முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தமிழகத்தில் தொடர்ந்து வரும் முஸ்லிம்களின் ஒற்றுமையும், ஆர்பாட்டத்தின் பிரதிபளிப்பும்..




இராமநாதபுரம், செப்டம்பர் 26 :  இராமநாதபுரம் நகரில் இன்று தமுமுக, எஸ்.டி.பி.ஐ, ஐ.என்.டி.ஜே , சுன்னத் ஜமாத்தார்கள் , அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாத்தினர்கள். இதர இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் இனைந்த இராமநாதபுரம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான  முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும் அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும் தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இராமநாதபுரம் நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக பழமையானதும் , முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு ஆலிம் கிராஅத் ஓத அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளரும் கொல்லம்பட்டறை தெரு ஜமாத் நிர்வாகியுமான ஜனாப் முத்தலிப் அவர்கள் துவக்கி வைத்தார்கள். பேரணியை வழி நடத்தும் விதமாக அனைத்து இயக்கத்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , மாவட்டத்தின் அனைத்து ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒஞ்கி ஒலித்து வந்தார்கள்.

அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், «لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين உங்கள் குடும்பத்தினரைவிட உங்கள் செல்வத்தைவிட உங்களுக்கு விருப்பமானவர்களைவிட என்னை அதிகமாக நேசிக்காதவரை நீங்கள் ஒருவரும் மூஃமின்கள் ஆகமாட்டீர்கள் (அறிவிப்பாளர் ; அனஸ்(ரலி), நு£ல் ; புஹாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழிக்கினங்க மாவட்டமெங்கிலும் இருந்து இசுலாமிய வீர இளைஞர்கள் ஆர்ப்பரித்து வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி சின்க்கடை வீதியெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு படுத்தியதை கண்டித்தும் மாநபியின் வீர வேங்கைகள் கோசம் எழுப்பி பேரணியாக தெருவெங்கும் நடந்து வந்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் காணத சரித்திர சம்பவம். இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து இசுலாமிய வியாபார நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. பொங்கி எழுந்த வீர இசுலாமியர்களின் ஆர்பரிப்பில் இராமநாதபுரம் தினறியது. தப்புக்கணக்கு போட்டு வாகனங்களில் வந்து முஸ்லிம்களை பீதியடைய செய்யலாம் என்று திறலாக குவிக்கப்பட்டிருந்த காவல்துறை எம் மாவட்ட இசுலாமிய வீரவேங்கைகளின் ஆக்ரோசத்தில் பின்வாங்கியது.

பேரணியி்ன் பின்னர் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்த்தில் முதலாவதாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் முகவை அப்துல் ஜமீல் வீர உரையுடன் துவக்கினார் பின்னர் த.மு.மு.க வின் பேச்சாளர் ஜனாப் கோவை செய்யது அவர்கள் ஆக்ரோசத்துடன் கண்டன உரை நிகழ்த்தினர் அதன் பின்னர் உரையாற்ற வந்த முகவையின் மைந்தன் இந்திய தவ்ஹித் ஜமாத்தின் எஸ்.எம். பாக்கர் அவர்கள் தனது சிம்மக் குரலில் கண்டனத்தை பதிவு செய்தார்கள் , நிகழ்சியின் இறுதியில் த.மு.மு.க வின் சகோ. அன்வர் அவர்கள் நன்றியுரை கூற கண்டன பொதுக்கூட்டம் இனிதே முடிந்தது.நிகழ்ச்சிகளை அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் ஜனாப் முத்தலிப் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

முகவை மாநகர சரித்திரத்தில் திரன்டிராத கூட்டமிது. காவல்துறையும் உளவுத்துறை உட்பட ஏனைய அனைத்து மக்களும் திரன்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஓழுக்கமான கூடலை பார்த்து ஆச்சர்யத்தில் வியந்தனர். கூட்டத்தில் சிறப்பம்சமாக பெண்கள் வரவேண்டாம் என கூறியும் பெரியபட்டினம் என்ற இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பென்கள் வாகனங்களில் வந்து மேடையின் பின்புறம் அமர்ந்திருந்தது வியப்பாக இருந்தது. நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்த்தில் பங்கெடுத்து அன்னல் நபிகளுக்கெதிரான அநீதிக்கு கண்டன் தெறிவித்தவர்களாக சரித்திரத்தில் தங்களை இம்மக்கள் பதிவு செய்து கொண்டனர்.

 source from: www.muthupettaiexpress.com
நன்றி - செங்கிஸ்கான் ஆன்லைன்  

முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாத 3 பிள்ளையார் சிலையை போலீசார் கைப்பற்றினர்.







முத்துப்பேட்டை, செப்டம்பர் 26 : முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் என்றாலே தமிழகம் முழுவதும் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஊர்வலத்தில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் பலவிதமான பல அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வாகனகளுடன் 16 விநாயகர் சிலை மற்றும் நூற்றுக் கணக்கான கிராமத்தினருடன் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவோனோடை வடகாடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை நகர் வழியாக பாமணி ஆற்றில் கரைக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டில் 20 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் வருகிற 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக நூற்றுக் கணக்கான போலீசார் ரகசிய போலீசார் என முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முத்துப்பேட்டை நகர் எந்த நேரமும் பொலிசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்துக்கான பேட்டை சிவன் கோவில் ஆஸ்பத்திரி தெரு துரெளபதி அம்மன் கோவில், மங்களூர் மாரியம்மன் கோவில் என மூன்று இடங்களில் புதிதாக விநாயகர் சிலை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மூன்று இடங்களுக்கு முறையான அனுமதி பெற வில்லை என்றும், வழக்கம்போல் உள்ள 16 சிலைக்குமே முறையான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறை திருவாரூர் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், முத்துப்பேட்டை டி.எஸ்.பி. பாஸ்கர் ஆகியோர் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் படி முத்துப்பேட்டை இன்ஸ் பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் மேற்படி முற்று சிலைகளையும் (கைது) அதிரடியாக பறிமுதல் செய்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட விநாயகர் சிலை ஊர்வல கமிட்டினரும், அந்த பகுதி மக்களும் பெரும் அதிர்ப்த்தி அடைந்து உள்ளனர். மேலும் இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பும் பதட்டமும் அப்பகுதியில் நிலவி உள்ளது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் விநாயகர் ஊர்வலம் நடக்குமா? அல்லது தள்ளி போகுமா? என்ற கேள்விக்குறியில் முத்துப்பேட்டை உள்ளது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)