முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இனி கட்டுரைகள் எழுதமாட்டேன் - சுவாமி...


டெல்லி, ஜனவரி 16 : பத்திரிகை ஒன்றில், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை எழுதியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு இந்த மாதம் 30-ம் தேதி வரை, டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான சுவாமியின் கட்டுரை, மத துவேஷத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அதுதொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என்று கருதி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார் சுவாமி.எதிர்காலத்தில் இதுபோன்ற கட்டுரைகளை எழுத மாட்டேன் என சுப்ரமணியன் சுவாமி அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி மேதா உத்தரவிட்டார்.முன்ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுவாமியின் மனு மீதான விசாரணை நடந்தபோது, மதச்சார்பற்ற இந்த நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மதிக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து வெளியிட்டார்.பிரிட்டனைப் போல, இந்தியா ஐரோப்பிய நாடு அல்ல. இங்கு பல்வேறு வகையான கலாசாரங்கள் இருக்கின்றன. அதற்காகப் பெருமைப்பட வேண்டும் என்றார் நீதிபதி.நீங்கள் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் மேலும் கட்டுரைகள் எழுத மாட்டேன் என்று நீங்கள் உத்தரவாதம் அளித்தால், உங்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என்றார் நீதிபதி.முன்னதாக, சுவாமியின் வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி வாதிடும்போது, இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை முறைகேட்டை சுவாமி அம்பலப்படுத்தியதால்தான், அவரைத் துன்புறுத்தும் வகையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில்தான் சுவாமி கட்டுரை எழுதினார். அதன்பிறகு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் அலைக்கற்றை ஒதுக்கீட்டை அம்பலப்படுத்தியபிறகு திடீரென சுவாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் வழக்கறிஞர் துளசி குறிப்பிட்டார்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

எடையூர் பாலா

திருமணச்செய்தி: " A . மன்சூர் அஹமது, M . லத்திபா"






முத்துப்பேட்டை, ஜனவரி 16 : ஹிஜ்ரி 1433 ஸஃபர் பிறை 20 , 15 .01 .2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் 11 .30 மணியளவில் முத்துப்பேட்டை ஜனாப் U .அப்துல் சலாம் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் A .மன்சூர் அஹமது மணாளருக்கும், சென்னை ஆடிட்டர் மர்ஹும் ஹாஜி அவர்களின் பேத்தியும், ஜனாப் A .முஹம்மது மீரான் அவர்களின் புதல்வி தீன்குலச்செல்வி M .லத்திஃபா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 5 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை அரபு சாஹிப் பள்ளிவாசல் இமாம். சேக் மீரான் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். ("பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்")
மேலும் மாப்பிளைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி எண்: 95668 21026
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா, U .பத்ரு ஜமான். பேட்டை இமாம்.

முத்துப்பேட்டையில் மாணவர்களுக்காக நடைபெற்ற ஒரு நாள் இஸ்திமா...


முத்துப்பேட்டை, ஜனவரி 16 : முத்துப்பேட்டை புதுப் பள்ளிவாசலில் சுன்னத்துல் வல் ஜாமாத் சார்பில் நேற்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஒழுக்க பயிற்சி நடைபெற்றது.இதில் ஜமால் முஹம்மது கல்லூரி (திருச்சி), புதுக் கல்லூரி (சென்னை), காதர் முஹைதீன் கல்லூரி (அதிரை), தானிஸ் அஹமது கல்லூரி (சென்னை), கிரசன்ட் கல்லூரி (வண்டலூர்) ஆகிய கல்லூரிகலிளிருது உள்ள மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சுமார் 250 ௦ - க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு அவரவர்களின் அறிவுரிகளை வெளிபடுத்தினார்கள். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அடிராம்பட்டினத்தை சேர்ந்த மவுலான செக்கரியா அவர்கள், மாணவர்களாகிய நீங்கள் ஒழுக்கத்தை பேணவேண்டும் என்றும் ஒழுக்காம்தான் மாணவர்களுக்கு முக்கிய ஆய்தம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் தங்களுடைய தாய், தந்தையர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்யவேண்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் இதில் கலந்து கொண்ட மாணவர்களிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த மாணவர்கள் இது போன்ற நிகழ்சிகளை ஒவ்வொரு ஊர்களிலும் நடத்த வேண்டும் என்றும் இதன் மூலம் மாணவர்களாகிய நாங்கள் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்வதற்கு இது போன்ற நிகழ்சிகள் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான், S .அப்துல் ரஹ்மான்.

மவுத்து அறிவிப்பு: "PM .ஹனிபா லெப்பை"


முத்துப்பேட்டை, ஜனவரி 16 : தர்ஹா மர்ஹும் குலாம் லெப்பை அவர்களின் மகனும், ஷாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாரும், தெற்குத் தெரு SA .அபூபக்கர் அவர்களின் மச்சானும்,மர்ஹும் ஷேக் அபூபக்கர், மர்ஹும் மண்ணை K .பாக்கர் அவர்களின் சகலையும், முத்துப்பேட்டை பாரி மளிகை முஹம்மது தாகிர் அவர்களின் மாமாவும், அதிரை பசீர் அவர்களின் பாட்டனாருமாகிய, தர்ஹா "PM .ஹனிபா லெப்பை" அவர்கள் இன்று 12 மணியளவில் முத்துப்பேட்டை தெற்குத்தெரு அவர்களின் இல்லத்தில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்). ஜனாஸா அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்.

SA . அபூபக்கர்

நமது நிருபர்

KM . கார்கனி

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)