முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

காய்தே மில்லத் அவர்களின் ஆவணப்படம் குறித்து ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேட்டி...








சென்னை, பிப்ரவரி 21 :1972 ல் இறந்து போன காய்தே மில்லத் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பிரபல சமூக ஆர்வலர் மற்றும் பிரபல எழுத்தாளர் அளூர் ஷாநவாஸ் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:

தமிழகத்தில் ஆவணப்படங்கள், குரும்படங்கள் என்கிற மாற்று ஊடகம் ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்னரே செயல்பட்டு வருகிறது. அண்ணல் காந்தியடிகளைப்பற்றி AK . செட்டியார் என்பவர் 1940 களிலேயே ஆவணப்படம் எடுத்துவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கிலடங்காத ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய விடுதலைக்காகப் போராடிய அனேக தலைவர்களைப்பற்றி ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன .பகத்சிங் முதல் பாரதியார் வரை பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு காட்சி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைவர்கள் மட்டுமல்லாது கலை இலக்கிய தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு ஆளுமைகளின் வரலாறும் ஆவணப்படமாக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் நாம் வாழும் காலத்திலேயே நம்மோடு வாழக்கூடிய எழுத்தாளர்கள் ஜெயகாந்தனைபற்றயும் இந்திரா பார்த்த சாரதியைப் பற்றியும் கூட ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நீண்ட நெரிய ஆவணப்பட வரலாற்றில் முஸ்லிம் அரசியல் தலைவர்களைப்பற்றியோ கலை இலக்கியத் தளத்தின் பங்களிப்பு செலுத்திய முஸ்லிம் ஆளுமைகளைப்பற்றியோ எந்த பதிவும் இல்லை. தமிழக அரசியல் வரலாற்றில் அதிர் வலைகளை ஏற்படுத்திய தந்தை பெரியாரைபற்றியும் தமிழக முதல்வராக இருந்து வரலாறு படைத்த காமராஜரைப் பற்றியும் திரைப்படமே எடுத்துவிட்டனர். இவர்களோடு சமகாலத்தில் அரசியல் நடத்திய கண்ணியத் தலைவர் காய்தே மில்லத் பற்றி ஒரு ஆவணப்படங்கூட இல்லாதது வேதனையாக இருக்கின்றது. இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் காட்சி வடிவில் ஒரு செய்தியை சொல்லுவதின் மூலம் ஏற்படக்கூடிய தாக்கம் அளவிட முடியாதது. காட்சி வடிவில் செய்யப்படும் ஓர் பதிவு மிக எளிதாகவும் விரைவாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து விடுகிறது. திரைப்படம் எடுக்கும் அளவிற்கு அந்த ஊடகத்தைப் பற்றிய புரிதலும் வலிமையையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதால் காய்தே மில்லத் பற்றிய காட்சி வடிவம் எந்த பதிவும் இல்லை. திரைப்படம் தான் எடுக்க முடியவில்லை, ஓர் ஆவணப்படமாவது எடுக்கலாமே என்கிற ஆவலில்தான் அந்த முயற்சியில் இறங்கி இன்று காய்தே மில்லத் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கி வெளியிடும் நிலைக்கு வந்திருக்கிறோம்.

காய்தே மில்லத் ஆவணப்படம் உருவாக்கத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன...?

