முத்துப்பேட்டை,அக்டோபர் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 15 வது வார்டுக்கு உறுபினராக சுயேச்சையாக தென்னைமரம் சின்னத்தில் கோல்டன் S .தம்பிமரைகையர் அவர்கள் போட்டியிடப் போவதாக அவர் தெருவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், நமது வார்டு எல்லா நிலைகளிலும் ஏற்றம் பெறவும் எல்லா வார்டுகளிலும் எடுத்துக் காட்டாக திகல்திடவும் ஊழலுக்கு இடம் கொடுக்காமல் உண்மையாக பாடு பட்டு பணிசெய்வேன் என்றும், குறிப்பாக நமது வார்டில் பாதாள சாக்கடைத் திட்டத்தை முறையாக கொண்டு வரவும் தட்டுப் பாடு இல்லாமல் முறையாக குடிதண்ணீர் கிடைக்கவும், தேவையான நேரத்தில் தேவையானதை செய்திட முயற்சிப்பேன் என்றும் அவர் தெருவித்தார். அகவே எனக்கு அதிக படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Source from muththupettai
தொகுப்பு.
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.
முத்துப்பேட்டை,அக்டோபர் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 13 வது வார்டுக்கு உறுபினராக சுயேச்சையாக வைரம் சின்னத்தில் வழக்கறிஞர் முஹம்மத் உமர் முக்தர் அவர்கள் போட்டியிடப் போவதாக அவர் தெருவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், எனது வார்டு மக்களுக்காக கடுமையாக உழைப்பேன் என்றும், அவர்களின் குறைகளை எந்த நேரமும் பார்க்காமல் அவற்றை நிறைவேற்றி கொடுப்பேன் என்றும், மக்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் எனது வார்டுக்கு பெற்றுக் கொடுப்பேன் என்றும் அகவே எனக்கு அதிக படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Source from muththupettai
தொகுப்பு.
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.
முத்துப்பேட்டை, அக்டோபர் 07 : முஹைதீன் பள்ளி தெரு மர்ஹும் ஊன.மூனா.முஹம்மத் சதகத்துல்லாஹ் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹும் ஊன.மூனா. நெய்னா முஹம்மத் அவர்களின் சகோதரரும், மர்ஹும் மு.க. முஹைதீன் பக்கீர் அவர்களின் மருமகனும், S . ஹபீப் கான் அவர்களின் தகப்பனாருமாகிய, "ஊன.மூனா. ஷாகுல் ஹமீது" அவர்கள் இரவு 9 .30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னாஹ் லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப் படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
அறிவிப்பவர்
S .ஹபீப் கான் அவர்கள்.