முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

காந்தியை ஏன் கொலை செய்யக் கூடாது? இந்த தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.. -இந்துத்துவப் பெண்ணின் திமிர் பேச்சு!

சென்னை, நவம்பர் 04: சன் டிவி வளாகத்தில் பேராசியர் மார்க்ஸ் அவர்களுக்கும் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலின் சுருக்கும்:

முஸ்லிம்கள் மீது நடைபெற்ற வன்முறை ஒன்று குறித்து விவாதிக்க 'சன் டிவி' வீரபாண்டியன் கூப்பிட்டிருந்தார்.

முன்னதாக கான்டீனில் அமர்ந்து நானும் அவரும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தோம், சற்று நேரத்தில் என்னுடன் விவாதிக்க இருந்த இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு வந்தார்.

வந்தவுடன் எங்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு 'டி.வி.டி'யைத் தந்தார். படு பந்தாவாகப் பேசிக் கொண்டிருந்தார்.

தான், ஒரு முறை காரில் திருச்சி சென்றபோது உளுந்தூர்பேட்டை அருகில் காரில் ஏதோ ரிப்பேர் ஏற்பட்டு, இரண்டு மணி நேரம் அங்கு நிற்க நேரிட்டதாம்.

அதற்குள் ஏகப்பட்ட லாரிகளில் மாடுகள் கேரளாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து மனம் நொந்தாராம்.

அது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆவணப் படம் இது, என்றார்.

அப்படியா, வீட்டிற்குப் போய் பார்க்கிறேன் என்றேன்.

cow slaughter தொடர்பான அந்தப் படம் எடுக்கும்போது பல மாநிலங்களிலும் தகவல் திரட்டுவதில் ஏற்பட்ட கஷ்டத்தை விளக்கிய அவர், குஜராத் மாநில நிர்வாகத்தை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்.

குஜராத் மாநில 'அனிமல் ஹஸ்பன்டரி' இயக்குனரிடம், அங்குள்ள நிலை குறித்து கேட்ட மாத்திரத்தில் விவரங்களை அடுத்த கணமே அவர் கூறி விட்டாராம்.

அந்த அம்மையாரின் அலட்டல்களால் சற்றே எரிச்சலுற்றிருந்த நான், இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்தேன்.

"why, why, why are you laughing?" என்றார்.

"ஒண்னும் இல்ல. அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்னு நினைச்சுப் பார்த்தேன், சிரிப்பு வந்துவிட்டது" என்றேன்.

"what, what, what do you mean?" என்றார்.

"we don't slaughter cows. we slaughter only Muslims"

அப்படீன்னு அவர் சொன்னாரா? என்றேன்

கொதித்துப் போனார் அவர். சட்டென்று நாற்காலியிருந்து எழுந்தார். "இப்பிடியெல்லாம் பேசக் கூடாது. இங்கே எவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கு? எவ்வளவு இந்துக்கள் கொல்லப்பட்டிருக்காங்க, அதை எல்லாம் பேசுவீங்களா?' எனச் சீறினார்.

விவாதம் முற்றியது...

காந்தி கொலை பற்றிப் பேச்சு வந்தது. "காந்தியையே கொல்லவில்லையா நீங்கள்?" என்றேன்.

"Yes, Gandhi was killed. Why not one kill him.. இந்தை தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.."என்றார்.

வீரபாண்டியனுக்குத் தர்மசங்கடமாகி விட்டது. என்ன இருந்தாலும் அவர் host அல்லவா. ஒரு மாதிரியாகச் சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார்.

அன்று நிகழ்ச்சி விவாதமும் படு காரசாரமாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து கீழே செல்ல லிஃப்டை நோக்கிச் சென்றோம். ஊழியர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்றார்.

லிஃப்ட் அருகில் வந்ததும் அவர், "நான் இந்த ஆளோட போக மாட்டேன்.." எனச் சத்தமாகச் சொல்லிவிட்டு எதிரே இருந்த லிஃப்டை நோக்கி தட தடவென ஓடினார்...

