முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹஜ் பெருநாள் பண்டிகை.



















முத்துப்பேட்டை, நவம்பர் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. சரியாக காலை 8 .30 மணியளவில் குட்டியார் பள்ளி வாசலில் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் சுமார் 2 ,000 துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். இதில் கொத்பா பள்ளி முஹல்லாஹ், அரபு சாகிப் பள்ளி முஹல்லாஹ், குட்டியார் பள்ளி முஹல்லாஹ், பேட்டை பள்ளி முஹல்லாஹ், முஹைதீன் பள்ளி முஹல்லாஹ், மதீனாப் பள்ளி முஹல்லாஹ், ரஹ்மத் பள்ளி முஹல்லாஹ், ஆகிய 7 முஹல்லாவை சேர்ந்த பள்ளி நிர்வாகத்தினரும்,முஹல்லாஹ் வாசிகளும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள். இதனைத்தொடர்ந்து கொத்பா பள்ளி தலைமை இமாம் பயானும் நடைபெற்றது. இதன் பின்பு ஒவ்வொரு சகோதரரும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமாக ஒருவருக்கொருவர் சலாம் கூறி முஸாபா செய்து கொண்டனர். இந்த முஸாபா மூலம் இனம், மொழி, ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் பார்க்காமல் இறைவனை மட்டும் முன்னிறுத்தி நடைபெற்றதால் இந்த நிகழ்வு அனைத்து மக்களுகளுக்கிடையே ஒரு பொன் சிரிப்பாகவே இருந்தன.

குறிப்பு: முத்துப்பேட்டையில் மொத்தம் 6 பள்ளி வாசல்களில் இன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

1) குட்டியார் ஜும்மாஹ் பள்ளி

2 ) மக்கா பள்ளி

3) புதுப் பள்ளி

4 ) ஆசாத் நகர் பள்ளி

5 ) தர்கா பள்ளி

6 ) நூர் பள்ளி

பெண்களுக்கான ஹஜ் பெருநாள் தொழுகை அந்த அந்த முஹல்லவை சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் அந்த அந்த முஹல்லாஹ் பள்ளி வாசல்களிலேயே நடைபெற்றது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் கூட்டு குர்பானி திட்டம் நிறைவேறியது.






முத்துப்பேட்டை, நவம்பர் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துபாயில் வாழக்கூடிய நமதூர் மக்கள் முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் என்ற பெயரில் கடந்த 29 வருடமாக பல்வேறு சாதனைகளும், முத்துப்பேட்டை ஏழை, எளிய மக்களுக்கு மாத உதவித் தொகையும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி உதவித்தொகையும் இதன் மூலம் வழங்கி வருகின்றனர். மேலும் இதனைத் தொடர்ந்து இன்று தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை முன்னிட்டு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் இரண்டாவது முறையாக கூட்டு குர்பானி திட்டத்தின் மூலம் சுமார் 8 மாடுகள் அறுத்து முத்துப்பேட்டையில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. இதில் முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் முத்துப்பேட்டை பிரதிநிதி சோழநாடு. ஜனாப் .KM .நெய்னார் முஹம்மது, ஜனாப். ஹுமாயுன் கபீர், சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாப். PM . ஜாகிர் ஹுசைன், சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஜனாப். S .நஜுபுதீன், புதிய தலைவர்.ஜனாப். S .ஜாபார் ஹுசைன், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப். MRS .ராவுத்தர் (செல்லாப்பா), மேலும் சங்கத்தின் முன்னாள் உதவி பொருளாளர் ஜனாப். நாசர், முஹம்மது ரபீக், முஹம்மது அசாருதீன் , சபீர் அஹமது (சிங்கப்பூர்) மற்றும் முத்துப்பேட்டையில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from www.muthupettaiexpress.com, www.muthupettaiexpress.blogspot.om
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

மவுத்து அறிவிப்பு: "ஹதீஜா நாச்சியா"


முத்துப்பேட்டை, நவம்பர் 07 : அதிராம்பட்டினம் மர்ஹும் மு.ஆ நெய்னா முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும் M .முஹம்மது இபுராஹீம் அவர்களின் மனைவியும், முத்துப்பேட்டை கரடி M .முஹம்மது யாசின் அவர்களின் சகோதரியும், கரடி.M .சேக் அப்துல் காதர், M .அக்பர் அலி ஆகியோரின் தாயாருமாகிய "ஹதீஜா நாச்சியா" அவர்கள் இன்று காலை 7 :15 மணியளவில் அதிராம்பட்டினம் நெசவுக்காரத்தெரு அவர்களது மகனார் இல்லத்தில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னாஹ் லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from www.muthupettaiexpress.com
அறிவிப்பவர்

கரடி. M .முஹம்மது யாசின்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)