முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் பூட்டிய அறைக்குள் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் பயங்கர ரகளை.!!


முத்துப்பேட்டை, ஜூலை 30 : முத்துப்பேட்டை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் கோ. அருணாச்சலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலக மாடியில்தான் கதவுகள் திறந்த நிலையில் நடைபெறுவது வழக்கம், ஆனால் கூட்டம் துவங்குவதற்கு முன்பு கதவுகள் பூட்டப்பட்டு பூட்டிய அறைக்குள் துவங்கிய கூட்டம் சில மணி நேரத்தில் ஆ. ஊ.., என்றும் அய்யோ, அம்மா, என்றும் கடுமையான புரியாத வாக்குவாதமும் சேர்களை தூக்கி வீசியது, டேபிளை தட்டிய சத்தமும் நீண்ட தூரத்துக்கு கேட்டது. அதில் பழைய பேருந்து அருகில் என்பதால் பயணிகள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் சப்தத்தை நோக்கி ஓடினார்கள். பின்பு பூட்டிய அறைக்குள் அந்த சப்தம் வருவதால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், பயத்திலும், அதிர்ச்சியிலும் அலுவலகத்தை சூற்றி நின்று வேடிக்கைப் பார்த்தனர். முத்துப்பேட்டை அசம்பாவிதம் நிறைந்த ஊர் என்பதால் இவற்றை பெயந்து சில பேர் ஓட்டமும் பிடித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.

இது குறித்து 9 வது வார்டு கவுன்சிலர் பாவா பகுருதீன் கூறியதாவது:
இங்கு பிரச்சனை நடக்கபோகிறது என்று தெரிந்த செயல் அலுவலரும், ஏ.1.கிலார்டும், திருவாரூர் கூட்டத்திற்கு போறோம் என்று சொல்லிவிட்டு அவர்கள் ஒளிந்து விட்டனர். இதில் கணக்கு வழக்குகளை கேட்டால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணி இந்த நாடகத்தை நடத்தி தப்பித்துல்லார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து 13 வார்டு கவுன்சிலர் நாசர் கூறியதாவது:
எனது வார்டில் பைப்பு விரிவாக்கம் பணிகள் செய்து தருமாறு எனது தலைவரிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போது, 9 வது வார்டு கவுன்சிலர் பாவா பகுருதீன் குருக்கிட்டதால்தான் இந்த பிரச்சை அதிகமானது என்று அவர் தெரிவித்தார். மேலும் இதில் ரகளை ஏற்பட்டது உண்மைதான் என்றும், டேபில், சேர் உடைய வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால் பூட்டிய அறைக்குள் எதோ மர்மம் உள்ளதாக போது மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)