காய்தே மில்லத் அவர்களைப்பற்றி ஆவணப்படம் உருவாக்க வேண்டும் என்கிற ஆவலைத்தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்ட ஓர் தலைவர் என்பதால் அவரைப்பற்றிய எந்த ஓர் காச்சிப்பதிவும் இல்லை. அவருடைய நன்குரிப்புகலையும், புகைப்படங்களையும் வைத்த்திருக்கும் அவரது வாரிசுகள் அவற்றை தந்து ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன் அதுவும் நடக்கவில்லை. இந்த! அந்தா! என்று இழுத்தடித்ததை தவிர ஒரு துண்டு காகிதத்தைகூட அவர்கள் தந்து உதவ வில்லை.படம்பிடிக்க வேண்டும் என்று இறங்கிய நானும், பட உருவாக்கத்திற்கு தேவையான பொருளாதார செலவுகளை ஏற்றுக்கொண்ட சமுதாய புரவலர் ஒருவரும் விரகத்தி அடைந்தது தான் மிச்சம். காய்தே மில்லத் அவர்களைப்பற்றி 2 , 3 புத்தகங்களும் ஒரு மலரும் தான் அவரைப்பற்றிய ஓர் வரலாற்றுப் பதிவாக எங்களிடம் இருக்கின்றது.அவற்றைக் கொண்டு என் கோணத்தில், என் பார்வை யில் இன்னொரு புத்தகம் எழுத முடிமே தவிர காட்சி வடிவில் அவரது வரலாற்றை பதிவு செய்ய நான் என்ன செய்வது.? காட்சி வடிவில் பதிவு செய்ய வேண்டுமானால் அவரது அசைவுகள் ஒவ்வொன்றும் காட்சி வடிவில் வேண்டும். அதற்க்கு புகைப்படங்கள் தான் பெரிதளவும் பயன்படும். புகைப்படங்களை வைத்திருக்கும் அவரது வாரிசுகள் அவற்றை தர மறுக்கும் போது அதை வைத்து படமெடுப்பது? ஆனாலும் தொய்வடையாமல் எப்படியாவது காய்தே மில்லத் அவர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்கிற உறுதியோடு மாற்று வழிகளை கையாண்டு ஆவணப்படத்தை எடுத்து முடித்துள்ளோம். காய்தே மில்லத்தின் அரசியல் அசைவுகளை ஓவியங்களாக வரைந்து படத்தில் காச்சிப்படுத்தி உள்ளோம். அவரோடு அரசியல் நடத்திய ஆளுமைகளை சந்தித்து உரையாடி அவர்களின் கருத்துக்களின் மூலம் காய்தே மில்லத்தை நினைவு கூர்ந்துள்ளோம்.

காய்தே மில்லத் வாரிசுகள் ஒத்துழைக்க மறுத்தாலும் காய்தே மில்லத் உருவாக்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கம் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.இன்ஷா அல்லாஹ் மிகப்பெரிய வெளியிட்டு விழாவை நடத்தவும் உலகம் முழுவதும் ஆவணப்படத்தை திரையிடவும் , அதனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுள்ளது.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS.அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

சவூதியில் பிரபல டூர்ஸ் & ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை..


சவூதி, பிப்ரவரி 20 : சவூதியில் பிரபல டூர்ஸ் & ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு, IATA TICKETING, STAFF, ACCOUNTANT, CLIENT ஆகிய பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. சம்பளம் சவூதி ரியால் 2000 - 2500 விருப்பம் உள்ளவர்கள் இதற்கான நேர்முகத் தேர்வு வருகிற பிப்ரவரி 22 சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் தொடர்புக்கு: சென்னை யாசர்: 72005 00225
source from: www.mttexpress.com , www.muthupettaiexpress.com
நமது நிருபர்

யாசர் சென்னை

சவூதியில் பொறியியல் படித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு...


சவூதி, பிப்ரவரி 20 : சவூதி அரேபியாவில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு கீழ்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. அதில் BE- ELECTRICAL, MECHANICAL, CIVIL ENGINEER இவைகளில் BE படித்தவர்கள் குறைந்தது மூன்று முதல் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். மாத சம்பளம் சவுதி ரியால், 42 ,000 முதல் 70 ,000 வரை தங்க இடம், உணவு முற்றிலும் இலவசம். இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 21 ,22 பிப்ரவரி சென்னையில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் தொடர்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: யாசர் சென்னை : 72005 00225.
source from www.mttexpress.com
நமது நிருபர்
யாசர் சென்னை

மவுத்து அறிவிப்பு: "ஆய்ஷா அம்மாள்"


முத்துப்பேட்டை, பிப்ரவரி 20 : PKT ரோடு மர்ஹும் அஹமது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் SK நெய்னார் முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹும் காய்கறி கடை SK . சுல்தான் மரைக்காயர் அவர்களின் சகோதரியும், மர்ஹும் M . முஹம்மது ஜலாலுதீன் அவர்களின் தாயாரும், H . காதர் முஹைதீன், H . சர்புதீன் ஆகியோரின் சகோதரியும், SK . முஹம்மது அமீன், M . நெய்னா முஹம்மது, P . அமானுல்லாஹ் ஆகியோரின் மாமியாரும், ராஜா என்கிற K . முஹம்மது ஜியாவுதீன், நிசார் அஹமது, மைநூர்தீன், முர்சித் ஆகியோரின் பாட்டியாரும், ஹபீப்கான் பிரதர்ஸ் அவர்களின் மாமயுமாகிய "ஆய்ஷா அம்மாள்" அவர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 .30 மணியளவில் குத்பா பள்ளி வாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்
H . காதர் முஹைதீன்

நமது நிருபர்

KM . காதர் கனி (பாடகர்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)