முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லீம்கள் மீது பழி போடுவதை ஆர்.எஸ்.எஸ்.நிறுத்திக் கொள்ள வேண்டும் !!!

கடந்த வாரம் வேலூரில் ஆர்.எஸ்.எஸ்.மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் படுகொலையைத் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 90 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளதற்கான புள்ளி விவரங்களை காவல்துறை வைத்துள்ளது.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் படுகொலையின் பின்னணியில் முஸ்லிம் அமைப்பினரே இருப்பதாக ரமகோபாலன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் வெள்ளையப்பனின் படுகொலையிலும் அது பிரதிபலித்துள்ளது. கடந்த சில நாட்களாக 'லவ் ஜிஹாத்' திற்கு எதிராக வெள்ளையப்பனின் கடும் எச்சரிக்கையே அவரின் படுகொலைக்குக் காரணம் என்று முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஆனால் வேறு கோணங்களில் ஏன் இவர்கள் சிந்திப்பதில்லை என்று தெரியவில்லை. இந்து முன்னணியினருக்கு வேறு எதிரிகளே இல்லையா? அவர்களும் மனிதர்கள் தானே.! வட்டி, சொத்துப் பிரச்சனை, இன்னபிற தொடர்புகளில் எதிரிகள் எல்லோருக்கும் உண்டு.

ஆனால் மதப் பிரச்சனைதான் ஒரு மதம் சார்ந்த அமைப்பினரின் மரணத்திற்கு காரணம் என்று கூறுவதை முதலில் தவிற்க வேண்டும். எதிரிகளை அருகில் வைத்துக் கொண்டு எங்கேயோ தேடுவதுதான் தற்போதைய பல இழப்புகளுக்குக் காரணம். இது இந்து அமைப்பினர் என்று இல்லை. எல்லா அமைப்பினருக்கும் இது பொருந்தும்.

இந்தியா, ஜூலை 12: எதிரி இவனாகத்தான் இருக்கக் கூடும் என்று தன் பார்வை வேறொரு புறம் இருக்க உண்மையான எதிரி இதை சாதகமாகப் பயன் படுத்தி வெற்றி பெற்றுவிடுகிறான். இதை ஏன் நம் மக்கள் உணர்வதில்லை?

முஸ்லிம்களை சினிமா உள்ளிட்ட மீடியாக்கள் ஒட்டுமொத்தமாக தீவிரவாதியாக குத்தகை எடுத்துள்ளது அதைவிட கொடுமை.

இந்தியாவின் பெருந்தலைவர்களை கொன்றவர்கள் லிஸ்டில் எந்த முஸ்லிமும் இல்லை. காந்தி முதற்கொண்டு ராஜீவ் காந்தி கொல்லப் பட்டது வரையிலான வரலாற்றில் முஸ்லிம் அல்லாதவர்களே கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

தற்போது எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் அதில் முஸ்லிம்களை சம்மந்தப் படுத்தி திசை

திருப்புவதை அரசு முதற்கொண்டு செய்து வருகிறது.

ஏறகனவே பல ரூபங்களில் பழியை தாங்கி நிற்கும் முஸ்லிம்கள். தன் மீதுதான் பழி வரும் என்று அறிந்தும் இதுபோன்ற காரியங்களில் இறங்குவார்களா? என்ற நுண் அறிவுகூட இல்லாத அரசும் அதிகாரிகளும் இருக்கும் வரை இழப்புக்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும்.

கல்வியிலும் ஜாதியிலும் மேலோங்கி நிற்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கவாதிகளுக்குமா இது புரியவில்லை?

முஸ்லிம்கள் மீது பழி போடுவதை முதலில் நிறுத்திவிட்டு உண்மையான குற்றவாளியை கண்டுபிடுக்க முனைப்புடன் களமிறங்க வேண்டியது அரசின் கடமை. பொதுமக்களும் இதில் அரசுக்கு உதவ வேண்டும். ஆர்.எஸ்.எஸும் இதற்கு விதிவிலக்கல்ல.


 தொகுப்பு:ஜே :ஷேக் பரீத் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)