முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து SDPI ஆர்பாட்டம்..






முத்துப்பேட்டை, நவம்பர் 23 : பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வுக்கான பரிந்துரை ஆகியவைகளை கண்டித்து SDPI சார்பாக நேற்று காலை 11 :30 மணியளவில் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றம் எதிரே நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் சமுதாய நலம்விரும்பிகள் இதில் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். மேலும் இதனைத் தொடர்ந்து கண்டன உரை நிகழ்த்திய SDPI - யின் மாநில செயலாளர் ஜனாப். A .அபூபக்கர் சித்திக் அவர்கள், அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களுக்குள்ளாக மக்கள் விரோத போக்கை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும், சட்ட சபை தேர்தலுக்கு முன்னாள் விலைவாசி உயர்வு, மின்தடை ஆகியவைக்காக அ.தி.மு.க. கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது என்றும், தற்போது தனிபெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் தொடர்ந்து சோதனைகளையும், வேதனைகளையும் செய்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். அதில் சமச்சீர் கல்வியில் மிகப்பெரிய ஓர் தடையை ஏற்படுத்தி உச்ச நீதி மன்ற ஆணையின் அடிப்படையில் அது செயல் முறைக்கு வந்தது என்றும், அண்ணா நூற்றாண்டு நூலகம் நல்லவர்களை, போராடக்கூடியவர்களை, புரட்சியாளர்களை, தலைவர்களை உருவாக்ககூடிய அண்ணா நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றியது மிகவும் வேதனைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த விலை உயர்வை ஏற்படுத்தாவிட்டால் போக்குவரத்து துறையும், ஆவின் நிறுவனமும் கடனில் மூழ்கிவிடும் என்பது உன்மைதான என்று பார்க்கும் போது அத்துனையும் பொய் என்றும் அவர் தெரிவித்தார். ஏனெனில் போக்குவரத்து துறையில் தமிழகம் முழுவதும் சுமார் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் கீழ் வருமாறு:

இதில் உள்ள வருவாயின் அடிப்படையில் மாதம் மாதம் பல நூறு கோடிரூபாய் லாபத்தில் இயங்கி கொண்டிருக்கிறது என்றும், எனவே போக்குவரத்து துறை எப்படி கடனில் மூழ்கி வருகிறது என்றும்,மேலும் பஸ் விலை உயர்வு 30 சதவீதம் உயர்த்தி ஏழை மக்களின் அத்தியாவாசியத் தேவையில் பெரிய முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளார் என்றும், 1 ரூபாய் உயர்ந்தாலே அட்சப்படக்கூடிய ஏழை மக்கள் 6 ரூபாய் உயர்ந்ததை எண்ணி ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். ஆவின் நிறுவனம் 17 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக தமிழக அரசு கூறி உள்ளது என்றும் ஆனால் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தாததால் தேசிய பால் வள வாரியத்திடமிருந்து மானியமாக கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாய் மறுக்கப்பட்டிருகிறது என்றும், இந்த கணக்கின் அடிப்படையில் பார்த்தால் மேல்மிட்சமாக 103 கோடி ரூபாய் வைத்திருக்க வேண்டிய ஆவின் நிறுவனம் கடனில் சென்று கொண்டிரிக்கிறது என்று கூறுவது மக்களிடம் பூச்சாண்டி வேலை காட்டுவது போல் எங்களுக்கு தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மின்சார கட்டண உயர்வை உயர்த்த இருக்கிறார்கள் என்றும், அதற்காக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு பரிந்துரையும் அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் கடந்த அகஸ்ட் 4 ம் தேதி நிதிநிலை அறிக்கையின் போது நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் மின் ஆளுமை முயற்ச்சிகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளது என்றும், மேலும் உலக அளவில் தமிழ் நாடு உற்பத்தி சார்ந்த தொழில் முதலீட்டுக்கு உகந்த இடம் என்றும் கூறியதை அப்போது அவர் தெரிவித்தார்.இப்படிப்பட்ட மின்சாரத்தடை மற்றும் கட்டண உயர்வை உடனே சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட மக்களின் விரோத போக்கை கைவிட்டுவிட்டு பஸ், பால் உயர்வையும் உடனே ரத்து செய்து மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரையையும் திரும்பபெற வேண்டும் என்று முத்துப்பேட்டை வாழ் மக்களின் சார்பாக இந்த ஆர்பாட்டத்தின் மூலமாக SDPI கேட்டுக்கொள்கிறது என்று அப்போது அவர் தெரிவித்தார். இதில் நகரத் தலைவர் ஜனாப்.ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட செயலாளர் ஜனாப். பாவா பகுருதீன், நகர செயலாளர் ஜனாப். முஹம்மத் முஹைதீன், மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா மற்றும் ஏராளமாக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், AKL.அப்துல் ரஹ்மான், ரிப்போர்ட்டர் யூசுப் (முத்துப்பேட்டை)

தடை மீறிய ரதயாத்திரை INTJ தலைவர் ஜனாப் SM .பாக்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கைது!!









