முத்துப்பேட்டை, மார்ச் 23: முத்துப்பேட்டையில் உள்ள ஜனாப். P.M. கமால் நாசர் அவர்களின் மகன் ஜனாப். சதாம் ஹுசைன் அவர்கள் கடந்த சில வருடமாக டாக்டர். பட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று புதிய மருத்துவராக முத்துப்பேட்டைக்கு விரைவில் வர உள்ளார். இவரின் வாழ்க்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முத்துப்பேட்டையில் உள்ள மாணவர்கள் இவரைப் போன்று மருத்துவத்தில் மற்றும் அனைத்து துறைகளிலும் முதன்மை நிலையை அடைய பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். உங்களின் முயற்சிக்கு நாங்கள் உதவி புரியவும் தயாராக இருக்கிறோம் என்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொகுப்பு:
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்