முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் TNTJ சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்










முத்துப்பேட்டை, டிசம்பர் 19 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை 7 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் திடலில் TNTJ வின் மாவட்ட செயாளர் ஜனாப். AM . புஹாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் பேசிய மாவட்ட பேச்சாளர் ஜனாப். அல்தாப் ஹுசைன் அவர்கள், நமது சமுதாயத்தில் உள்ள இயக்கங்கள் அனைத்தும் பல்வேறு முறையில் பிரிந்து கிடக்கிறது என்றும், அல்லாஹ் கூறிய ஒற்றுமை என்ற கையிற்றை பற்றிபிடித்தோமானால் அதிகமான நன்மைகள் நம்மை வந்து சேரும் என்றும், அவர் தெரிவித்தார். ஆனால் ஒற்றுமையாக இருந்த சமுதாயத்தை பிரித்தது TNTJ தான் என்று அவதூறாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும், ஆனால் எல்லோரும் சேர்ந்து மது அருந்துவது, வட்டி வாங்குவது, போன்ற தவறான செயல்களை செய்பவர்களை கண்டிக்காமல் நாங்கள் ஒற்றுமையை பேணி வருகிறோம் என்ற பல அமைப்பினர் மற்றும் இயக்கத்தினர் தன்னை மார்தட்டிக் கொள்கிறார்கள் என்றும், ஆனால் TNTJ --வை பொறுத்தவரையில் இஸ்லாம் கூறியதை மட்டும் தான் பின்பற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரதச்சனை ஒழிப்பு என்ற தலைப்பில் பேசிய TNTJ வின் மாநில செயலாளர் ஜனாப். அச்ரப்தீன் பிர்தவுஸ் அவர்கள் நமது சமுதாயத்தில் வரதச்சனை என்ற ஓர் செயலால் இஸ்லாமிய பெண்கள் 30 வது வரை திருமணம் ஆகாமல் இருந்து வருகிறார்கள் என்றும் எனவே இந்த கொடிய நோயை நம் இளைய சமுதாய இளைஞ்சர்கள் கையிலெடுத்து அவற்றிருக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இஸ்லாத்தில் அதிகமான பெண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து வருகிறார்கள் என்றும் அவற்றை செய்வதற்கு இஸ்லாம் தடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டு அவற்றை திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் வாசித்தது பின்வருமாறு:
TNTJ பொதுக்கூட்டத்தின் மூலம் போடப்பட்ட தீர்மானங்கள்:
1 ) முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து குளங்களையும் உடனே தூர்வாரி பொது மக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும்.
2) நூற் பள்ளி வாசல் இருக்கும் இடத்தில் உள்ள சாலைகளுக்கு உடனே சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்.
3 ) ஆசாத் நகர் புதிய பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்றும், மேலும் ஆசாத் நகர் பகுதியில் உள்ள கழிவு நீர் வடிக்கால் கலை உடனே தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
4 ) முத்துப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணிதம் பாடப்பிரிவிற்கு முறையான ஆசிரியர்களை உடனே பணியமற்ற வேண்டும்.
www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,EK . முனவ்வர் கான்,ASNS .அப்துல் பாரி, M .சுபைத் கான், EK . மர்சூக் அஹமது,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)