முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை: PFI வின் மாநில செயற்குழு உறுப்பினரை கைது செய்ய முயற்சி, இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு:








முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: முத்துப்பேட்டையில் PFI வின் மாநில செயற்குழு உறுப்பினரை  போலீசார் கைது செய்ய முயன்றதால் 100 க்கும் மேற்பட்ட மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முத்துப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகை அன்று பாரதிய ஜனதா கட்சி, SDPI கட்சி சார்பில் தனித்தனியாக நடைபெற்ற பேரணியால் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் முருகானந்தம் உட்பட 50  மீதும், PFI வின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் தலைமையில் 150 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இருதரப்பிலும் 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ளவர்கள் தலைமறைவாகி முன்ஜாமினுக்கு சென்னை ஐகோர்டில் தாக்கல் செய்திருந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அபூபக்கர் சித்திக், சேக் முஹைதீன், மாலிக், சர்தார்,  முன்ஜாமீன் கிடைத்தது. இவர்கள் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜராக தயார் நிலையில் இருந்தனர். இதனால் அபூபக்கர் சித்திக்கை கைது செய்ய முத்துப்பேட்டை ஒ,பி,எம், தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன், முத்துப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் பால்ராஜ், இளங்கோ மற்றும் போலீசார் சென்று அபூபக்கர் சித்திக்கை காவல்நிலையம்  அழைத்தனர். இதனால் போலீசாருக்கும் அபூபக்கர் சித்திக்குக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இது  பற்றி தகவல் அறிந்ததும் SDPI கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமானதால் அங்கிருந்து போலீசார் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து  A. அபூபக்கர் சித்திக் கூறுகையில் திட்டமிட்டு பிரச்சனையை தூண்டி எங்களை பலிகடவாக்க நினைக்கிறது என்றும், இந்த வழக்கில் பாஜக பிரமுகரும் தான் உள்ளார் என்றும்  தெரிவித்தார்.

நமது நிருபர்:  

O.M. சுபைத் கான். BE

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள் H. ஹமீது சுல்தான் அழைப்பு..


முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: முத்துப்பேட்டையில் உள்ள  அனைத்து சகோதரர்களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 துல்கஃதா  பிறை 1, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 08-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:00 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் நாச்சிக்குளம் லெப்பை தெரு மணமகள் இல்லத்தில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 
  
இப்படிக்கு: 

S/O: ஹுமாயுன் கபீர் 
0091 - 90439 40334...

குறிப்பு:

 காலை 9 மணியளவில் I.O.B. பேங்க் அருகில் வேன் புறப்படும்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)