முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருப்திகரமான செக்ஸ் ஆண்களின் ஆயுளை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் தகவல்

வாஷிங்டன், டிசம்பர் 18: அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வீட்டில் காணப்படும் ஈக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். விஞ்ஞானிகள் பெண் ஈக்களின் ஹார்மோன்களை செயற்கையாக தூண்டி அதனை ஆண் ஈக்கள் மத்தியில் உலவச்செய்தனர். அந்த ஹார்மோன்கள் தூண்டப்பட்ட ஆண் ஈக்கள் செக்ஸ் உறவுக்காக முயன்றபோது அவற்றின் அருகே பெண் ஈக்கள் இல்லாததால் அவற்றால் உறவில் ஈடுபட முடியவில்லை. இதனால் அந்த ஆண் ஈக்களிடம் மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) அதிகரித்து இதை விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்தனர். 

இவ்வாறு மன அழுத்தம் அதிகரித்த ஆண் ஈக்கள், செக்ஸ் உறவில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட மற்ற ஆண் ஈக்களைவிட விரைவாக இறந்து விட்டன. என்பதையும் கண்டறிந்தனர். மன அழுத்தம் அதிகரித்த ஈக்களின் ஆயுட்காலம் 40 சதவீதம் குறைந்து இருந்தது. இதனைக் கொண்டு ஈக்களின் திருப்திகரமான செக்ஸ் உறவிற்கும் அதன் ஆயுளுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஈக்கள் மட்டுமல்ல, புழுக்கள் மத்தியில் செய்யப்பட வேறொரு ஆய்விலும் அவற்றின் ஆயுள்காலத்திற்கும் அவற்றின் திருப்திகரமான செக்ஸ் உறவிற்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்து உறுதி செய்து உள்ளனர். 


குஜராத் கலவரத்தின்போது வாஜ்பாய்-மோடி இடையே நடந்த கடித போக்குவரத்தை வெளியிட முடியாது: பிரதமர் அலுவலகம் கைவிரிப்பு



குஜராத், டிசம்பர் 18: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அப்போது பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்க்கும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கும் நடைபெற்ற கடித போக்குவரத்தின் நகல்களை தனக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மனு செய்திருந்தார்.


குறிப்பாக, கலவரம் உச்சகட்டத்தில் இருந்த 27-2-2002 முதல் 30-4-2002 வரை நடைபெற்ற கடித பரிமாற்றத்தின்போது, அந்த கலவரத்தின் பின்னணியில் இருந்த சக்திகள் தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும் குஜராத் முதல் மந்திரி மோடிக்கும் இடையில் இடம்பெற்ற தகவல் பரிமாற்றம் என்ன? என்று அந்த சமூக ஆர்வலர் பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.



ஒரு விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வரும்போது, அவ்விவகாரம் தொடர்பான முக்கிய குறிப்புகளை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வழங்க வேண்டும் என அரசை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது என்ற விதிவிலக்கை காரணம் காட்டி, “விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களை வழங்க முடியாது” என பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)