முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20 : அசாமில் பாதிக்கப்பட்ட நமது முஸ்லிம் சமுதாய மக்களை கொன்று குவித்து வரும் புத்த மத வெறியர்களுக்கு அல்லாஹ் விரைவில் ஹிதாயத் கொடுக்க இந்த இனிய நாளில் நாம் துவா செய்வோம். இந்த முஸ்லிம் சமுதாய மக்களின் அழிவை பார்த்து எத்துணையோ மனித உரிமை ஆணையம் வாய் பொத்தி மவுனம் சாதித்து வருகிறது. இந்த மக்களுக்கு உதவிகள் செய்யும் பொருட்டு இன்று நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நமது சமுதாய மக்களிடம் நிதிகளை திரட்டி வருகிறது. இதன் அடிப்படையில் இன்று முத்துப்பேட்டையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகைக்கு பிறகு நிதிகளை மாநில உறுப்பினர் ஜனாப் A. அபூபக்கர் சித்திக் அவர்களின் தலைமையில் இன்று வசூல் செய்யப்பட்டது. உடன் திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
O.M. சுபைத் கான், AKL.அப்துல் ரஹ்மான்