முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கொத்பா பள்ளிவாசல் அருகே மலை போல் குவியும் குப்பைகள் -பேரூராட்சியின் மெத்தனப்போக்கை கண்டித்து டிராக்டரை முற்றுகையிட்ட 8-வது வார்டு மக்கள் :

முத்துப்பேட்டை நவ – 06
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கபட்டுள்ளனர் . இந்த நிலையில் நகர் முழுவதும் குப்பைகள் பேரூராட்சி அப்புறப்படுத்தாததால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி அதன் மூலம் டெங்கு கொசுகள் உற்பத்தி ஆவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அல்லபடாததை கண்டித்தும், கொத்துபாபள்ளி வாசல் எதிர்புறம் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதை கண்டித்தும் நேற்று கொத்துபாபள்ளி வாசல் எதிர்புறம் குப்பை சேகரிக்க வந்த பேரூராட்சி டிராக்டரை அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ அயுப்கான், ஹமீது கட்டி , சஃபான் மற்றும் பொதுமக்கள் வழிமறைத்து முற்றுகையிட்டு சிறைபிடித்தனர் . இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கூடினார்கள் . சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை போலீசார் மற்றும் பேரூராட்சி சுகாதார அலுவலர் வீரமணி ஆகியோர் சிறை பிடித்த மக்களிடம் இனிமேல் பள்ளிவாசல் முன்பு குப்பைகள் கொட்டமாட்டோம் . வார்டு பகுதியில் நாளை முதல் உடனக்குடன் குப்பைகள் அகற்றப்படும் என்று உறுதி அளித்ததால் சிறைபிடித்த டிராக்கடரை பொதுமக்கள் விடுவித்தனர் .





தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)