அழைத்து வந்த ஊழியர் ஒரு கணம் திகைத்துப் பின் புன்னகைத்தார்.

இஸ்லாமிய பெண்களை காதலித்து விபசாரத்தில் ஈடுபடுத்தவேண்டும் -இலங்கை பொதுபல சேனா அமைப்பு திட்டம் !!!

உலகம், நவம்பர் 04: முஸ்லிம் பெண்மணிகளையும் காதலித்தல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய மூன்று விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான போதுபல சேனை என்ற இயக்கம் வாலிப உறுப்பினர்களை ஊக்குவித்து அன்பளிப்புகளும் வழங்கி வருகின்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு பொருட்கள் விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப்பிரதிநிதிகள் ஆக இவர்கள் வீடுகளுக்கு வந்து கதவைத்தட்டுவார்.முஸ்லிம் பிரதேசங்களிலே இவர்களின் நடாட்டம் அதிகம்.வோசிங்க்பவுடர், கேக் பவுடர், சவர்காரம் உடுதுணிகள் என பெருட்களை வீடு வீடாக வந்து பொருட்களை அறிமுகம் செய்யும் நபர்கள் குறித்து பொதுமக்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆண்கள் அதிகம் இல்லாத மதிய நேரங்களிலேயே இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான நடை உடை பாவனையுடன் வீடுகளுக்குள் நுழைகின்றனர். தம் பொருட்களை விற்பனை செய்வது இவர்களின் நோக்கமல்ல என்பதை நாம் புரிந்தது கொள்ள வேண்டும், வீட்டில் ஆண்கள் இல்லாத சந்த்தற்பங்களில் அறிமுகம் இல்லாத யார் வந்தாலும் கதவை திறக்காமல் இருப்பதே நல்லது. முக்கியமாக வெள்ளிக்கிழமை ஜுமாஹ் தினங்களில் வீட்டில் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இது இவர்களுக்கு மிகவும் வசதியாகி விடும்.

இவ்விசயத்தை ( இந்திய சகோதரர்களும் ) நம் சமூகத்திற்கு எத்தி வையுங்கள். அதிகம் செயார் பண்ணுங்கள்.
STL

ஆரம்பம் திரைப்படமும் – அதிரவைத்த சில உண்மைகளும் !



சென்னை, நவம்பர் 04: “இந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே … யாரையும் குறிப்பிடுபவை அல்ல”
என்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில், யாரையோ குறிப்பிட்டபடியே வெளிவருகின்றன. நடிகர் அஜித் குமார் நடித்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “ஆரம்பம்” அப்படியொரு படம்தான்.
தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னமே வெளியாகிவிட்டதால் நிச்சயம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிவிடும் என ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். இந்தப் படத்தின் திரை மொழி, இசை, காட்சிகள் என நுணுக்கமான ஆய்வுகளை பல விமர்சகர்களும் செய்யக் கூடும். அவற்றையெல்லாம் காத்திருந்து பார்ப்போம். இப்போது, கதையில் நகலெடுக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பேசுவோம்.
மர்மான முறையில் மரணித்த காவல் அதிகாரி:
கதை: “காவல்துறை அதிகாரி அசோக் (அஜித்) தனது நண்பருடன் ஒரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்த்து களமிறங்குகின்றனர். அந்த தாக்குதலில் அசோக்கின் உயிர் நண்பர் மரணமடைய – அதற்கு காரணம் என்ன என்ற ஆய்வைத் தொடங்குகிறார் அசோக்”
Hemant_Karkareஉண்மை: நேர்மையான காவல்துறை அதிகாரி ‘ஹேமந்த் கார்கரே’ – பயங்கரவாத குண்டுவெடிப்புகள் நடக்கும்போது, உரிய விசாரணையைச் செய்யாமல் தவறான நபர்களை  காவல்துறை பலமுறை கைது செய்திருக்கிறது. அதுவும் அரசியல்வாதிகள் கொடுக்கும் அழுத்தம் தாளாமல், யாரோ ஒரு முஸ்லிமைக் கைது செய்துவிடுவதும், அப்பாவிகள் நீதிமன்றக் காவலில் அவதிப்பட, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியாமல் போய்விடுவதும் உண்டு. (பார்க்க)  அப்படி ஒரு வழக்காக முடிந்திருக்க வேண்டிய ‘மாலேவ்கான் குண்டுவெடிப்பு‘ வழக்கை, காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே விசாரித்தார். குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்த ‘இந்து’ மத அடிப்படை தீவிரவாதிகளின் சதியை அவர் வெளிக் கொண்டுவந்தார்.
எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அது அப்பாவிகளின் கொலையிலேயே முடியும். இதனை தனது விசாரணையின் மூலம் நிரூபித்த ஹேமந்த் கார்கரே – மும்பையில் நடந்த ’26/11′ பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக களத்தில் உயிர்களைக் காப்பாற்றினார். பாதுகாப்பற்ற கவசம் வழங்கப்பட்டதாலேயே மரணம் நடந்ததா? என்று சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்த முடியாத வகையில் ஆவணங்கள் தொலைந்தும் போயின.
கதை: “மர்ம மரணம் அடைந்த காவல்துறை அதிகாரியின் நண்பரை தேச துரோகியாக சித்தரிக்கிறது அரசு. அத்தோடு அவரின் மனைவிக்கு ரூ.2 கோடி கொடுப்பதாக பேரம் நடக்கிறது. ‘நான் பேரம் பேசினால் எதுவும் படியாம போகாது என்பது உங்களுக்கே தெரியும். ஆனா என்னாலயே முடியல’ என்றபடி தரகர் ரம்யா வெளியேறுகிறார்”
உண்மை: ஹேமந்த் கர்கரே மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் கைது செய்யப்பட்டதும். பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் அவரை தேச துரோகியாக சித்தரித்தன.
ஆனால், தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு அவர் பலியானதும் மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்தார்.
கதை: “ரம்யா – அரசியல்வாதிகளோடும், தொலைக்காட்சி நிறுவனங்களோடும் இணைந்து செயல்படுகிறார். பலவிதமான தரகு வேலைகளில் களத்தில் நிற்கிறார்”
உண்மை: காங்கிரஸ் ஆட்சியில் வெளிவந்த, வரலாறு காணாத – 2 ஜி முறைகேடு வழக்கில், டாட்டா Nira-Radia-CBI-Raid-e-khabarமற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டவர்  நீரா ராடியா. வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்ற நிற்வனத்தை வைத்துக் கொண்டு அவர் நடத்திய உரையாடல்கள் வெளிவந்தன. (முழு உரைகளும்) இதுபோன்ற தரகர்கள், நமது நாட்டுக்கு அமைச்சராக யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் லாபியிலும் ஈடுபடுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. இதற்கு ஆதாரமாக, அவர்களின் தொலைபேசி உரையாடல்களும் வெளியாகின.
Barkha_Dutt_World_Economic_Forum_Nov_2010இந்த உரையாடல்களின் மூலம் புகழ்பெற்ற NDTV செய்தி சேனலின் செய்தியாளர் பர்கா தத், அதிகார பேரங்களில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததும் செய்தியானது. பெரும் நிறுவனங்களின் கோடிக்கணக்கான லாபங்களுக்காக அவர்கள் அரசின் சொத்துக்களை தரகு பேசுகின்றனர். இதே நீராராடியாதான் டாடா நிறுவனத்துக்கு அடிமாட்டு விலையில் குஜராத் அரசின் நிலத்தையும், நிதி உதவியையும் பெற்றுக் கொடுத்தார் என்பதும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. (http://deshgujarat.com/2010/11/25/was-gujarati-bahu-niira-radia-a-nano-link-between-modi-and-tata/)
கதை: “பிணையில் உள்ள தீவிரவாதியை விடுவித்துக் கொடுக்க ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே பேரம் பேசுகிறார். அதற்கான தொகை துபயில் கை மாறுகிறது”
உண்மை: இன்று நடக்கின்ற தீவிரவாத தாக்குதல்களுக்கெல்லாம் உளவுத்துறை சரியில்லை, எங்கள் ஆட்சியில் அப்படியில்லை என்று சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், கந்தகார் விமானக் கடத்தல் நடந்தது. (நாடாளுமன்ற வளாகத்திலேயே துப்பாக்கிச் சூடும் நடந்தது மற்றொரு அவமானகரமான நிகழ்வு)
இதுபோன்ற தாக்குதல்களை உளவுபார்த்து கண்டுபிடிப்பதை விட – இப்படியொரு சம்பவத்தை வைத்து இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவது அரசியலுக்கு பலன் கொடுக்கும் என நினைத்தார்களோ என்னமோ? அவர்களின் உளவுத்துறை வேலை செய்யவில்லை. இறுதியில் இந்தியாவின் பிணையில் இருந்த தீவிரவாதியை விடுவித்தனர்.
கதை: “ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் ஊழல்”
bangarulaxman_stingop
இந்தப்படம் கிரியேட்டிவ் காமன் உரிமம் பெற்றதல்ல – நன்றி: ராய்டர்ஸ்)
உண்மை: “ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் காங்கிரசும் பாஜகவும் மாற்றி மாற்றி  ஊழல்”
கதை: “ஊழல்வாதியையும், ஊழல்வாதிகளுக்கு துணையாக இருந்தவர்களையும். அவர்களோடு கூட்டு சேர்ந்த தீவிரவாதிகளையும். அசோக் உள்ளிட்ட ‘நல்ல’ கதாப்பாத்திரங்கள் அழிக்கிறார்கள்’.
உண்மை: உண்மையில், நமது நாட்டிற்கு விடப்பட்டிருக்கும் சவாலான ஊழலையும், அப்பாவி மக்கள் கொலைகளின் மூலம் தனது அரசியல் வெற்றியை சாதிக்க கணக்குப் போடும் சக்திகளிடமிருந்தும் இந்தியாவை விடுவிப்பது நமது கைகளில்தான் உள்ளது. சரியான மாற்று எது என்பதை அறிந்து, அதன் வழியே இந்தியாவை திருப்புவது இளைஞர்களாகிய நமது கடமை.
ஆம். இது ‘ஆரம்பம்’ மட்டுமே …

