முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஆர்.எஸ்.எஸ் நிருவாகியை சந்தித்து கேள்வி கேட்ட உலமா !!பதில் சொல்லாமல் தவித்த காவி டவுசர்...!!!


உபி: பிப்ரவரி/19/15: உத்திரபிரதேசம்கான்பூரில் நேற்று உலமா கவுன்சில் பொது செயலாளர் முஹம்மது சலிஸ் அவர்கள் பேட்டி அளித்தார் இதில்
ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூத்த நிருவாகி இந்திறேச்சி அவர்களை அவர் அலுவலத்தில் நேரில் பார்த்து ஆறு கேள்விகளை கேட்டோம் !!
1.இந்தியாவை ஆர் எஸ் எஸ் ஒரு இந்து நாடாக கருதுகிறதா...??
2.இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு ஒரு வடிவத்தை ஆர் எஸ் எஸ் தாயரித்து இருக்கிறதா...??
3.இந்து நாடு இந்து மத நூலின் படி அமையுமா அல்லது ஆர் எஸ் எஸ் சிர்த்திருத்ங்களை செய்யுமா...??
4.மத மாற்றத்தை விரும்பு கிறீர்களா...??
5.எந்த மாதிரியான தேச பற்றினை முஸ்லிம்களிடம் இருந்து ஆர் எஸ் எஸ் விரும்புகிறது...!!!
6.இஸ்லாமிய மதத்தை ஆர் எஸ் எஸ் எப்படி பார்க்கிறது...!!
90 நிமிடம் நாங்கள் நடத்திய சந்திப்பின் போது அவர் பதில் எதுவும் கூறாமல் நீங்கள் ஒரு மாநாட்டை போடுங்கள் அதில் எங்களுக்கு அழைப்பு கொடுங்கள் அதில் இதற்க்கு எல்லாம் பதில் சொல்லுகிறோம் என்று கூறினார்...!!!
அதற்க்கு ஒரு அறைக்குள் பதில் சொல்ல முடியாத நீங்கள் எப்படி மாநாட்டில் பதில் சொல்லுவீர்கள் மாநாடு கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என கூறி வெளியே வந்தோம் என்றார்...!!!

ஐரோப்பியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முத்துப்பேட்டை தொழிலதிபருக்கு நேற்று பல்வேறு அமைப்பினர் வரவேற்பு.







முத்துப்பேட்டை: பிப்ரவரி 19/15: முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் எஸ்.எம்.ஹைதர் அலி. இவருக்கு குவைத் நாட்டில் தலைமையாக கொண்டு பல்வேறு நாடுகளில் டி.வி.எஸ். கார்கோ நிறுவனம் உள்ளது. மேலும் இவரது அல்மஹா அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து வருகிறார், இந்த சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஐரோப்பியா பல்கலைகழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதனையடுத்து பல்வேறு நாடுகளில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிலையில் நேற்று தொழிலதிபர் ஹைதர் அலி குவைத்திலிருந்து சொந்த ஊரான முத்துப்பேட்டைக்கு வந்தார் அவருக்கு வழக்கறிஞர் தீன்முகமது தலைமையில் முத்துப்பேட்டை எல்லையான செம்படவன்காடு பைபாஸ் அருகே பல்வேறு அமைப்பினர் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டு அங்கிருந்து காரில் ஊர்வலமாக ஆசாத்நகர் அல்மஹா காம்ப்ளக்ஸ்க்கு அழைத்து வரப்பட்டது, அங்கே வர்த்தகக்கழக தலைவர் ராஜாராமன், துணைச்செயலாளர் மாரிமுத்து, செயற்குழு ஊறுப்பினர் இர்பான் ஹைதர்அலி, மாவட்ட ஊராட்சி ஊறுப்பினர் முருகையன். இ.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மார்க்ஸ், முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் முகைதீன் அடுமை, அரிமா சங்க முன்னால் தலைவர் அப்துல் அஜீஸ், ஜமாஅத் தலைவர் ஜின்னா, த.மு.மு.க ஒன்றிய தலைவர் நெயனாமுகமது, நகர தலைவர் சம்சுதீன், முன்னால் தலைவர் தாவூது. காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, முன்னால் நகர செயலாளர் ஜெஹபர்அலி, தி.மு.க நகர இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா பிரபாகர், நுகர்வோர் அமைப்பின் தலைவர் சுல்தான் இபுராகிம், அல்மஹா நிர்வாகிகள் இபுராகிம், சென்னை கிதிர், சென்னை ஹாஜா கமால் உட்பட அல்மஹா பணியாளர்கள், உறவினர்கள் பலரும் சால்வை அணிவித்து வரவேற்றனர், அதேபோல் கத்தார் நாட்டிலிருந்து மேனேஜர் தாவூது இபுராகிம், பஹ்ரைன் நாட்டிலிருந்து மேனேஜர் ரிஸ்வான் கான் ஆகியோர் தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருத்தப்பா சித்திக் செய்து இருந்தார்.

நமது நிருபர் : 

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

இறையில்லம் அமைய உதவிடுவீர்!!!


பிப்ரவரி/19/15: காஞ்சிபுரம் மாவட்டம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதி இஸ்லாமியர் அதிகம் குடியேறும் பகுதிகளில் ஒன்று.இப்பகுதி இஸ்லாமியர்கள் தங்கள் மார்க்க கடமையை நிறைவேற்றும் பொருட்டு,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கானத்தூர் கிளை 1800 சதுரஅடி கொண்ட நிலத்தை ரூ:55,00,000(ஐம்பத்தைந்து லட்சம்)விலை பேசப்பட்டு முன் பணமாக ரூ:5,00,000(ஐந்து லட்சம்)கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்திற்கான பத்திரப்பதிவு மற்றும் கட்டிடப்பணிக்கான செலவு உட்பட ஒரு சதுர அடிக்கு ரூ:5500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் அன்றாடக்கூலிகளாவும்,சொற்ப ஊதியம் உடையவர்களாவும் இருப்பதால் இறையில்லம் அமைக்கும் பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வங்கி கணக்கு எண்:
India Thowheed Jamath Kanathur Branch
State Bank Of India
AC No:32647825963
Uthandi Branch
IFSC Code:SBIN0011771
தொடர்புக்கு:
மஸ்ஜிதுல் அக்ஸா
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
368/825,வாஞ்சிநாதன் தெரு
கானத்தூர் ரெட்டிக்குப்பம்
காஞ்சி மாவட்டம்
செல்:9444742067,9841844086,
9940374793,9884461830
படம்:மாநில நிர்வாகிகள் மற்றும் கானத்தூர் கிளை நிர்வாகிகள் தலைமையகத்தில் ஆலோசித்த போது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)