முத்துப்பேட்டை , பிப்ரவரி 04: முத்துப்பேட்டையில் கடந்த ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லாமல் பொது மக்கள் மிகவும் சிரமத்தில் இருந்து வந்தனர். அதன் அடிப்படையில் இன்று "HP GAS " நிறுவனத்தினர் மரைக்காயர் தெருவில் உள்ள குத்பா பள்ளி வாசல் திடலில் வந்து, முன் பதிவு செய்த கூப்பனுக்கு இன்று விநியோகம் செய்தனர். இதனால் பொது மக்கள் கூட்டம் அலைமோதியதால் பொலிசாரின் மேற்பார்வையில் விநியோகம் செய்யப்பட்டன.இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர், அனால் HP GAS நிறுவனத்தினர் வெறும் 280 சிலிண்டர் மட்டும் எடுத்து வந்தனர். இதனால் அதிக நேரம் வரிசையில் காத்து கிடந்த பொது மக்கள் வெறும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் HP GAS நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு இன்னும் 2 நாட்களுக்குள் மீண்டும் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்றும், அப்போது அவர் தெரிவித்தார். பொதுமக்கள் சிலிண்டரை பெறுவதற்கு தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
நமது நிருபர்
TR .அப்துல் ரஹ்மான்,