முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இஸ்லாத்தை ஏற்ற ராஜ வேணி!


சென்னை, ஆகஸ்ட் 15: சென்னையின் குடிசைப் பகுதி ஒன்றைச் சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் தனது சகோதரிக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி அவரின் தங்கை ராஜவேணி இன்று இஸ்லாத்தை ஏற்று ரபியா பானு ஆனார்! அவருக்கு இன்று ஜுமு ஆவில் எனது மனைவி திருக்கலிமாவை சொல்லி கொடுத்தார்!
மேலும் தங்களது அந்த குடிசைப் பகுதியில் மற்ற மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல அழைத்து இருக்கிறார்! அல்லாஹ் அவர் மூலம் அந்த குடும்பத்துக்கும் அப்பகுதி மக்களுக்கும் நேரவழி காட்ட பிரார்த்திப்போம்.

கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள்.. அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள்.. இன்றைக்கு மாணவர்கள் படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது.


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டை பேரூர் தி.மு.க சார்பில் கலைஞரின் பூரண மதுவிலக்கு அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் நீதி கேட்கும் பேரணி விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. முத்துப்பேட்டையில் தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேச்சு.. இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட துணைச்செயலாளரும், நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்று பேசினார். இதில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேசினார் அப்பொழுது அவர் பேசுகையில்: 

தி.மு.க ஆட்சியில் தமிழக முழுவதும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது, பெரிய முதலிட்டார்கள் கொண்டு வரப்பட்டது, அதேபோல் தளபதி தமிழகத்தில் 80ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்து சேர்ப்பேன் என்றார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டில் 62 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு சேர்த்தார். இன்றைக்கு இப்பகுதி ஏழை விவசாயி பெண் கூட சென்னையில் 1.75 லட்சம் சம்பளம் வாங்கிறது என்றால் அது தி.மு.க ஆட்சியால் மட்டும் தான் முடியும். கலைஞர் ஆட்சியில் தெருவுக்கு தெரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. ஆனால் அம்மா ஆட்சில தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை திறந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழக முழுவதும் 7312 டாஸ்மாக் பாரையும் திறந்து இருக்கிறார், கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள் அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள், இன்றைக்கு மாணவர்கள் பெற்றோரை பார்த்து படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது. அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த மட்டும் போக முடியல ஆனால் மோடியை வரவேற்க ஏர்ப்போர்டில் கால் கடுக்க நிற்கிறார். 

இன்று தமிழகத்தில் அண்ணா திமுக ஆட்சி நடைபெறவில்லை அடிமை திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது, 127 நாட்களாக சட்டமன்றம் பூட்டி கிடக்கிறது கேவலமாக உள்ளது என்று இவ்வாறு பேசினார். 


கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை.வே.மன்னர்மன்னன், மாவட்ட துணைச்செயலாளர் கலைவாணிமோகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட மாணவர் அணி நிர்வாகி ஜாம்பை.ராமஜெயம், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் முத்துராமலிங்கம்.

 முன்னால் அவைத்தலைவர்கள் சேக்தாவூது, வீரையன், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், கோவிந்தராஜன், அகமது இபுராஹிம், மகாராஜா தமீம், ஒன்றி பொருளாளர் கோவிலூர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், முத்து லட்சுமிசிவா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, ஜாம்பைகல்யாணம், சித்தமல்லி அண்ணாத்துரை, பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவஅய்யப்பன், ஜகபருல்லா, ஜெய்புநிஷா பகுருதீன், ரெத்தினகுமார், கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆடலரசன், ரவிக்குமார், நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் செல்வம், அன்பன் மற்றும் பெருகவாழ்ந்தான் இளங்கோவன் உப்பட்ட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் நகர துணைச்செயலாளர் சியா நவாஸ்கான் நன்றி கூறினார்.

Reported By 

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

தன்னுடைய ஈமானை இழக்காத ஆடு மேய்த்த சூடானி....அவருக்கு சவுதி அரசு 40,000,00 ரியால் லட்சம் வெகுமதி...





சவுதி அரேபியா, ஆகஸ்ட் 15: ஒரு  நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ  நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு நாட்டில், புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.

இறையச்சத்துக்கான முதன்மை பரிசு மறுவுலக சுவனப்பரிசுதான். மற்றபடி இவ்வுலக பரிசு 40 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் அதுவும் ஒரு சோதனையே என்று கூறிக்கொண்டு... பதிவுக்கு செல்வோம் சகோஸ்.


சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், காரில் பிரயாணித்து வந்த சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டு மந்தையில் ஒன்றை தமக்கு தரச்சொல்லி கேட்க...

ஆடு மேய்ப்பவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆட்டு மந்தை, நான் எப்படி இதை உங்களுக்கு தரும் அதிகாரம் பெற முடியும்?' என்று கூறி ஆட்டை தரமறுக்க...

அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி விட்டு, தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட பணத்தாசை காட்டி வந்தவர்கள் கேட்க... 

அவரோ... இருநூறல்ல... இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை நான் உங்களுக்கு விற்க மாட்டேன்' என்று உறுதியாக கூற... 

அந்த சவூதி சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் உரிமையாளரோ வேறு யாருமோ உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் ஆட்டை நல்ல விலைக்கு விற்க பயம் கொள்கிறீர்?' என்று மீண்டும் பணத்தாசை காட்டி வற்புறுத்த, 

அதற்கு அந்த சூடானிய முஸ்லிம் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப் கூறியவார்த்தை... மாஷாஅல்லாஹ்... வரலாற்று புகழ்பெற்று விட்டது.

'அல்லாஹ் எங்கு சென்றான்.. அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா... அவன் உங்களையும் கண்காணிக்கிறானே... " 

...என்று எதிர்கேள்வி கேட்டு ஆட்டை தரவோ விற்கவோ மிகத்திடமாக மறுத்துவிடுகிறார். 

இது பற்றிய சோதனையாளர்களின் காணொளி யூ ட்யூபில் ஏற்றப்பட்டு வெளி வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது. 

அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்..! அந்த சூடான் சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் தமது இருப்பிடத்துக்கு அழைத்து உபசரித்து... பாராட்டி, 200,000 சவூதி ரியால் பணத்தை  பரிசாக கொடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளுடன் சகோ. யூசூப் உள்ள புகைப்படங்களை அடுத்து காணுங்கள்.

மாஷா அல்லாஹ். 
இதற்கு முன்னரே... அல் ஹுசைனி பவுண்டேஷன் என்ற நிறுவனம், 20,000 சவூதி ரியால் வெகுமதியை அந்த சகோதரருக்கு வழங்கியுள்ளது. 

மேலும்,  20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் வேறோரு இடத்தில் இருந்து அதாவது சில தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சில கொடையாளிகள் குழு மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.

மாஷாஅல்லாஹ், மப்ரூக்.

ஆக மொத்தம்...
தூய்மையான இறையச்சத்துக்கு சுமார் நாற்பது லட்சம் ரூபாய் சன்மானத்தை அல்லாஹ் இவ்வுலகிலேயே சகோ. யூசுஃபுக்கு வழங்கி, தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான். இன்னும் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

"அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்". (அல்குர்ஆன் 65: 2-3).


Reported By

அப்துல் ரஹ்மான். 


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)