முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அருகே திருமண ஆசைக்காட்டி பிளஸ்–2 மாணவி கற்பழிப்பு: வாலிபர் மீது போலீசில் புகார்

முத்துப்பேட்டை, செப். 28–
முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை அங்காளம்மள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் ரம்யா (வயது 19). இவர் இதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மகன் சுகுமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் சுகுமார் ரம்யாவை திருமணம் செய்வதாக ஆசை காட்டி அவரை கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் சுகுமார் ரம்யாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இனியும் தாமதித்தால் அவமானப்பட நேரிடும் என்பதை அறிந்த ரம்யா தன்னை சுகுமார் ஏமாற்றி கற்பழித்து விட்டது பற்றி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுகுமாரை தேடிவருகின்றனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)