சென்னை,ஏப்ரல் 27 : கீழ்ப்பாக்கத்தில் பழமை வாய்ந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இதன் கீழ் பகுதியில் 10 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. முதல் மாடியில் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. முதல் மாடியிலுள ஒரு அறையில் தூத்துக்குடியை சேர்ந்த சத்யா, சுகந்தன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு அவர்கள் தங்கியிருந்த அறையில் நாட்டு வெடிகுண்டு திடீரென்று வெடித்துள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய வெடி குண்டால் சத்யா, சுகந்தன் ஆகியோரின் கைகள், விரல்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சத்தத்தை கேட்ட அருகிலிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த சத்யாவை சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், சுகந்தனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கவலைக்கிடமான நிலையில் இருக்கும் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சத்யா, சுகந்தன் இருவரும் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடிகள் என்றும், பல்வேறு கொலை வழக்குகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இவர்கள் எதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தார்கள் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ANSN .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா
முத்துப்பேட்டை,ஏப்ரல் 27 : முத்துப்பேட்டை வர்த்தகக் கழகத்தின் நிர்வாகிகளின் தேர்தல் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பரபரப்புடன் நடப்பது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த வருட தேர்தலுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலுக்கு அதிகாரியாக ஜனாப்.எம்.முஹம்மது அலியார் அவர்களை நியமனம் செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் இரா. இராஜாராமன், எம்.எஸ்.ராமலிங்கம், எஸ்.நெய்னா முஹம்மது, மு.முஹைதீன் பிச்சை, கெஜ்.எம்.ஹாஜா, கே.வி. கண்ணன், கே.மாரிமுத்து ஆகியோர் ஆணையரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பகல் 2 மணி அளவில் தேர்தல் ஆணையர் தலைமையில் முக்கிய நிர்வாகி முன்னணியில் மனுக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்று ஆணையர் முஹம்மது அலி தெரிவித்தார். இதில் தலைவராக இரா.இராஜாராம், துணைத் தலைவராக முஹைதீன் பிச்சை, கெச்.எம்.ஹாஜா, பொதுச் செயலாளராக எம்.எஸ். ராமலிங்கம், துணைச் செயலாளராக கே.வி.கண்ணன், கே.மாரிமுத்து, பொருளாளராக எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர். பின்னர் தேர்தல் ஆணையர் ஜனாப். முஹம்மது அலி சங்க ஆலோசகர்கள் இரா. திருஞானம், மெட்ரோ மாலிக் முன்னிலையில் சான்றிதழ் வழங்கினார். இந்த வர்த்தக கழகத் தேர்தல் முத்துபேட்டை நகர வியாபாரிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தெகுப்பு
ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்), AKL . அப்துல் ரஹ்மான்
முத்துப்பேட்டை,ஏப்ரல் 27 : P.K.T. ரோடு மர்ஹும் A.S.N. நெய்னா பிள்ளை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் A.S.N. நவாப் சேக் முஹம்மது மரைக்காயர், A.S.N. முஹம்மது இபுராஹீம் ஆகியோரின் சகோதரரும், கொய்யா S.M.K.N. அப்துல் ரஜாக், S.M.K.N. முஹம்மது தாவூது ஆகியோரின் மருமகனும், K.M.S. காதர் பாட்சா, A.S.N.M. பசீர் அஹமது, ஏலங்குடி A. அப்துல் ரஜாக், ஆகியோரின் மச்சானும், N.R. புர்கானுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி.A.S.N.S. ரபி அஹமது கான் அவர்கள் இன்று காலை 5.15 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
source from: www.muthupettaiexpress.com
அறிவிப்பவர்
A.S.N. ஹஜ் முஹம்மது இபுராஹீம்.
நமது நிருபர்
KM.காதர் கனி (பாடகர்)