5:55 PM
டிசம்பர் 28: முத்துப்பேட்டையிலிருந்து இளம்பிறை மாநாட்டுக்கு 8 வாகனம் சென்றதில் நூரா என்ற வாகனம் ஒரத்தநாட்டுக்கு அருகில் புலவன்காடு என்ற ஊருக்கு அருகே சென்ற போது வாகனத்தின் முன் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டு விட்டது.
இதில் வாகனத்தை ஓட்டிய சலீம் என்பவருக்கு தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. மற்றும் அதில் பயணம் செய்த யாசர், சஃபான் இவர்களுக்கு காலில் தையல் போடும் அளவுக்கு கிழித்துவிட்டது.
நூர்தீன் மற்றும் நூர்தீன் மகன், ஹாஸ்பாவ மகன் தமீம் இவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. யாசர், சஃபானுக்கு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் முதல் உதவிசெய்யபட்டுள்ளது. டிரைவர் சலீம்மை தஞ்சை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடக்கிறது.
முத்துப்பேட்டை, டிசம்பர் 28: முத்துப்பேட்டை பங்களா வாசல் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் டிரைவர் S. நூர்முஹமது அவர்களின் மனைவியும், N. நத்தர்சா அவர்களின் தாயாரும், K. ரஹ்மத்துல்லாஹ், S. ஹபீபுர்ரஹ்மான் (நாச்சிகுளம்), முகைதீன் அடுமை இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா "பஜரியா அம்மாள்" அவர்கள் நேற்று 27-12-2013 காலை 9.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று 28.12.2013 சனிக்கிழமை முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்.
N. நத்தர்ஷா, K. ரஹ்மத்துல்லாஹ் சகோதர்கள்
நமது நிருபர்:
முத்துப்பேட்டை, டிசம்பர் 28: முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் நேற்று மங்களுர் கிராமத்தில் சாலைப்பணி 9.56 லட்சம் பொது நிதியலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் டென்டர் செட்யூல் வாங்கப்பட்டது. அப்பொழுது தம்பிக்கோட்டை கூடடுறவு வங்கி தலைவரும் அதிமுக பிரமுகரும் ஒப்பந்தக்காரருமான நாராயணசாமி நேற்று முன்தினம் அந்தப் பணிக்காக ரூ.3120-யும் அர்ச்சுணன் என்ற பெயரில் அந்தப் பணிக்கு 3120-ம் செட்யூல் தொகை கட்டியிருந்தார். நேற்று செட்யூல் காப்பி வாங்கும் நாள் என்பதால் அதிமுக ஒப்பந்தக்காரர் நாராயணசாமி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து மேலாளர் பாலசுப்ரமணியத்திடம் நான் பணம் கட்டியதற்கான மேற்கண்ட பணியின் செட்யூல் காப்பி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு மேலாளர் பாலசுப்ரமணியன் ஆணையர் யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கார். அதனால் ஆணையரிடம் கேட்டுத்தான் தரமுடியும் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த நாராயணசாமி தரமுடியுமா முடியாதா? என்றும் தரமாட்டேன் என்று எழுதிக் கொடுங்கள் என்றும் ரகளை செய்து தர்னாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு ஒன்றியக்குழ தலைவர் நடராஜன் ஒன்றியக்கவுன்சிலர் ஜெகன் ஆகியோர் நாராயணசாமியை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து ஒப்பந்தக்காரர் நாராயணசாமி கூறுகையில் முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகம் மூலம் நடைபெறும் பணிகளை செய்ய முறைப்படி ஒப்பந்தக்காரருக்கு வழங்காமல் ஆணையர் தன்னிச்சையாக முடிவு செய்து அவருக்கு வேண்டப்பட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்குகிறார். புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த ஆணையரின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.