முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை:பேரூராட்சி தேர்தலில் பணம் பலம்தான் வெற்றிபெற்றது! SDPI தகவல்!




முத்துப்பேட்டை,அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க கட்சி பணம் பலத்தைக் கொண்டு வெற்றிபெற்றுள்ளது என்று SDPI - யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய சித்திக் மச்சன் என்கிற திரு. அபூபக்கர் சித்திக் அவர்கள் இதனைத் தெருவித்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எனக்கு 1927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு உயர்த்தி தந்த அனைத்து முத்துப்பேட்டை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெருவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெருவித்தார். மேலும் இத்தனை வாக்குகளை பெறுவது என்பது ஒரு சாதாரண விசயம்மல்ல என்றும், இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து சமுதாய மக்கள்களுக்கும், வெளிநாட்டுவாழ் நண்பர்களுக்கும் எனது மணமார்ந்த நன்றியையும் சலாத்தையும் தெருவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெருவித்தார். 

இந்த தேர்தலில் மக்களின் ஒரு மித்த கருத்தை ஏற்படுத்துவதற்கு SDPI கட்சியானது பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டது என்றும், அவற்றில் சிலவற்றை நான் இங்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன் என்றும், அதில் சாதாரண பெட்டிக் கடை வைத்திருப்பவர்களிலிருந்து, பெரிய மளிகை கடை வைத்திருப்பவர்கள் வரை, அனைத்து பால் வியாபாரிகளும், டீக்கடை வைத்திருப்பவர்களிலிருந்து பெரிய ஹோட்டல் வைத்திருப்பவர்கள் வரை, எல்லா வற்றிருக்கும் மேலாக வெளி நாட்டில் வாழக்கூடிய அனைத்து மக்களும் ஒரு முறை இரு முறை அல்ல சுமார் 15 முதல் 20 முறைகளுக்கு மேலாக தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கும் தொடர்ந்து முயற்ச்சி செய்தது ஒருமித்த கருத்தை எட்ட வைத்துள்ளார்கள். 

அதாவது இந்துக்கள், முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள், தலித்கள், மேலும் ஆட்டோ ஒட்டுனர்களிளிருந்து கார், வேன் ஓட்டுனர்கள் வரை SDPI - யின் வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும் என்று உழைத்தார்கள். ஆனால் தனது வெற்றிக்கு இறைவனின் நாட்டம் இல்லை என்று தான் சொல்லவேண்டும் மேலும், இந்த தோல்வியில் கூட நமக்கு இறைவன் மிகப் பெரிய வெற்றியை வைத்துள்ளான் என்று அவர் தெருவித்தார். மனிதன் என்ற அடிப்படையில் பார்க்கும்போது ஆசைகளும், அவசரமும் இருக்கத்தான் செய்யும், ஆனால் நமக்கு இறைவன் நன்மையையே நாடுவான் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் இரண்டு விசயங்களை மக்கள் மத்தியில் சமர்பிக்க கடமைப்பட்டுள்ளேன். 

அவற்றில் முதலாவது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து நம்முடைய வேகம் அனைத்தும் அரசியல் கட்சிகளையும் விஞ்சி சென்று கொண்டிருந்த போதுதான், நக்கீரனின் நச்சு கருத்து போஸ்டர்கள் ஓட்டப்படுகிறது என்றும் ஃபாசிசத்திருக்கு எதிராக தன்னுடைய பத்திரிக்கையை நடத்தி வரக்கூடிய நக்கீரன் கோபால் அவர்களின் பத்திரிகையில் ஃபாசிசத்தின் பிராமணர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதை அறியாத வண்ணம் "முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தல்" இந்துவா? முஸ்லிமா? என்ற நச்சு கருத்தை விதித்துள்ளார்கள் என்றும், இவற்றை அனைத்து மக்களும் சித்திக்க வேண்டும் என்றும் அவர் தெருவித்தார். இந்த போஸ்டர்கள் எப்பொழுதாவது நாக்கீரன் மூலம் ஒட்டப்பட்டுள்ளதா என்று பாத்தால் இல்லை என்றும் இது ஒரு திட்டமிட்ட சதிதான் என்றும் அவர் தெருவித்தார்.

