முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி- பா.ஜ.க. வினர் கைது



முத்துப்பேட்டை, ஜூலை 22: பா.ஜ.க. வின் மாநில பொதுச் செயலாளர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் என்பவர் கடந்த வெள்ளியன்று அவரின் அலுவலகத்திற்கு வெளியே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இந்த படுகொலையை கண்டித்து முத்துப்பேட்டையில் பா.ஜ.க. வினர் பஸ் றியலில் ஈடுபட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர்.  மனித சமூகத்தில் மனிதர்களின் உயிர் பலியிடப்படுவதை எந்த ஒரு மனித சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. இந்த கொலையை காட்டி இஸ்லாமியர்கள் மீது வீன் பலி போட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும். 

ஆடிட்டர் ரமேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருவதாக கூறப்படுகிறது. இப்படுகொலையின் பின்னணியில் தொழில் போட்டிகள் ஏதும் உள்ளனவா என விசாரிக்கப்பட வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுருக்கும் நிலையில் சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் இக்கொலையை "ஜிஹாதிகள்" தான் செய்தார்கள் என கற்பனையான ஒரு கருத்தை கூறி இரு சமுதாய மக்களிடையே மத மோதலை தூண்ட முயற்சி செய்து வருகிறார்கள். 

மேலும் ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து சேலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் மகளிரணி தலைவி ராஜ ராஜேஸ்வரி என்பவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையின் பின்னணியும், ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கும் நேரடி தொடர்புகள் உள்ளனவா என்று எண்ண தோன்றுகிறது. இந்த கொலைக்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருப்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. ஏனெனில் குஜராத்தில் பல்லாயிரக்கனக்கான மனித உயிர்கள் மிக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்டு நரபளியாக்கப்பட்டது இந்த மோடியின் ஆட்சியில் தான்.

எதுவாயினும் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாமியர்களின் கருத்தாகும். ஆனால் வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் மீது பலி போடுவதை R.S.S., பா.ஜ.க., இந்து முன்னணி போன்ற மதவாத சக்திகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு:

ஜே. ஷேக் பரீத்

தமிழகத்தில் SDPI கட்சியை கண்டு பயந்து நடுங்கும் பா.ஜ.க.


தமிழகம், ஜூலை 22: சமீபகாலமாக தமிழகத்தில் மீண்டும் காலூன்ற மதவாத கட்சியான பாரதீய ஜனதாகட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கட்சி தாங்கள் தான் எனவும்,நரேந்திர மோடிக்கு தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என கூறிக் கொண்டு கூட்டங்கள் போடுவதும்,இந்துத்வா தலைவர்களுக்கு ஏற்படும் சொந்தப் பிரச்சனைகளை மத ரீதியாக திசை திருப்புவதும் தொடர் கதையாகி போனது.  இவர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் காவல்துறையும் அப்பாவி பொதுஜனங்கள் மீது வழக்கு போடுவதும் பிறகு நீதிமன்றம் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மோடி வேண்டுமானால் பாஜகவுக்கு தலைவராக இருக்கலாம்.இந்தியாவுக்கு அவர் தலைவரில்லை. அவரை விட சிறப்பான ஏன் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியான தலைவர்கள் நமது தமிழகத்தில் உண்டு.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பதில் சொல்ல பலமுறை தயங்கும் மோடியை, முன்னுக்கு பின் முரணாக பேட்டி கொடுக்கும் மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது என்ற செய்தி இந்துத்வா வாதிகள் மூலம் கசிவதை பார்த்தால் அக்கட்சியில் பிரதமர் வேட்பாளருக்கு வேறு ஆள் இல்லாதாதால் மோடியை வேறு வழியின்றி தேர்ந் தெடுத்திருப்பார்களோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேரு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த வேளையில் எஸ்.டி.பி.ஐ கட்சியும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மதச்சார்பற்ற இந்திய தேசத்தை மதவெறி கொண்டு பிளப்பதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே இந்து மகாசபையும், முஸ்லீம் லீக்கும் செய்த தவறை இனி இந்த தேசத்தில் அனுமதிக்க முடியாது.

ஆனால் பாஜக வின் செயல்பாடுகள் பிரிவினையை ஆதரிப்பதாக உள்ளது.

வேறு எந்த கட்சிகளும் செய்யத்துணியாத காரியத்தை பாஜக செய்ய துணிகிறது. ஆகவே எஸ்.டி.பி.ஐ கட்சி இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதனை பொறுக்க முடியாமல் பாஜக மறைமுகமாக இந்து முண்ணனியினரை தூண்டி விட்டு எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு எதிராக நெல்லையில் புகார் செய்துள்ளது.  அந்த புகார் என்னவெனில் வருங்கால பிரதமர் மோடியினை எஸ்.டி.பி.ஐ கட்சி அவதூராக பிரச்சாரம் செய்வதாக புகார்.

இந்த கேடு கெட்ட புகாரையும் வாங்கி கொண்டு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜகவின் மோடியை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் விமர்சித்தார்கள் என்று பாஜக காரன் புகார் கொடுத்தால் கூட ஒரு வழியில் பார்த்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் இந்து முண்ணனி மூலம் புகார் கொடுத்து, அதன் மூலம் மோடிக்கு அனுதாபத்தை பெற்றுக்கொள்ள பாஜக முயல்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகள் காட்டுகிரது என்றே கருதுகிறேன்.

எது எப்படியோ காங்கிரஸ் கட்சி பாஜக வை கண்டு பயப்படுவதை போல், பாஜக எஸ்.டி.பி.ஐ கட்சியினை கண்டு பயப்படுகிறது என்பதே உண்மை, மடியினில் கணம் இல்லையெனில் அரசியல் வழியில் பாஜகவுக்கு பயம் எதுக்கு.

நன்றி 


மாநில செய்தி தொடர்பாளர், BSI. கனி 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)