முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 25 : PKT ரோடு மர்ஹும் நே.கா.மு. சேக் முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் லத்திப், மர்ஹும் மவுளா அபூபக்கர் ஆகியோரின் தம்பியும், H. முஹம்மது லத்திப் அவர்களின் தகப்பனாரும், ஜெஹபருதீன் அவர்களின் மாமனாருமாகிய நே.கா.மு. ஆசிரியர் அலிகுள் ஜமால் அவர்கள் இன்று பகல் 2 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்) நாளை காலை 10 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்.
H. முஹம்மது லத்திப்
நமது நிருபர்
K.M. காதர் கனி (பாடகர்)
முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 25 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இச்சங்கத்தின் தலைவர் ஜனாப். ஜஹபர் உசேன் அவர்களின் இல்லத்தில் நேற்று அஷர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. மேலும் முத்துப்பேட்டை பிரதிநிதி கா.மு நெய்னார் முஹம்மது அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் ஃபித்ரா அரிசி விநியோகம் மற்றும் உதவித்தொகை பெர கடிதம் எழுதி அனுப்பிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் விரைவில் உதவித்தொகைகள் வழங்கப்படும் என்றும் அப்போது முடிவெடுக்கப்பட்டது. மேலும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் கல்வி குறித்து மாபெரும் விழிப்புணர்வு மாநாடு விரைவில் நடத்த உள்ளதாக அப்போது முடிவெடுக்கப்பட்டது. இந்த மாநாடு குறித்த செய்தி மேலும் ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தான் வெளியிடப்படும் என்றும் இச்சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்