கத்தி குத்தில் மதுக்கூர் வாலிபர் பரிதாப பலி




மதுக்கூர், நவம்பர் 04: மதுக்கூரை சேர்ந்த வாலிபர் முஹம்மது தாரிக் [ வயது 24 ] நேற்று மாலை அதே ஊரைச் சேர்ந்த மதுக்கூர் மைதீன் மற்றும் நியாஸ் ஆகியரோடு ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டார். உடலில் 3 இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதையடுத்து இறந்த உடல் பிரத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பிரத பரிசோதனை முடிந்ததை அடுத்து இன்று மதியம் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மதுக்கூர் பெரிய பள்ளியில் மதியம் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: INTJ கடும் கண்டனம்!!!



சென்னை, நவம்பர் 04: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலசெயலாளர் அபூபைசல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை கண்டிக்கும் முகமாக இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு 1 வது வார்டு கவுன்சிலர் கொசு வலை போர்த்தி வந்ததை படமெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களுடன் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,பின்னர் பத்திரிக்கையாளர்களை தாக்கியும் உள்ளார்.தாக்கப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

பத்திரிக்கையாளர்கள் மீது நடத்திய தாக்குதலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.தாக்குதல் நடத்திய பேரூராட்சி மன்ற தலைவரை கடுமையான சட்ட   பிரிவுகளின் கீழ் கைது செய்யவும் காவல்துறையை கேட்டுக்கொள்கிறது.அதேசமயம் பத்திரிக்கையாளர்கள் அனுமதியின்றி உள்ளே வந்தார் என்று கூறும் நிர்வாகம்,காவல்துறையின் துணையுடன் அவர்களை வெளியேற்றி இருக்க வேண்டுமே தவிர,நேரடி தாக்குதலில் ஈடுபட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)