முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் இயங்கி வரும் அல் மதரஸத்துல் இலாஹியா மதரஸாவில் அட்மிஷன் தொடங்கியது..







முத்துப்பேட்டை, ஏப்ரல் 13: முத்துப்பேட்டையில் கடந்த 1 வருடமாக அல் மதரஸத்துல் இலாஹியா இயங்கி வருகிறது. இதில் சுமார் 6 - 9 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் சுமார் 10 பேர் பயின்று வருகின்றனர்.  

இங்கு குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யும் பாடத்திட்டம் போதிக்கப்படுகின்றன.  இதற்கான தலை சிறந்த உலமாவை கொண்டு மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, தங்கும் இடம் ஆகியவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த அல் மதினா டிரஸ்ட் தலைவர் J. பெரோஸ்கான் கூறியதாவது,  இதில் பயில கூடிய மாணவர்கள் அனைவருக்கும் பாட திட்டம் மற்றும் தங்கும் இடம் மற்றும் உணவு உடை ஆகியவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்றும், 

மேலும் இது தொடர்பாக வெளி நாடுகளில் இருக்கக்கூடிய சகோதரர்கள் இந்த மதரசாவிற்கு பொருளாதார உதவி வழங்க முன்வர வேண்டும் என்றும், மேலும் இந்த மதரஸாவை குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கலாம் என்றும் இதன் மூலம் தெருவித்துக்கொள்கிறேன் என்றும், அவர் தெருவித்தார்.

மேலும் முத்துப்பேட்டை தாஃவா சென்டர்  பெயரில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை தூய்மையான வடிவில் எடுத்துரைத்து அதில் இதுவரைக்கும் 8 மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தின் பக்கம் தங்களை இணைத்து உள்ளார்கள் என்றும், அவர்களுக்கு கத்துனா, இஸ்லாமிய பாட திட்டம் ஆகியவைகளும் இலவசமாக இது வரைக்கும் போதிக்கப் பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். 

மேலும் அல் மதரஸத்துல் இலாஹியா குர்-ஆன் மனனம் செய்யும் மதரஸாவில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்க தீனியாத் வகுப்பு நடைபெற இருப்பதால், தங்களுடைய பிள்ளைகளையும் அனுப்பி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

நேரம் காலை 9.30 மணி முதல் 1.00  மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை  நடைபெற உள்ளது. 

பாடத்திட்டம்:  குர்-ஆனை முறைப்படி ஓத தஜ்வீது வகுப்பு, துஆ-க்களை மனனம் செய்தல், மற்றும் நல்லொழுக்க  பயிற்சி வகுப்புகள்,

கோடைகால தீனியாத் வகுப்பின் இறுதியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்படும்.,

 மேலும் தொடர்புக்கு:
AL MADARASATHUL ILAAHIYA
Run by AL-MADINAH TRUST
SBI BANK A/C NO: 3321 041 3787
MUTHUPET BRANCH
EMAIL: almadinahmdctrust@gmail.com
Mobile NO: 86752 92490, 98651 32370...

 நமது நிருபர்:

AKL. அப்துல் ரஹ்மான்...


3 comments:

  1. muthupettaiyil ithu pondra madarasaakkalil munneetrathukku muyalum vaalibarhalukku allah naalarul purivanaha

    ReplyDelete
  2. muthupettaiyil ithu pondra madarasaakkalil munneetrathukku muyalum vaalibarhalukku allah naalarul purivanaha

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)