இவருடைய வயதை கின்னஸில் பதிவதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தின் அதிகாரிகள் இவரை பேட்டி எடுக்க முயற்சித்தபொழுது, இவருடைய ஹிஜாபை அகற்றும்படி கேட்டுக்கொண்டார்கள்.
இதனை ஏற்றுக்கொள்ளாத அம்மூதாட்டியிடம் அவர்கள், "உங்களுடைய வயதென்ன" என்று கேட்டார்கள்.
அம்மூதாட்டியும் சிரித்துக்கொண்டே 43 என்று பதிலளித்தவர், கின்னஸ் பேட்டியாளரை பார்த்து "நீங்கள் முஸ்லிமா" என்று வினவினார்.
"இப்பொழுது இது முக்கியமா" என்ற கின்னஸ் பேட்டியாளரின் கேள்விக்கு மூதாட்டி இவ்வாறு கூறினார்.....
"நீங்கள் எது சரி, எது பிழையென பகுத்தறியும் நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் முஸ்லிமல்ல. 
அதாவது நீங்கள் உண்மையை பொய்யிலிருந்து பிரித்தறிய
முடியாதவறாயிருக்கிறீர்கள். ஒரு குழந்தைக்குத்தான் இந்த நிலையிருக்கும்."

" மற்றவர்கள் முன்நிலையில் உலகாயுத விடயங்களில் தங்களை பெருமைபடுத்தப்பட்டவர்களாகவும், படைத்தவன் முன் சிறுமைபட்டவர்களாகவும் இருப்பார்கள்.ஆகவே நான் இவ்வுலக வாழ்வை தேர்ந்தெடுப்பதா??? மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வை தேர்ந்தெடுப்பதா???"
"அதாவது உலகின் ஆதாயங்களுக்காக பெருமைப்பட்டவளாக இருப்பதா??? அல்லது படைத்தவனின் திருப்தியைபெற்று மரணத்திற்குபின் பெருமையுடையவளாக இருப்பதா???
இதில் எதை நான் தேர்ந்தெடுப்பது???"

மூதாட்டியின் இக்கேள்வியினால் கின்னஸ் பேட்டியாளர் பதில்
கூற முடியாமல் திகைத்து நின்றார்.

பணம், புகழ் போன்ற இன்னோரன்ன உலக ஆதாயங்களை பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கும் மனிதர்கள் மத்தியில், இந்த வயதான பெண்மணியின் ஈமானின் உறுதி அவரை சிந்திக்க வைத்தது.
அவரின் திகைப்பை கண்ணுற்ற மூதாட்டி , "நீங்கள் திரும்பிச்சென்று நன்றாக சிந்தித்துவிட்டு திரும்பிவாருங்கள். நீங்கள்வரும்வரை நான் இறக்க மாட்டேன்." என்று சிரித்தவாறே கூறினார்.
இச் சம்பவத்தின்மூலம் நடந்தது ஓர் அதிசயம்...........
இதன்பின்னர் ஏழுமாதங்கள் கடந்த நிலையில் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார் அந்த கின்னஸ் பேட்டியாளர். இதிலிருந்து நான்கு மாதங்களின் பின் இம்மூதாட்டியும் இறைவனடி சேர்ந்தார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்)

கின்னஸ் புத்தகம் வெளியிடுவோர் மூதாட்டியை எதற்காக ஹிஜாபை நீக்கும்படி கேட்டுக்கொண்டார்கள் என்பது விந்தையாகவே உள்ளது.
நன்றி 
Gulf News 

ஹைதராபாத் உள்ளாட்சி (GHMC) தேர்தல்கள்... அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அமோக வெற்றி...!!




ஹைதராபாத், பிப்ரவரி 06/2016: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 (வார்டு) இடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த (02.02.2016 ) அன்று நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று மாலை 4:00 மணிக்கு துவங்கியது...
தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி(TRS),  அகில இந்திய மஜ்லிஸ் கட்சி (AIMIM), காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி உள்ளிடவை முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர்..

வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்தே ஆளும் கட்சியான TRS முன்னிலை பெற்றிருந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கடும் போட்டியை கொடுத்தது...
இறுதியாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி(AIMIM) தான் போட்டியிட்ட 60 இடங்களில் 44 இடங்களை வென்று அசத்தியது...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)