முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் காதல் தம்பதிகள் ஓட்டம்.!!! கைது செய்த காவல்துறை.



முத்துப்பேட்டை, ஏப்ரல் 21:  முத்துப்பேட்டை டவுன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (53). இவரது மகள் தஸ்மிஷ்ஷா (17). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அலாவுதீன் (24). இவர் வெளிநாடு சென்று விட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தஸ்மிஷ்ஷா கல்லூரிக்கு செல்லும்போது அலாவுதீனுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 17- ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற தஸ்மிஷ்ஷா வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அப்துல் லத்தீப் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை எங்கள் தெருவை சேர்ந்த அலாவுதீன் கடத்திவிட்டார். எனது மகளை கண்டுபிடித்து தரவேண்டும். அலாவுதீன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மதுக்கூரில் உள்ள உறவினர் வீட்டில் அலாவுதீனும், தஸ்மிஷ்ஷாவும் தங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று இருவரையும் மீட்டு முத்துப்பேட்டைக்கு அழைத்து வந்தனர். தஸ்மிஷ்ஷா மைனர் பெண் என்பதால் அவரை விடுவித்தனர். அலாவுதீனை போலீசார் கைது செய்து முத்துப்பேட்டை சிறையில் அடைத்தனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)