முத்துப்பேட்டை, மார்ச் 18 : முத்துப்பேட்டையில் கடந்த பல மாதங்களாக கேஸ் சிலிண்டர் விநியோகம் மிக தட்டுபாடாகவே இருந்து வந்தது. இது குறித்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களும் சம்மந்தப்பட்ட துறைக்கு பல முறை புகார் தெரிவித்தனர். இதனை கண்டு கொள்ளாத HP சிலிண்டர் நிர்வாகம் சுதந்திரமாக உலா வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்களும் மற்றும் சமுதாய இயக்கங்களை சார்ந்தவர்களும் போராடினார்கள். மேலும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு கடிதமும் எழுதி உள்ளனர். இதனை அறிந்த தஞ்சாவூர் ஆயில் துணை மேலாளர் திரு.ராஜேஷ் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் (TSO ) ஆகியோர் கொண்ட குழு அமைத்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஹோட்டல் மற்றும் சிறிய கடைகளிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன. சோதனையிட்ட எல்லா கடைகளிலும் அனுமதி இல்லாத காலி சிலிண்டர்கள் சுமார் 179 மற்றும் 5 முழு சிலிண்டரையும் கைப்பற்றினர். இதனை அறிந்த பொது மக்கள் சம்பவ இடத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பொது மக்கள் மற்றும் SDPI மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா மற்றும் பொருளாளர் நெய்னா முஹம்மது ஆகியோர் ஒன்று சேர்ந்து ஊரில் நடக்கும் அவலங்களை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் அனைவரிடமும் உள்ள குறைகளை பெற்று இதற்க்கு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எழுத்து மூலமாக எழுதியும் கொடுத்துள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அதிகாரிகள், இன்று நடைபெற்ற சோதனை யில் மொத்தம் 184 போலி சிலிண்டர்கள் இடைத்தரகர் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், இனிமேல் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாக சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நமதூர் கொய்யா மஹால் எதிரே உள்ள மரியா சிலிண்டர் நிறுவனம் அனுமதி இல்லாமல் நடத்தியது சோதனையின் போது தெரியவந்தது. அவற்றை உடனே அகற்ற அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்
K .எர்சாத் அஹமது, OM . சுபைத் கான்.
தஞ்சாவூர், மார்ச் 17 : காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதையை மாற்றும் பணிகள் இந்த மாதத்துக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கபடுவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை மாற்றப்பட உள்ளது. இதன் நீளம் 149 .42 கீ.மீ, ஆகும். இதே போல் திருவாரூர் அகஸ்தியப்பள்ளி இடையே உள்ள 36 .80 கீ.மீ தொலைவு மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற திட்டம் உள்ளது. இதன் மொத்த மதிப்பீடு 506 .76 கோடி. இந்த இருவழித் தடங்களில் 30 பெரிய பாலங்களும், 542 சிறு பாலங்களும் உள்ளன. இப்பணிகள் தொடங்க 12 தேதி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணிகள் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன. அதில் முதல் கட்ட மாக 73 கீ.மீ. தொலைவுள்ள காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதைப்பணியை 2014 செப்டம்பர் மாதத்திற்குள்ளும், அடுத்த கட்டமாக 49 கீ.மீ. தொலைவுள்ள பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அகல அகல ரயில் பாதைப்பணியை 2016 மார்ச் மாதத்துக்குள்ளும், 26 கீ.மீ. தொலைவுள்ள திருத்துறைப்பூண்டி - திருவாரூர் அகல ரயில் பாதைப்பணியை 2015 செப்டம்பர் மாதத்திற்க்குளும், ஆகிய அனைத்து பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
source from: www.mttexpress.com
நன்றி
தினமணி நாளிதழ்
முத்துப்பேட்டை, மார்ச் 17 : திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் அகல ரயில் பாதை அமைக்கக் கோரி பல முறை அரசுக்கு எடுத்துரைத்தும் செவி சாய்க்காததால் முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் MMJ . இவற்றை சரி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த MMJ வின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். SS .பாக்கர் அலி சாஹிப் அவர்கள், முத்துப்பேட்டை முதல் காரைக்குடி வரை உள்ள அகல ரயில் பாதை வழியை கண்டு கொள்ளாத அரசை கண்டித்தும், போராட்டத்தை தீவிர படுத்தும் பொருட்டு வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய மக்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக நாளை 18.03.2012 மாலை 4 மணியளவில் நமதூர் கொய்யா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்
OM . சுபைத் கான்
துபாய்,மார்ச் 17 : FIRST TECHNOLOGY என்ற பிரபல நிறுவனத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைபடுகிறது.
1 ) CIVIL ENGINEER (BE SIVIL) சம்பளம் திரகம் 3000 .
2 ) CIVIL FOREMEN DIP (CIVIL) சம்பளம் திரகம் 3000 .
3 ) TELECOM ENGINEER (BE , ECE ). சம்பளம் திரகம் 3000 .
4 ) TELECOME TECHNICIAN சம்பளம் திரகம் 3000. இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 18 .03 .2012 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. எனவே இந்த பணிகளில் சேர விற்பம் உள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு சென்னை யாசர்: 72005 00225 .
நமது நிருபர்
சென்னை யாசர்