மேலப்பாளையம், நவம்பர் 23 : இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்த பாபர் மஸ்ஜித் ரத யாத்திரையை கடைசி நேரத்தில் ரத்து செய்த காவல் துறை கடுமையான கெடு பிடி செய்து ரதயாத்திரையை முடக்க நினைத்தது ஒரு பக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்களுடையது நாங்கள் எந்த ரதயாத்ரையும் நடத்த வில்லை, எனவே இதை தடுக்க வேண்டும் என அண்ணன் ஜமாஅத் மேலப்பாளையம் மேலாண்மை புகார் அளித்து கொடுத்த மன உளைச்சல் இன்னொரு பக்கம் இத்தனையையும் தாண்டி சென்னையில் இருந்து ரதத்தை நெல்லை கொண்டு வந்து சேர்த்தனர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல் வீரர்கள்.
காலை பத்து மணிக்கெல்லாம் மேலப்பாளையம் பரபரப்பானது! பஜார் திடலில் காவல் துறை அணி வகுப்பு நடத்தி உள்ளூர் மக்களை ரதயத்ரையில் கலந்து கொள்ள விடாமல் அச்சுறுத்திக் கொண்டிருந்தது . அனைத்தயும் மீறி வேறு இடத்தில் வைக்கப் பட்டிருந்த ரதத்தை பஜார் திடலுக்கு கொண்டு வர முயற்சித்த போது அங்கேயே தடுத்து நிறுத்த முயன்ற துணைக் கண்காணிப்பாளரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர் முற்றுகையிட்டு கேரோ செய்தனர் துணை பொது செயலாளர் இக்பால் மற்றும் மாநில செயலாளர் அபு பைசல் ஆகியோர் வந்து கடும் வாக்கு வாதம் செய்து பின்னர் ரதம் விடுவிக்கப் பட்டு தொண்டர் அணி தலைவர் கோவை பாருக் தலைமையில் அணி வகுத்து வந்த சீருடை அணிந்த தொண்டர்கள் புடை ச்சொல அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கங்களுடன் மேலப்பாளையம் வீதிகள் வழியாக பஜார் திடல் வந்தடைந்த போது உணர்ச்சி பெருக்கெடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.துணைப் பொது செயலாளர் தலைமை உரை ஆற்ற அடுத்து சமுக ஆர்வலர்கள் பத்திரிக்கையாளர் மணி, மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சேலையூர் சீனிவாசன் உள்ளிட்ட மாற்று மத சகோதரர்கள் உரை நிகழ்த்தினர். இறுதியாக கண்டன உரை நிகழ்த்திய எஸ்.எம்.பாக்கர் காவல் துறையின் அராஜகத்தை கடுமையாக சாடினார். ரத்த யாத்திரை நடத்திய அத்வானிக்கு மீண்டும் ரதயாத்திரை நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வழங்கும் தமிழக அரசு முஸ்லிம்களின் ரதயத்ரைக்கு அனுமதி மறுப்பதேன்? நாங்கள் என்ன இந்த நாட்டின் இரண்டாந்தர குடி மக்களா? என கேள்வி எழுப்பினார்.மேலும் இன்ஷா அல்லாஹ் வரும் திங்கள் அன்று இதை எதிர்த்து நீதி மன்றம் செல்லவிருப்பதாகவும் நீதி மன்றத்தில் அனுமதி பெற்று ரத யாத்ரையை நடத்தியே தீருவோம் என முழங்கினார்.பின்னர் காவல் துறை தான் கைது நடவடிக்கையை துவங்கியது நூற்றுக்கணக்கனோர் நெஞ்சுறுதியோடு பதினைந்து நாள் ரிமாண்டுக்கு தயாராக தங்கள் உடைகளோடு வந்திருந்தது காவல் துறையினருக்கு வியப்பை ஏற்படுத்தியது. மண்டபத்தில் தொழுகை பயான்என மிகவும் பயனுள்ளதாக நேரம் சென்று கொண்டிருந்தது.ஏறாலமன் பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் இந்நிகழ்ச்சியை படம் பிடித்தனர் . மாலைப் பத்திரிக்கைகள் இந்த நிகழ்வை முதன்மை செய்திகலாக்கியது. நடு நிலை கொண்ட காட்சி ஊடகங்களும் செய்திகளில் ஒளிபரப்பியது.முதலில் ரிமாண்ட் என பூச்சாண்டி காட்டிய காவல் துறை இறுதியில் மாலை ஏழு மணிக்கு விடுதலை செய்தது. அல்ஹம்து லில்லாஹ் எல்ல்லப் புகழும் இறைவனுக்கே!
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்,அபு மர்வா,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)