முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மமக சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம்! வியந்தது பல கட்சிகள்!










சென்னை, நவம்பர் 03 : நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மமக சார்பில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒருநாள் நிர்வாக பயிற்ச்சி முகாமும், சான்றிதல் அளிக்கும் நிகழ்ச்சியும் சென்னை சிராஜ் மஹாலில் நேற்று நடைபெற்றது. மேகத்துடன் கூடிய மழைச்சாரலும் , குளிர்ந்த காற்றும், சென்னை மாநகரை இதமான ஒரு சூழலில் பரவசப்படுத்தி கொண்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளை தலைமை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்தியது அவர்களோ இனம் புரியாத சந்தோசத்தில் திளைத்தனர். இதனை அடுத்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA . அவர்கள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார், பின்னர் புகழ்பெற்ற ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அபுல்ஹசன் அவர்களும், உள்ளாட்சி நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற திரு.தாஸ் அவர்களும், பத்தாண்டு கால நேரடி நிர்வாகத்தை பெற்ற சாத்தானி சிராஜ் அவர்களும் வகுப்புகளை எடுத்தார்கள். இந்த வகுப்பில் உள்ளாட்சி நிர்வாகம் என்றால் என்ன? மன்ற கூட்டங்களை நடத்துவது எப்படி? நிதியை எப்படி செலவு செய்வது? அதிகாரிகளை பயன்படுத்துவது எப்படி? மத்திய அரசு மாநில அரசுகளின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது எப்படி? தங்கள் வார்டுகளில் செய்யக்கூடிய பணிகள் என்ன? என்னவெல்லாம் அதிகபட்சமாக செய்ய முடியும்? என பல்வேறு ஆக்கப்பூர்வமான விசயங்களை குறித்து அவர்களை விளக்கியபோது மமக பிரதிநிதிகள் அனைவரும் அங்கு மாணவர்களாக மாரிபோனார்கள். இந்நிகழ்சியை பதிவு செய்ய வந்த பத்திரிக்கையாளர்கள் இதுபோன்ற பயனுள்ள ஒரு நிகழ்ச்சியை இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் நடத்தியது இல்லை என்றும், மமக உண்மையிலேயே ஒரு வித்தியாசமான மாற்று அரசியல் காட்சியாகத்தான் இருக்கும் என்றும் அவர்கள் வியந்தார்கள். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சான்றிதல்கள் வழங்கப்பட்டது. முதலில் 156 பேர் தான் மமக சார்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டிருந்தது. நிகழ்ச்சி நடைபெற்ற அன்றைய தினம் இன்னொரு ஏழு பேர் எங்கள் பெயரை மக்கள் உரிமையில் ஏன் போடவில்லை என முறையிட்டு சான்றிதல்களை கேட்க தலைமை நிர்வாகிகள் கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள். இதுகுறித்து சில மாவட்டம் நிர்வாகிகளை பகிரங்கமாக கண்டித்து பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், தலைமைக்கு ஒழுங்கான தகவலை அனுப்பாததால் ஒருங்கிணைந்த முழு பட்டியலை ஒரு சேர வெளியிட முடியாமல் போனதை அப்போது சுட்டிக்காட்டினார். இதில் 35 பெண்கள், 2 கிறிஸ்தவர்கள், 9 இந்துக்கள் உட்பட மாமாகவின் 172 வெற்றியாளர்களுக்கும் சான்றிதல் வழங்கப்பட்டது. மதியம் விருந்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா

முத்துப்பேட்டையில் ஸ்டவ் அடுப்பு வெடித்து ஒருவர் படுகாயம்!




முத்துப்பேட்டை, நவம்பர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள பேட்டையில் ஜனாப்.ஜபருல்லா, வயது 33, என்வர் டீ கடை நடத்தி வருகிறார். இவர் காலை 5 .30 மணியளவில் தனது டீ கடையையை திறக்க சென்றார். அப்போது கடையில் உள்ள ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அது எதிர்பாராமல் திடீர் என்று வெடித்ததில் படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள பொது மக்கள் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் (மருதுதுரை) மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் சிகிச்சைக்கு மருத்துவர்கள் சுமார் 5 ஆயிரம் செலவாகும் என தெரிவித்துள்ளார்கள். எனவே இவரால் இந்த கட்டணத்தை கட்ட முடியாமல் தவித்து வருகிறார். எனவே நல்லுள்ளம் கொண்ட நமதூர் வெளிநாட்டு வாழ் சகோதர, சகோதரிகளே உங்களால் இயன்ற உதவியை செய்யுது அல்லாஹ்வின் அருளை பெற இதோ ஓர் அறிய வாய்ப்பு. இது குறித்து தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
மஹாராஜா தமீம்: 99656 40543 .
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,EK .முனவ்வர் கான்,ASNS .அப்துல் பாரி, அபு மர்வா

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)