முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பூரண குணமடைய பிரார்த்திப்போம்...


முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை ORG என்ற இணையத்தளத்தின் நிருபரும், சிறந்த சமூக சேவகருமான சகோதரர் அபு ஆஃப்ரீன் என்கிற ரஃபீக் ஜக்கரியா அவர்கள் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சகோதரர் அபு ஆஃப்ரீன் அவர்களுக்கு விரைவில் பூரண குணமடைய வல்ல இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போம்.

இப்படிக்கு:

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.

நூர் பள்ளிவாசல் அருகில் உள்ள காடுகளை அப்புறப்படுத்திய அப்பகுதி கவுன்சிலர்


முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை கல்கெனி தெரு நூர் பள்ளிவாசல் அருகில் கருவைக்காடுகள் நிறைந்து காணப்பட்டன.மேலும் இரயில்வே தண்டவாளம் அருகில் குப்பை கூளமாக காட்சியளித்தது. மேலும் இன்னும் சில நாட்களில் ரமலான் மாதம் துவங்க இருப்பதால் பள்ளிவாசலுக்கு வரும் மக்களுக்கு சிரமமாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்ற முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் துப்புறவு பணியாளர்களை கொண்டு அப்பகுதிகளில் உள்ள கருவைக்காடுகளை அகற்றி, குப்பைக் கூளங்களை சுத்தம் செய்தனர். மேலும் ரமலான் மாதம் முழுவதும் இந்த பகுதியை தினமும் சுத்தம் செய்யப்பட்டு பிளிச்சிங் பவுடர் அடிக்கப்படும் என்றார். அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் செய்புநிஷா பகுருதீன். 

முத்துப்பேட்டை நகரில் காசுக்காக உலா வந்த யானை...



முத்துப்பேட்டை, ஜூலை 08: யானையின் பலம் யானைக்கே தெரியாதாம் ஆனால் யானையின் உருவத்தை கண்டு அஞ்சாதவர்கள் யாருமில்லை. எனினும் நமது அருகாமையில் உள்ள நாடான இலங்கையில்  யானைக்கு என தனியாக ஆசிரமம் வைத்து அவற்றை பாதுகாத்தும், கெளரவ படுத்தியும் வருகிறார்கள். 

நமது நாட்டில் மிருகவதை சட்டம் அமல் படுத்தப்பட்ட நிலையில் நமதூர் முத்துப்பேட்டையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக வந்த தனியாருக்கு சொந்தமான யானையை வைத்து முத்துப்பேட்டை நகரில் வியாபாரிகளிடமும், பொது மக்களிடம் காசுகளை பெற்றுக்கொண்டு தெருக்களில் உலா வந்தது. இப்படி காசுக்காக ஒரு உயிரினத்தை பிச்சை எடுக்க வைக்கும் யானை பாகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வாளர்கள் கூறினார்கள்.

தொகுப்பு:

J. பரக்கத்து நிஷா 

முத்துப்பேட்டையில் இளம் பெண்ணை கிண்டல் செய்த 2 வாலிபர் கைது!


முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை செம்படவான்காடு பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் மகள் பாகாம்பிரியாள் (20) இவர் தஞ்சாவூர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குளிப்பதற்காக அருகே உள்ள குளத்திற்கு சென்றபோது  6 இளைஞர்கள் பாகாம்பிரியாளை கிண்டல் செய்துள்ளனர்.

உடனே பாகாம்பிரியாள் இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பாகாம்பிரியாளை  தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பாகாம்பிரியாள் கொடுத்த புகர் அடிப்படையில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மிச்வர்கான் (18), எர்சாத் அஹ்மத் (18)  இருவரையும் கைது செய்து மேலும் இதில் சம்பந்தப்பட்டுள்ள 4 இளைஞர்களையும் பொலிசார் தேடிவருகின்றனர். 

தொகுப்பு:

J. பரக்கத்து நிஷா 

விடுதலை சிறுத்தை பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!!! முத்துப்பேட்டையில் பரபரப்பு!!!





முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவான் ஓடையை சேர்ந்தவர் வெற்றி (35). இவர் திருவாரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டைக்கு பொருட்கள் வாங்க வந்தார். பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென வெற்றி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். 


அந்த சமயத்தில் காரில் இருந்து இறங்கிய 7 பேர் கும்பல் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வெற்றியை அரிவாளால் சரமாரி வெட்டியது. இதில் அவரது இடதுகை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. குற்ற வாளிகளை கைது செய்ய்க்ககோரி விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் 50 க்கும் மேற்பட்டோர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்கு  வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.



தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)