முத்துப்பேட்டை,அக்டோபர் 30: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த ஒன்றிய தேர்தலில் அ.தி.மு.க. கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் போட்டயிட்டனர் அப்போது அதிக படியான வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வின் ஒன்றிய செயலாளரும், வேட்பாலருமாகிய திரு.RKP .நடராஜன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் . மேலும் துணைத் தலைவர் பதவிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும்,வேட்பாலருமாகிய திரு.தெட்சனமூர்த்தி அவர்கள் வெற்றிபெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று கலை 10 மணியளவில் அவர்களுக்கு பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது. மேலும் அவர்களின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தன்னுடைய சந்தோசத்தை பரிமாறி கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.அபு மர்வா.
மதுரை,அக்டோபர் 30 : ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை BJP யின் மூத்த தலைவர் திரு.அத்வானி அவர்கள் மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில் தேர்தலுக்காகவோ அல்லது தனிப்பட்ட அத்வானிக்காகவோ இந்த யாத்திரையை தான் தொடங்கவில்லை என்றும்,தேசிய அளவில் மக்கள் நலன் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக இந்த யாத்திரை நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த நாட்டை ஆழ வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், உண்மை நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மத்தியில் இனிமேல் கூட்டணி இல்லாமல் அரசு அமைப்பது நடக்காது. கண்டிப்பாக கூட்டணி கட்சி ஆட்சிதான் இனிவரும் காலங்களில் ஏற்படும் என்றும், தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி அமைப்பது குறித்து அலோசனை செய்யப்படும் என்றும், அதே போன்று தமிழகத்திலும் உரிய நேரம் வரும் போது கூட்டணி அமைப்பது குறித்து குடிவு எடுக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தர்.
www.muthupettaiexpress.com
நமது நிருபர்
பாலா (ஆலங்காடு)