இரண்டாவதாக தேர்தலில் தோர்க்க போகிறோம் என்ற நிலையை நன்கு அறிந்திருந்தும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களையும், சொந்தகாரவர்களையும் நிர்பந்தத்திற்கு உட்படுத்தி வறட்டு கவுரவத்தாலும், அலட்சியத்தாலும் முஸ்லிம்களுடைய ஓட்டுகளை பிரித்தது நம்முடைய பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும், அவர் தெருவித்தார். ஏனெனில் சுயேச்சை வேட்பாளர்களாக 4 பேர் முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப் பட்டனர். 4 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் பெற்ற வாக்குகள் 775 மேலும் முஸ்லிம் லீக், ம.ம.க. போன்ற கட்சிகள் பெற்ற வாக்குகள் 172 + 396 = 568 இது போன்ற நமது வாக்குகள் சுமார் 1343 (இதில் விடுதலை சிறுத்தையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை) வாக்குகளை நாம் வீணாக்கி உள்ளோம் என்பதை வரும் காலங்களில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெருவித்தார். 

அதே போல் முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு தே.மு.தி.க. கட்சி சார்பாக திரு.பத்மநாதன் அவர்கள் போட்டியிட்டார்கள், அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 115 ஆகும் என்றும், 39 MLA க்கள் தங்கள் வசம் இருந்தாலும் கூட்டுசதியில் பங்கெடுத்துல்லதை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும் என்றும் அவர் தெருவித்த்வர். இந்த தேர்தலில் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக திருந்துவார்கள் என நான் நம்புகிறேன் தோல்வியுற்றது வெற்றியின் முதல் படிதான் என்றும், ஏனெனில் 1927 வாக்குகளை கொடுத்த மக்களுக்கு நாம் ஒரு ருபாய் கூட பணம் கொடுக்கவில்லை என்றும் இதுவே மிகப்பெரிய வெற்றிதான் என்றும் அவர் தெருவித்தார்.

2328 வாக்குகள் பெற்றிருக்கக்கூடிய அ.தி.மு.க. வாக இருக்கட்டும், இன்ன பிற கட்சிகளாக இருக்கட்டும் 90 சதவீதம் பணம் கொடுத்து பெற்றதுதான் உண்மை என்பதை அவர்களும் உணர்வார்கள், என்றும் அவர் தெருவித்தார். மேலும், இனி நமது மக்கள் களப்பணியின் வேகத்தால் பணம் கொடுத்து ஓட்டு பெறுவதை உடைத்தெறிந்து உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்ட உறுதி பூண்டுள்ளோம் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்த நாம் கடமை பட்டுள்ளோம் என்றும் அவர் தெருவித்தார். அதே போல் தேர்தல் களத்தில் SDPI க்கு ஒத்துழைப்பு அளித்தது போல் இனிவரும் காலங்களில் நாம் முன்னெடுத்து செல்லும் மக்கள் நல போராட்டங்களுக்கும் ஆதரவை அன்போடு எதிர்பார்கிறேன் என்றும் அப்போது அவர் தெருவித்தார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

முத்துப்பேட்டையில் தொடர்ந்து இரண்டு நாள் மழை!



முத்துப்பேட்டை, அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தமிழ் நாடு வானிலை ஆராய்ச்சியின் இயக்குநர் திரு.ரமணனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கேட்டதற்கு பதிலளித்த அவர், வடமேற்கு பருவமழை தற்பொழுது ஆரம்பித்துள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெருவித்தார். மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் விவசாயம் செய்யக் கூடிய மக்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள். எங்களால் தற்போது விவசாயம் செய்ய முடியாது என்றும் அவ்வாறு செய்தால் நஷ்டம் எங்களை சூழ்ந்து கொள்ளும் என்றும் அவர்கள் கூறினார்கள். மேலும் விவசாயம் செய்யக் கூடிய மக்களுக்கு அறிவுரையாக மழைகாலங்களில் கரும்பு விவசாம் செய்தால் மிக நன்றாக இருக்கும் என்றும் அப்போது அவர்கள் தெருவித்தார்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)