முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இந்து முன்னணி நிர்வாகி கொலை: கைதான முதல் மனைவி வாக்குமூலம்

சங்கரன்கோவில், ஜூலை. 6–
 இந்து முன்னணி நிர்வாகி கொலை: கைதான முதல் மனைவி வாக்குமூலம்

சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (வயது 37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீவராஜை அவரது முதல் மனைவி அய்யம்மாள் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:–

எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் என்னுடன் தகராறு செய்வார். இதனால் அவரை நான் கண்டித்தேன். இருப்பினும் அவர் குடியை நிறுத்தவில்லை. இதன் காரணமாக நான்அவரை பிரிந்து எனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன்.

என் மீதான கோபத்தில் ஷர்மிளா என்பவரை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை தட்டிக்கேட்ட என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும் நான் இருக்கும் போதே ஷர்மிளாவுடன் உல்லாசம் அனுபவித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

நேற்று முன்தினம் இரவு ஷர்மிளா வீட்டில் இல்லை. மேலும் ஜீவராஜ் நல்ல குடிபோதையில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நான் ஜீவராஜின் கழுத்தை அரிவாள்மனையால் அறுத்து கொலை செய்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)