நடிகை ஹன்ஸிகா,நேற்று இரவு இவர் மும்பையில்இருந்து விமானம் மூலம்படப்பிடிப்புக்காக மதுரைக்கு வந்தார். அவருடன் அவர் தாயார் மோனாவும் வந்தார்.
மோனா, ஒரு டாக்டர். மதுரை விமான நிலையத்தில் இருவரும்
இறங்கியபோது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, இப்போதைக்கு படப்பிடிப்பு இல்லை.ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல, ஹன்சிகாவும்,
அவருடைய தாயார் மோனாவும் காரில் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில், ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரைப்பார்த்த ஹன்சிகா மோத்வானி,
காரை நிறுத்தும்படி கூறினார்.
ஆனால் எதற்கு வம்பு?
என்று காரை நிறுத்தாமல்
சென்றார் தயாரிப்பு நிர்வாகி.
ஆனால் ஹன்சிகா உரத்த குரலில்
சத்தம்
போட்டு காரை நிறுத்தும்படி கூறினார்.
பின்னர் காரை நிறுத்தியதும்
ஹன்சிகாவும், அவருடைய தாயாரும்
ரோட்டை கடந்து எதிர்புறம்
சென்றார்கள். ரத்த வெள்ளத்தில்
உயிருக்கு போராடிக்
கொண்டிருந்தவரை ஹன்சிகாவின்
தாயார் பரிசோதித்தார்.
அவருக்கு நாடித்துடிப்பு இருந்ததால்,
உடனடியாக 108
ஆம்புலன்சுக்கு போன் செய்தார்.
அதற்குள் அங்கே கூட்டம்
கூடியது. ஹன்சிகாவை அடையாளம்
கண்டு கொண்டார்கள். ஆம்புலன்ஸ்
வந்ததும்,
அடிபட்டு கிடந்தவரை தூக்கி ஆம்புலன்சுக்குள்
கிடத்தினார்கள். ஹன்சிகாவின்
தாயார் ஆம்புலன்சில்
ஏறிக்கொண்டார். அந்த
ஆம்புலன்சை, ஹன்சிகா காரில்
பின் தொடர்ந்தார். அருகில் உள்ள
ஒரு மருத்துவமனையின் அவசர
சிகிச்சை பிரிவில், அந்த
முதியவரை அனுமதித்தார்கள்.
அவருடைய சட்டைப்பையில் இருந்த
செல்போன் மூலம்
உறவினர்களுக்கு தகவல்
தெரிவித்தார்கள்.
அடிபட்டு கிடந்தவரின்
மனைவி அலறியடித்துக்
கொண்டு வந்தார்.
ஹன்சிகாவுக்கும், அவருடைய
தாயாருக்கும்
நன்றி தெரிவித்தார்.
அவருக்கு ஆறுதல் கூறிய
ஹன்சிகா கணிசமான பண உதவியும்
செய்துவிட்டு,
அங்கிருந்து புறப்பட்டார். நல்ல மனம் வாழ்க ......!
முத்துப்பேட்டை, அக்டோபர் 26: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்ஹா அருகில் உள்ள ஜீவானந்தம் என்பவரின் அனுபவத்தில் உள்ள இடத்தில் பூமிக்கடியிலிருந்து சூலாயுதம் வந்ததாக பரபரப்பானது.
யாரோ விஷமிகள் தூண்டுதலின் பேரில் அந்த இளைஞர் வேண்டுமென்றே அந்த இடத்தில் சூலாயுதத்தை வைத்துவிட்டு தானாக வந்ததாக நாடகமாடி பிரச்சனையை தூண்டி வருகிறார்.
இதனால் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு முத்துப்பேட்டை அரபு சாஹீப் பள்ளிவாசல் மதராஸவில் இன்று முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் ஒருகினைப்பாளார் S.S.பாக்கர் அலி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இதில் முத்துப்பேட்டை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், தமுமுக , SDPI , TNTJ ,முஸ்லிம் லீக் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தீர்மானங்கள்:
வருகின்ற 28.10.2013 மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்து சூலாயுதம் வந்ததாக கூறியவர் பாண்டியன் கைது செய்து அவர்களை விசாரனை செய்ய வேண்டும்.
பாண்டியனை கைது செய்யவில்லை என்றால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும்.
இனி வரும் காலங்களில் ஊரில் எந்த பிரச்சனையாக இருந்தால் இதை போல ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.