முத்துப்பேட்டை, மார்ச் 10: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஜமாத்துல் அவ்வல் பிறை 14, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 16-03-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல் மதரசாவில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு: A. முஹம்மது இலியாஸ். MBA.,MA. (Journalism & Mass Communication)
மேலும் தொடர்புக்கு:
A. முஹம்மது இலியாஸ்
துபாய் தொடர்புக்கு: 00971 - 55 786 5516.
இந்தியா தொடர்புக்கு: 0091 - 98426 81426.
முத்துப்பேட்டை, மார்ச் 10: பழைய பேருந்து நிலையத்தில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகே காவல் நிலையம,; அரசு மருத்துவமனை, ரிஜிஸ்டர் ஆபிஸ் போன்றவைகள் இருப்பதால் அலுவலகங்களுக்கு வருபவர்களும், மற்றும் அப்பகுதிக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் தங்களது வானங்களை பள்ளியின் முன்பு நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இது மாணவ மாணவிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் இடையூறாக தொடர்ந்து இருந்து வந்தன. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பலமுறை சம்பந்தப்பட்டவர்களை தடுத்தும் பயனில்லை. காவல் நிலையத்தில் புகார் கூறியும் யாரும் தங்களது பழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. வெறுத்துப்போன பள்ளி தலைமையசிரியர் ராமலிங்கம் நீங்கள் மிகவும் நல்லவர். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு இரைடயூறாக தயவு செய்து இங்கே வாகனங்களை நிறுத்தாதீர் என்று ஒரு விளம்பர போர்டை பள்ளி முகப்பு கேட்டில் மாட்டி உள்ளார். அதன் பிறகு வாகனங்கள் நிறுத்துபவர்கள் இந்த பக்கம் வருவதில்லை. தினமும் பள்ளி திறக்கும் நேரத்தில் அந்த விளம்பர போர்டை மாட்டி விடுவதும் பிறகு பள்ளி நேரம் முடிந்ததும் எடுத்து பள்ளிக்குள் வைத்துக் கொள்ளும் நடைமுறையை பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது.
2:31 PM
திமுக
கூட்டணியில் அங்கம் வகிக்கும்
இந்தியன் யூனியன் முஸ்லீம்
லீக் மற்றும் மனிதநேய மக்கள்
கட்சி தங்களது வேட்பாளர்
பெயர்களை அறிவித்துள்ளது
.
திமுக
தலைமையிலான ஜனநாயக முற்போக்கு
கூட்டணியில் விடுதலைசிறுத்தை
கட்சிக்கு 2
தொகுதிகளும்
,புதிய
தமிழகம்,இந்திய
யூனியன் முஸ்லீம் லீக் ,மற்றும்
மனித நேய மக்கள் கட்சி ஆகிய
கட்சிகளுக்கு தலா 1
தொகுதிகளும்
ஒதுக்கப்பட்டன .
ஏற்கனவே
போட்டியிட்டு வெற்றிபெற்ற
சிதம்பரம் தொகுதியில் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் திருமாவளவனும் ,தென்காசி
தொகுதில் புதிய தமிழகம்
கட்சியின் நிறுவனர் டாக்டர்
கிருஷ்ணசாமியும் போட்டியிட
உள்ளனர் .
இந்நிலையில்
திமுக கூட்டணியில் அங்கம்
வகிக்கும் இந்திய யூனியன்
முஸ்லீம் லீக் கட்சி மற்றும்
மனிதநேய மக்கள் கட்சி,
தங்களின்
வேட்பாளரின் பெயர்களை இன்று
அறிவித்தது .
அதன்படி,
ஏற்கனவே
இந்திய யூனியன் முஸ்லீம்
லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு
வெற்றி பெற்ற அப்துல் ரஹ்மான்
வேலூர் தொகுதியில்
போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின்
தலைவர் KM
.காதர்
மொஹைதீன் சென்னையில் இன்று
அறிவித்தார் .
அதேபோல்
,மனித
நேயமக்கள் கட்சியின் சார்பில்
மயிலாடுதுறை தொகுதியில்
,அக்கட்சியின்
மூத்த தலைவர் ஹைதர் அலி
போட்டியிட உள்ளதாக ,அக்கட்சியின்
தலைவர் ஜே .எஸ்
.ரிபாயி
சென்னையில் இன்று அறிவித்தார்
.
1:00 PM
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை, படித்துறை அருகே சாலை ஓர வாய்க்காலில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர்.
உடன் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப-;இன்ஸ்பெக்டர் சாமிநாதன், வருவாய் ஆய்வாளர் ராமசந்திரன், வி.ஏ.ஓ ஆகியோர் உடலை பார்வையிட்டு விசாரனை நடத்தினர்.
அப்பொழுது கருப்பு சட்டை கைலி அணிந்து கிடந்த உடல் அருகே சால்வையும் அவரது செல் போனும் கிடந்ததை வைத்து விசாரித்ததில் அவர் வேதாரன்யம் தாலுக்கா, தென்னடார் நடுக்காடு, கிராமத்தை சேர்ந்த செவந்தான் மகன் சுப்பிரமணியன்(43) என்று தெரிந்தது.
சுப்பிரமணியன் ஆலங்காடு பகுதியில் ஒரு துக்க வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்ததாக கூறப்படுகிறது. துக்க வீட்டிற்கு சென்று விட்டு சாலையை கடக்க முயன்றபோது அடயாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா? அல்லது யாரும் அடித்து கொன்று விட்டார்களா ? என்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. போலீசார் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர்.