முத்துப்பேட்டை, ஜனவரி 26 : 63 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் காளி இரத்த வங்கி இணைத்து மாபெரும் இரத்த தான முகாமை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் கட்டிடத்தில் இன்று காலை நடத்தினார்கள்.இதற்க்கு TNTJ திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜனாப். M .I . இஸ்மத் பாட்சா அவர்கள் தலைமை வகித்தார். பின்பு Dr. சண்முக சுந்தரம் (காளி இரத்த வங்கி தஞ்சாவூர்), Dr . இளங்கோ MBBS .,MRSH ., (Lion) FCP , Dr . முருகேசன் MS . FAC ., Dr . மீரா உசேன் MD ., Dr .கணேஷ். MBBS ., Dr . அபுதாஹிர்.MBBS ., வழக்கறிஞர் G .உமர் கத்தாப்.MA .BL. ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த இரத்த தான முகாமில் சுமார் 40 பேர் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை கொடுத்தனர். இந்த இரத்ததானம் முகாம் முத்துப்பேட்டை II (ஆசாத் நகர் கிளை) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
TR .அப்துல் ரஹ்மான், K .எர்சாத் அஹமது,
முத்துப்பேட்டை, ஜனவரி 26 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி மற்றும் முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமிர்ற்கு முத்துப்பேட்டை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு வந்துள்ளது.நடந்து முடிந்த இலவச மருத்துவ முகாமின் சோதிக்கப்பட்ட மருத்துவத்தின் ரிசல்ட்டை இன்று வெளியிடப்பட்டது. அதில் சுமார் 250 நபர்களுக்கு தங்களுடைய பெயர் மற்றும் வீட்டு முகவரி மற்றும் இரத்த குறியிடு ஆகியவைகளை அடையாள அட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டு அவற்றை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதில் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் A .ஹாஜ நஜுபுதீன், சோழநாடு க.மு. நெய்னார் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது போன்ற நல்ல சேவைகளை செய்து வரும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி மென் மேலும் வளர இறைவனை துவா செய்கிறோம் என்று முத்துப்பேட்டை மக்கள் கூறினார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
TR .அப்துல் ரஹ்மான், K .எர்சாத் அஹமது