முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தர்ஹாவில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி....




முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்பவானோடை தர்ஹாவில் மதநல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தர்ஹா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் தலைமை வகித்தார். ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக டிரஸ்டி தமீம் அன்சாரி சாஹிப் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன,; திருவாரூர் மாவட்ட எஸ்.பி.காளிதாஸ் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மதிவாணன் பேசுகையில்: இப்படி ஒரு புனித பாக்கியத்தை தந்த தர்ஹா நிர்வாகத்துக்கு நன்றி. மதங்களை கடந்து சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது. நாம் செய்த ஒவ்வொரு காரியமும் நல்லதே செய்ய வேண்டும். நல்லதே கருதவேண்டும் என்றலாம் இஸ்லாத்தில் போதிக்கப்பட்டு வருவதை நான் பல இடங்களில் கேட்டு உள்ளேன். அனைத்திலும் சமாதானம் என்ற ஒரே வாக்கியத்தையே மையப்படுத்துகிறது. இஸ்லாத்தில் போதிக்கப்படும் அனைத்திலும் சமாதானத்தையே கூறப்படுகிறது என்பது மகிழ்ச்சியை தருகிறது, இந்த நாளில் சகோதரத்துவத்தில் நாம் வாழ வேண்டும். மத நல்லினக்கத்தோடு வாழ வேண்டும் என்று நாம் உறுதி எடுப்போம் என்றார். மாவட்ட எஸ்.பி காளிதாஸ் மகேஷ்குமார் பேசுகையில்: இந்த நாளில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் விழா நடத்த கோரிக்கை வைத்தேன். செய்து கொடுத்த தர்ஹா நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவிக்கிறேன். அதே போல் இந்த இப்தார் நிகழ்ச்சியில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் இப்பொழுது நாம் காணமுடிகிறது. இது போல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்களை போன்றவர்கள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் மதியழகன், ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, முன்னால் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி, இன்ஸ்பெக்டர்கள்: எடையூர் பாண்டியன், முத்துப்பேட்டை சண்முகவேல், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஜாம்பை இளைஞர் நற்பணி மன்றம் தலைவர் கண்ணன், குட்டியர் பள்ளி தலைவர் காதர் உசேன், தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், ரோட்டரி தலைவர் வேதசங்கர், வர்த்தகக்கழக தலைவர் ராஜாராமன், பொதுச்செயலாளர் ராமலிங்கம், விவசாயிகள் பிரிவு நிர்வாகி முருகையன், சமூக ஆர்வலர் சுல்தான் இபுராஹிம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகம், புதுபள்ளி நிர்வாகி சிராஜிதீன், பேரூராட்சி கவுன்சிலர் நாசர், நகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னால் துணைத் தலைவர் கந்தவேல், மர்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளிமுத்து, தர்ஹா நிர்வாகி சேட்டு, திருத்துறைப்பூண்டி சிராஜிதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் தர்ஹா நூர் முகம்மது லெப்பை நன்றி கூறினார். 




0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)