முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தானில் இளம் பெண் கடத்தல்! பொது மக்கள் சாலைமறியல்!



முத்துப்பேட்டை, மார்ச் 19 : முத்துப்பேட்டை அடுத்து பெருகவாழ்ந்தான் காவல் சரகம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை அவர்களது மகள் மீனா (வயது 17) தனது உறவினருடன் தென்பரை கிராமத்துக்கு பஸ்ஸில் சென்றார். பின்னர் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்ற போது தல மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் தமிழ் நேசன் மற்றும் சிலர் காரில் மீனாவின் துணைக்கு வந்த பெண்ணை தாக்கிவிட்டு மீனாவை கடத்தி சென்று உள்ளனர். தகவல் அறிந்ததும் மீனாவின் தாய் செல்வி அண்ணாத்துரை பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் சென்ற மாதம் 19 ம் தேதி புகார் கொடுத்துள்ளார். முறையாக தகவல் இருக்கும் இடம் ஆகியவற்றை மீனாவின் உறவினர்கள் கூறியும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த புத்தகரம் கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருப்பதற்காக அறிவித்தனர். மேலும் இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதமும் எழுதி அனுப்பி உள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை, அதன் அடிப்படையில் திட்டமிட்டப்படி இன்று காலை காவல் நிலையம் முன்பு உண்ணா விரதம் இருப்பதற்காக புத்தகரம் கிராம மக்கள் சுமார் 300 பேர் ஊர்வலமாக நடந்து வந்தனர். அப்போது கடைதெருவிலிருந்து காவல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் குணா சேகரன் தலைமையில் போலீசார் போராட்டகாரவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டன. இதனால் பதட்டம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுபடுத்த முடியவில்லை. பின்னர் பொது மக்கள் காவல் நிலையம் முன்பு உண்ணாவிரதத்தை துவங்கினர். இதில் இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பால சுப்பிரமணியன், தி.மு.க. நிர்வாகிகள், கோவிந்தராஜ்,ராமசாமி, ராமநாதன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஐயம் பெருமாள், பலரும் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கோபி தலைமை போலீசார், போராட்ட குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அந்த பெண்ணை இன்னும் மூன்று நாளைக்குள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் போராட்ட குழுவினரும் கிராம மக்களும் உண்ணா விரதத்தை விளக்கி கொண்டனர் இதனால் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)