திருவாரூர், அக்டோபர் 17:
திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூர் மரக்கடையில் வசித்து வந்தவர் தனசேகரன் (45). இவர் கூத்தா நல்லூர் அருகே உள்ள நாகராஜன் கோட்டகம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சுமதி (42). இவர் பழையனூரில உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனசேகரன் கடந்த மே மாதம் 15–ந் தேதி மர்மமான
முறையில் இறந்து கிடந்தார்
.
அவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனசேகரன் மனைவி சுமதி திருவாரூர் டி.எஸ்.பி. வைத்தியலிங்கத்திடம் சரண் அடைந்தார். அப்போது அவர் தனது கணவரை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
தனக்கும் தான் பணிபுரியும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதற்கு கணவர் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக போலீசில் கூறினார்.
சரண் அடைந்த சுமதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கணவரை கொன்றதாக 5 மாதங்களுக்கு பின் மனைவி போலீசில் சரண் அடைந்துள்ள சம்பவம் கூத்தா நல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டன், அக்டோபர் 17: தியாக திருநாள் லண்டன் மாநகரில் அணைத்து பள்ளிவாசல்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது , அணைத்து பள்ளிவாசல்களிலும் மூன்று நான்கு ஜமாஅத் தொழுகை நடைபெற்றது , அணைத்து பள்ளிவாசல்களிலும் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது . லண்டன் மாநகரில் வாழும் பல நாடுகளை சேர்ந்த நம் சமுதயா மக்கள் அவர்கள் நாட்டு பாரம்பரிய புதிய உடைகள் அணிந்து வந்து தொழுகையில் கலந்து கொண்டும் வாழ்த்துகளை பரிமாரிகொன்டர்கள் . அல்லாஹ் இந்த நல்ல நாளில் நம் சமுதயா மக்கள் ஒற்றுமையுடன் இருக்க எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெற ஏக இறைவன் அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன் நமது ஊர் ஒற்றுமைக்காகவும் அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன்
லண்டன் வாழ் முத்துப்பேட்டை மக்கள்
லண்டனில்ருந்து அப்துல் ரஹ்மான் ஜமால் முஹமது அலி அஹமது ஆசிம் முஹமது அசார் முஹமது
|
கோவை , அக்டோபர் 17: கோவை வடவள்ளியில் வெடிகுண்டு நாடகமாடிய பிஜேபி செயலாளர் ராமனாதனையும் ஏனைய சங்கபரிவாரர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி,ஐ கட்சியின் சார்பில் சீர்குலைக்கும் விதமாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி பிஜேபி யும் சங்பரிவார கும்பலும் திட்டமிட்டு சமுகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பகண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொது அமைதிக்கு எதிராக, மத நல்லிணக்கத்தை து வேதனையே. அவர்களாகவே திட்டமிட்டு நிகழ்வுகளை எர்ப்படுத்தவும், அதை வைத்து பந்த் நடத்துவதும், அரசு பேருந்துகளை அடித்து நொறுக்குவதும், வணிக நிறுவனங்களை அடைக்கச் செய்வதும், எதிர்ப்பவர்களின் நிறுவனங்களை தீயிட்டு கொளுத்துவதும் சமீபகாலமாக தொடர் கதையாகிவிட்டது.
அண்மையில் அவர்கள் நடத்திய பந்த் ஒன்றில் கணபதியில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில் பெட்ரோல் குண்டுகளை பட்டப்பகலில் வீசியது பொது மனித சமுகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அனுமன் சேனாவை சேர்ந்த சக்திவேல் தன்னை தீவிரவாதிகள் கடத்தி விட்டார்கள் என்று போலியாக நாடக மாடி பொது சமுகத்தின் அமைதியை சீர்குலைத்து மத மோதல்களை ஏற்ப்படுத்த முயற்சி செய்தது , அதன் தொடர்ச்சியாக செல்வபுரம் பகுதியில் ஒரு வியாபாரியின் வீட்டில் விஷ்வ ஹிந்து பரிசத்தை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டை வீசியதும், வட வள்ளியைச் சார்ந்த ராமநாதன்(மண்டல பாரதிய ஜனதா செயலாளர்)தன்னுடைய வீட்டில் தானாகவே பெட்ரோல் குண்டை வீசி விட்டு மதகலவரத்தை ஏற்ப்படுத்த முயற்சித்ததும், தொடந்து சங்பரிவார கும்பலின் வாடிக்கையாகிவிட்டது. இவர்களின் ஒவ்வொரு விசயத்திலும் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகள் பிஜேபி யும் சங்கப்பரிவார கும்பலை சார்ந்தவர்கள் என்றும் பொது சமுகத்திற்கு அடையாளம் காட்டியது .
எனவே தமிழக அரசு இந்த சுயநலவாதிகளையும், மாதவாத கும்பலையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் , கடுமையான(குண்டர்)சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிணத்துக்கடவு தொகுதி செயலாளர் குமாரசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலவைர் சிவகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார். கிணத்துக்கடவு தொகுதி துணைத் தலைவர் தளபதி கிருஷ்ணன் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், எஸ்.டி.டி.யூ மாவட்ட தலைவர் அன்சர் செரிப், மாவட்ட செயலாளர் கிஸ்மி அலி மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகளும் ,செயல் வீரர்களும், திரளாக பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை, அக்டோபர் 17: முத்துப்பேட்டை PKT ரோடு ஓடக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் செல்லும் பகுதி அருகில் குழி வெட்டப்பட்டு அதனை முழுமையாக பணியை முடிக்காமல் மெத்தனபோக்கை கையாளும் முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அந்த பகுதி வார்டு மெம்பர் இவற்றை உடனே சரிசெய்தி மக்கள் நடமாடும் இடத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் பேன கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பள்ளத்தை உடனே மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவாறு இருப்பதனால் தான் பல்வேறு விபத்துகள் மற்றும் இரவில் பயணம் செய்பவர்கள் இந்த குழிக்குள் விழ வாயிப்புகள் உள்ளன.
நமது நிருபர்
AKLT. அப்துல் ரஹ்மான்