முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 28 : முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அதிகமான கருவை காடுகள் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் நடமாட அச்சம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியிலிருந்து ரோட்டுக்கு வந்த நல்ல பாம்பு மற்றும் காட்டு விரியன் பாம்பும் அங்குள்ள குடியிருப்புக்குள் நுழைய முயன்றது. அப்போது இவற்றை கண்ட அப்பகுதி பொது மக்கள் சாமாத்தியமாக அப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனை பார்க்க அனைத்து மக்களும் காட்டு பகுதிக்கே சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கருத்தப்பா கூறியதாவது. இந்த பகுதியில் அதிக கொடிய விசமுள்ள பாம்புகள் இருப்பதால் இவற்றை பொது மக்களுக்கு இடையூர் இல்லாமல் ஏற்படுத்தும் பொருட்டு இவற்றை உடனே வனத்துறையினர் பிடித்து உரிய இடத்தில் விடவேண்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.com, www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை