முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

அதிரையில் தீ விபத்து : மீட்பு பணியில் பாப்புலர் ப்ரண்ட்.







அதிரை, ஜனவரி 18 : அதிராம்பட்டினம் CMP லைன் VKM ஸ்டோர் அருகே உள்ள ஓர் வீட்டு மாடியில் உள்ள கூரை திடீரென தீப்பிடித்து முழுவதும் பரவியது. இது பற்றி தகவலரிந்த பொது மக்களும் அதிரை நகர பாப்புலர் பிரன்ட் செயல் வீரர்களும் விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்குமேல் போராடி தீயை அனைத்து, மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். பாப்புலர் பிரன்ட் செயல் வீரர்களின் பணியினை கண்ட அதிரை காவல் ஆய்வாளர் திரு. செங்கமலக்கண்ணன் அவர்கள் பாராட்டினார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவ்வூர் பொது மக்கள் அதிரையில் தீவிபத்து தொடர்வதும் நாங்கள் தீயை அணைத்த பிறகுதான் தீயணைப்பு துறையினர் வருகை தருகிறார்கள் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட எங்க ஊருக்கு உடனடியாக "தீயணைப்பு நிலையம்" அமைக்க வேண்டும் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தார்கள்.

நமது நிருபர்

ரிப்போர்ட்டர் K . எர்சாத் அஹமது

SDPI சார்பில் திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம்










திருவாரூர், ஜனவரி 18 : SDPI கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாரூர் ஹோட்டல் ராயல் பார்க்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்ட மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சத்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த சிகழ்ச்சியில் முல்லை பெரியார் பிரச்சனை சம்மந்தமாக மத்திய அரசு, தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும், உச்ச நீதி மன்ற ஆணையை கேரளா அரசு பின்பற்ற வேண்டும் என்றும்,விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்ட கமிட்டியிடம் தங்களால் இயன்ற உதவியை மாநில தலைமையிடம் செளுத்துப்படி மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சத்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு SDPI திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலைமை ஏற்றார். கட்சியின் பொது செயலாளர் ஜனாப். அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்ப்புரை ஏற்றார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் நகர நிர்காகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற SDPI கட்சியின் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

K . எர்சாத் அஹமது, MJ .சாதிக்

மவுத்து அறிவிப்பு: " நெய்னா மூசா"


முத்துப்பேட்டை, ஜனவரி 18 : தெற்குத்தெரு மர்ஹும். ஹமீது அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது அலியார் அவர்களின் மருமகனும், முஹைதீன் பக்கீர் அவர்களின் மச்சானும், முஹம்மது காசிம், அப்துல் மஜீத் இவர்களின் சகலையும்,மர்ஹும் காதர்சா,சேக் முஜுபூர் ரஹ்மான் ஆகோயோரின் மாமனாரும், சர்புதீன், காதர் முஹைதீன் இவர்களின் பெரிய மாமனாரும், சம்சுதீன் தாஜ்மஹால் அலி அக்பர் ஆகியோரின் பெரிய தகப்பனாரும் அப்துல் லத்திபீப்,ஹபீபுல்லா, கமால் பாட்சா ஆகியோரின் தகப்பனாருமாகிய " நெய்னா மூசா" அவர்கள் இன்று காலை 7 மணியளவில் மவுத்தாஹிவிட்டார்கள்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரி ஜனாஸா இன்று மாலை 4 .30 மணியளவில் அரபு சாகிப் பள்ளி கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்.
H . முஹம்மது காசிம்

நமது நிருபர்
K .M . காதர் கனி (பாடகர்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)