முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளருக்கு மலை போல் குவிந்திருக்கும் கிரிமினல் வழக்குகள் -- வேட்புமனு ஏற்புக்கு எதிராய் வழக்குபோடுவார்களா சமூக ஆர்வலர்கள் !!

தஞ்சாவூர்: தஞ்சை நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர்  மீது கொலை வழக்குகள் உடபட 20 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 வேட்புமனு தாக்கலின்போது அவர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான சனிக்கிழமை அவர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.அதில், இவர்  மீது திருத்துறைப்பூண்டி நடுவர் நீதிமன்றத்தில் கொலை முயற்சி பிரிவு 6 வழக்குகள், கொலை மிரட்டல் பிரிவில் 7 வழக்குகள், சொத்து சேதப்படுத்துதல் பிரிவில் 6 வழக்குகள் உடபட 20 வழக்குகள் விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுநலனில் அக்கறை உள்ளவர்களாகவும் ,சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராகவும் ,இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராகவும் ,தேசிய ஒருமைப்பாடு ,சமூக நல்லிணக்கம் ,ஆகியவற்றில் உறுதியானவராகவும் ,இருக்க வேண்டும் என்று அரசியல் சாசன சட்டமும் தேர்தல் விதிமுறைகளும் கூறுகின்றன .
ஆனால் தஞ்சையில் பாஜக வின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளருக்கோ ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் .அதுவும் ஒஎரு சமுதாயத்திற்கு எதிரான  முஸ்லீம்  சமுதாயத்திற்கு எதிரான  கலவர வழக்குகள் .
இவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் அதிகாரி மீது வழக்கு போட யாரேனும் சமூக ஆர்வலர்கள் முன் வரும் பட்சத்தில் அவருக்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் துணை நிற்கும் . 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)