முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இன்றைய நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள்..!!


அதிரை, டிசம்பர் 22: ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது.அதன் பின் ஒன்றுமே இல்லை. அவன் இறந்த பின் மண்ணோடு மன்னாகிறான், என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,பாவம்,புண்ணியம், என்று எதற்கும் பயப்பட தேவை இல்லை. ஆனால் மனிதன் இறந்த பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.அது முடிவற்றது.வாலிப வயதில் ஒரு மனிதனின் பங்கு,பெரும் சோதனைக்கு உரியது.இந்த வயதில் தான் ஒரு இளைஞனின் வாழ்க்கை திசை மாறுகிறது. அல்லது மாற்றப்படுகிறது. ஒரு இளைஞன் தன் வாலிப வயதில் எவ்வாறு சகமனிதர்களுடனும், தோழர்களுடனும், பழகுகிறானோ அவ்வாறு தான் அவனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிவிடுகிறது. 

ஆடை இல்லா மனிதன் அறை மனிதன் என்பது பழமொழி. நல்ல நண்பர்களை தேடுவதை விட நீ நல்ல நண்பனாய் இரு, கட்டாயம் உனக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.., என்று ஓர் அறிஞர் சொன்னார். அனால் இன்றைய இளைஞர்கள் அப்படி இல்லை. இன்றைய இளைஞ்கர்கள் தன் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை கிண்டல் செய்தும், சிகரெட் பிடித்து கொண்டும்,போதை தரும் பாக்குகளை உபயோகித்தும் வருகின்றனர். அதிலும் சில இளைஞர்கள் மட்டுமே தங்களை தவறான வழியில் செல்லாமலும், தவறான நண்பர்களுடன் சேராமலும், அவர்களே அவர்களை, பாதுகாத்து வருகின்றனர். 

இஸ்லாத்தின் நற்குணங்களான பொய், புறம்,நம்பிக்கை மோசடி, பெருமை, தீய எண்ணம், கோபம், மது, சூது, லஞ்சம், திருட்டு, போன்ற இன்னும் பலவற்றினை ஒரு முஸ்லிம் அறவே விட்டொழிக்க வேண்டும். அனால் இன்று எத்தனை பேர், எத்தனை இளைஞர்கள் விட்டொழிக்கிகிறார்கள்.? சற்று நடு நிலையோடு சிந்தித்து பாருங்கள்..! இன்றைய நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள் பத்து மாதம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற தாயை அடித்து, துன்புறுத்தியும், பாசமாக வளர்த்த தந்தையை வீட்டை விட்டே விரட்டிக்கொண்டும், தவறான நண்பர்களுடன் சேர்ந்து தெரு ஓரங்களில் சிகரெட், மது, போன்ற தவறான பழக்கங்களிலும் ஈடுபடுகிறார்கள். நமது தோல் வலிமையில் தான் நாம் சம்பாதிக்கின்றோம் என்று எண்ணிவிடக்கூடாது. தோல் மூலம் நாம் ஒன்றும் சாதித்து விட முடியாது. கை, கால்களை இறைவனே கொடுத்தான். 

இதனால் தான் அவனது ஆணைப்படி உழைக்கின்றோம். அனால் இந்த உழைப்பு ஒன்றும் தந்து விட முடியாது. தரக்கூடியவன் அல்லாஹ் தான். எனவே நாம் நன்மையின் வழியையே தேர்ந்தெடுக்க வேண்டும். அனால் இன்றைய நிலையில் எத்தனை பேர் இந்த நம்பிக்கையில் இருக்கின்றோம்?  "முத்துக்கு சொந்தக்காரர்களாய் சஹாபா பெருமக்கள்.! அனால் சிப்பியாய் இருக்கக்கூட தகுதியற்றவர்கள் நாம்.! பூக்கடை மலர்களாய் அவர்கள்.! சாக்கடை புழுக்களாய் நாம்".! ஏனிந்த முரண்பாடுகள்? எப்படி வந்தது.? இதை பற்றி நாம் சிந்தித்தோமா? இதைப்படித்து விட்டு ஒருகட்டூரையை படித்தோம் என்று எண்ணி கொண்டு தூங்கிவிடுவீர்களாயின், நெடுந்தூக்கம் தூங்கிய பின் இறைவன் எழுப்புவானே..! அப்பொழுது விழித்து இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியது வரும். 

ஆகவே கேள்வி கணக்கு கேட்கும் நாளை மறுமையில் சுவனம் செல்வதற்கு,நாம் செய்த குற்றங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுவோம்.. அன்புள்ள சகோதர, சகோதரிகளே.! நெடுந்தூக்கம் வரும் முன் நாம் அனைவரும் விழித்துக் கொள்வோம்..! இதோ உங்களுக்கு,குறிப்பாக என்னைப் போன்ற வாலிப வயது இளைஞர்களுக்கு 5 கேள்விகள்;- இந்த நிமிடம் உங்கள் மரணம் வந்தால் மறுமையில் உங்கள் நிலை என்ன? நீங்கள் மறுமைக்காக சேர்த்து வைத்தது தான் என்ன? நீங்கள் அடைந்த இந்த இஸ்லாத்தை உங்கள் வாழ்கையில் எத்தனை பேருக்கு எடுத்து சொன்னீர்கள்? உங்கள் வாழ்க்கை நபி (ஸல்) அவர்கள் சொன்னபடி அமைந்துள்ளதா? ஒரு நாளில் எத்தனை முறை மறுமைக்கு அஞ்சுகிறீர்கள்? இந்த 5 கேள்விகளுக்கும் நாம் சரியானவரா என்று சிந்தியுங்கள்..! இளைஞர்களே..! தடுமாறும் இந்த வாலிப வயதில் தடம் மாறாதீர்கள்.! 

நமது இணையதளத்திற்கு எழுதி அனுப்பிய கட்டுரை:

நன்றி: S.அப்துல் வஹாப் BBA., அதிரை.

மவுத்து அறிவிப்பு: KMS.சேக்ஜி என்கிற ஜோதிடர் சேக்தாவூது.


முத்துப்பேட்டை, டிசம்பர் 22: மர்ஹீம் மு.க.காதர்மைதீன் அவர்களுடைய மகனும், KM.ரஹ்மத் அலி, KM.தாஜ்தீன்(TJ), MMA .ஜலால், இவர்களுடைய சகோதரரும், அதிரை சாகுல் ஹமீது அவர்களுடைய மாமனாரும், L.ஜெயிலானிடைய தாய் மாமாவும், S.முகம்மது இதிரீஸ், S.முகம்மது இக்பால், இவர்களுடைய தகப்பனாருமாகிய "KMS.சேக்தாவூது" அவர்கள் காலை 6:30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் . (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). 



அன்னாரின் ஜனாஸா நாளை காலை முகைதீன் பள்ளியிவாசால் மையவாடியில் நல்லடக்கம் 
செய்யப்படும் என அறிவிக்கிறார்கள். 

அறிவிப்பவர்: KM. ரஹ்மத் அலி சகோதரர்கள்.


MMA.ஐலால்.
Cell: 97 88 52 60 85 .

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)