முத்துப்பேட்டை, ஜனவரி 24: நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.
இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம். இந்த சங்கபரிவார அமைப்புகளின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியின் மதவாதம், ஊழல், போலி தேசிய வாதம், தீவிர வாதம் போன்ற பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டும் முகமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தை மாநில அளவில் நடத்த உள்ளது. இதன்படி ஜனவரி 2014 முதல் ஏப்ரல் 2014 வரை மாநிலம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரான நோட்டீஸ் மற்றும் போஸ்டர் பிரச்சாரம், சமூக வலைதளங்களில் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்களை நடத்த உள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், அனைத்து இயக்க தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பாசிசத்திற்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் சார்பாக பா. ஜ. க. வின் இரட்டை வேடத்தை மக்களுக்கு தெளிவு படுத்தும் விதமாக தமிழக முழுவதும் நோட்டீஸ் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு அங்கமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று (24.01.2014) நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை, ஜனவரி 24: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரும் 28 ஆம் தேதி சிறை செல்லும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது .இதற்காக தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டங்கள் மற்றும் தர்பியா முகாம்களை தீவிரமாக நடத்தி வருகிறது .
பரபரபிற்கு சிறிதும் பஞ்சமில்லாத முத்துப்பேட்டையில் ,TNTJ வின் போராட்ட பணிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது .
போராட்ட பணிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக ,TNTJ வின் மாநில செயலாளர் அன்சாரி அவர்களை முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள குழுவின் சார்பாக சந்தித்தோம்.
சிறை செல்லும் போராட்ட பணிகளில் ஈடுப்பட்டிருந்த அவர் நமது இணையதளத்திற்கு பேட்டியளித்தார் .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முத்துப்பேட்டை கிளையின் சார்பாக திருச்சியில் நடைபெறும் சிறைசெல்லும் போராட்டத்திற்கு செல்வதற்காக 20 பஸ்கள் மற்றும் 40 வேன்களில் செல்ல இருப்பதாகவும்,இதற்காக ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார் .
கடந்த 2 மாதத்திற்கு முன்னதாகவே சுவர் விளம்பரங்கள் ,துண்டு பிரசுரங்கள் ,வால் போஸ்டர்கள் ,டிஜிட்டல் போர்டுகள் உள்ளிட்டவைகள் மூலம் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விளம்பர பணிகள் செய்துவந்ததாக கூறினார் .
இதற்காக தனித்தனியாக குழுக்கள் பிரிக்கப்பட்டு முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று அழைப்பு பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார் .
TNTJ வை சேர்ந்த பெண்கள் கூப்பாடு செல்வது போல் நேரடியாக முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி பெண்களிடம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ,அதில் பெரும்பான்மையான பெண்கள்
போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் , இது இஸ்லாமிய இயக்க வரலாற்றில் ,எந்த இயக்கமும் செய்திடாத ஒரு மகத்தான பனி என்றும் அன்சாரி பெருமிதம் தெரிவித்தார் .
சென்னை ,திருச்சி ,கோவை ,காரைக்கால் பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் ,மும்பை மற்றும் மகாராஷ்டிராவிலும் இந்த சிறை செல்லும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த உள்ளதாக தெரிவித்தார் .
இந்த சிறை செல்லும் போராட்டத்தில் 20 லட்சம் பேர் கலந்துகொள்ள இருப்பதாகவும் ,இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அணிதிரள உள்ளதாகவும் கூறினார் .வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அதிமுக விற்கு ஆதரவு கொடுக்கபோவதாக செய்திகள் பரவி வருகிறதே என்ற கேள்விக்கு ,அதை நீங்கள் போராட்டத்திற்கு பிறகு தெரிந்து கொள்வீர்கள் என பதிலளித்தார் .
ஆசாத் நகரில் கட்டப்பட்டு வரும் தவ்ஹீத் மார்க்சிற்கு ,ஒரு சில விஷமிகள் எதிராக செயல்படுவதாகவும் ,எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறை இல்லங்கள் கட்டிக்கொள்ளலாம் என இந்திய சட்டம் சொல்வதாகவும் ,எனவே திட்டமிட்டபடி அதே இடத்தில் தவ்ஹீத் மார்க்ஸ் கட்டி எழுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார் .
சந்திப்பு :ஜே :ஷேக் பரீத்
7:11 PM
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனது பாராளுமன்ற நிதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு சக்கர மோட்டர் சைக்கிள்களை நாகை எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வழங்கினார். இதனை நாகை எம்.பிக்கு பரிந்துறை செய்த மாவட்ட தி.மு.க துணைச்செயலாளரும், முத்துப்பேட்டை நகர செயலாளருமான கார்த்திக்கை முத்துப்பேட்டை நகர த.மு.மு.க சார்பில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்பொழுது நவாஸ்கான், அலிஅக்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் பெற்ற மாற்றுத்திளனாளிகளும் த.மு.மு.க வினரும் உடன் இருந்தனர்.