முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் மேலும் ஓர் அதிசயம்.!! முயல் உருவ உருளைக்கிழங்கு..




முத்துப்பேட்டை, மார்ச் 01 : முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள திரு.செந்தில் குமார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு காய்கறிகள் வெளிஊரிலிருந்து வரவழைக்கப்பட்டு வியாபாரம் செய்பவர். நேற்று அவர் காய்கறி கடைக்கு வந்த உருளைக்கிழங்கு மூட்டையை பிரித்த போது அதில் ஒரு உருளைக்கிழங்கு மட்டும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டது. பிறகு அவற்றை பார்த்தபோது அசல் முயல் குட்டியைப்போல் உருவம் காணப்பட்டது. எனவே இதனை மக்கள் வேடிக்கையுடன் பார்த்து செல்கின்றனர்.
source from: www.muthupettaiexpress.com, www.mttexpress.com
தெகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை, ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் கேஸ் சப்ளை செய்வதில் குளறுபடி பொது மக்கள் ஆவேசம்.!!



முத்துப்பேட்டை, மார்ச் 01 : முத்துப்பேட்டையில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்களை திருத்துறைப்பூண்டியிலிருந்து இன்டன் கேஸ் சிலிண்டர்கள் மரியா கேஸ் நிறுவனம் சப்பளை செய்து வருகிறது. சமீப காலமாக கேஸ் சிலிண்டர்கள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் எப்பொழுதாவது லாரியில் வந்து சிலிண்டர்களை சப்பளை செய்யும் போது பல்வேறு குளறுபடிகள், இடைத்தரகர்கள் தொந்தரவு என மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. என்று புகாருக்கு மேல் புகார் எழுந்துள்ளது ஆனால் சப்ளை செய்யும் நேரங்களில் போலிஸ் பாதுகாப்பு போடுவது வழக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வழக்கம் போல் நேற்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் லாரியில் சிலிண்டர் விநியோகம் செய்தனர். அதில் மொத்தம் 290 சிலிண்டர் மட்டுமே கொண்டுவரப்பட்டன. ஆனால் நீண்ட வரிசையில் சுமார் 500 ௦௦க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அப்படி சப்பளை செய்யும் போது இடைத்தரகர்கள் கூடுதலாக சிலிண்டர்களை பெற்று சென்றதால் அப்போது மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. உடன் அப்பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் சிலிண்டர்கள் வந்த வண்டியை முற்றுகையிட்ட மக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகம் ஏற்பட்டு மறியலும் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)