முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

அசாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசூல் செய்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா...



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20 : அசாமில் பாதிக்கப்பட்ட நமது முஸ்லிம் சமுதாய மக்களை கொன்று குவித்து வரும் புத்த மத வெறியர்களுக்கு அல்லாஹ் விரைவில் ஹிதாயத் கொடுக்க இந்த இனிய நாளில் நாம் துவா செய்வோம். இந்த முஸ்லிம் சமுதாய மக்களின் அழிவை பார்த்து எத்துணையோ மனித உரிமை ஆணையம் வாய் பொத்தி மவுனம் சாதித்து வருகிறது. இந்த மக்களுக்கு உதவிகள் செய்யும் பொருட்டு இன்று நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நமது சமுதாய மக்களிடம் நிதிகளை திரட்டி வருகிறது. இதன் அடிப்படையில் இன்று முத்துப்பேட்டையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகைக்கு பிறகு நிதிகளை மாநில உறுப்பினர் ஜனாப் A. அபூபக்கர் சித்திக் அவர்களின் தலைமையில் இன்று வசூல் செய்யப்பட்டது. உடன் திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

O.M. சுபைத் கான், AKL.அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் குறித்த ஓர் பார்வை...














முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20 : முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினரும் ஒன்று சேர்ந்து அவரவர்களுக்கு தெரிந்ததை மிக சிறப்பான முறையில் பேனர்களை வைத்து குட்டியார் பள்ளி வாசல் மற்றும் ஆசாத் நகர் பள்ளி வாசலை சுற்றி அலங்கரித்துல்லானர். இது குறித்த ஓர் பார்வையாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
source from:www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டையில் கோலாகலமாக கொண்டாடப் பட்ட நோன்பு பெருநாள் ஓர் பார்வை.













முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20: முத்துப்பேட்டையில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை சரியாக 7.30 மணியளவில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுத்தெரு திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். தொழுகைக்கு பின்பு சிறப்பு பயனும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து குட்டியார் ஜும்மாஹ் பள்ளிவாசலில் சரியாக 9 மணியளவில் தொழுகை நடைபெற்றுது. இதனைத்தொடர்ந்து ஆசாத் நகர் ஜும்மாஹ் பள்ளி வாசாளில் தொழுகை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறப்பு பயானும் நடைபெற்றது. பயன் முடிந்த வுடன் ஒவ்வொரு சகோதரரும் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் புதுத்தெரு பள்ளிவாசல் மற்றும் மக்கா பள்ளி வாசலிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)