முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஜெர்மனி, பிரான்சைத் தொடர்ந்து இத்தாலியும் தற்போது பர்தாவுக்குத் தடை!!!

ஆகஸ்ட்18: ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சைத் தொடர்ந்து இத்தாலியும் தற்போது முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்காவைத் தடை செய்துள்ளது!
பெண்ணியவாதிகள் மத்தியில் இது வரவேற்கதக்க விஷயம் என்றாலும், இந்த விஷயத்தை, முஸ்லிம் மக்கள் மீது கலாசாரரீதியாகவும், மேற்கத்திய நாட்டு அரசுகள், கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையின் ஒரு அங்கமாகவே பார்க்கவேண்டும்.
ஏற்கனவே டென்மார்க்கில் ஒரு பத்திரிகை முஸ்லிம்களின் போற்றுதலுக்குரிய முகமது நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரமா போட்டது. அதைதொடர்ந்து வளைகுடா நாடுகள் மொத்தமும், உலகத்துலேயே பாலுக்கு பேர்போன டென்மார்க்கிலிருந்து ஏற்றுமதியாகிற பொருட்கள தடை செய்ததன் மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
இருந்தபோதும், மேற்கத்திய நாட்டு அரசாங்கங்கள், முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தவில்லை.
இந்த இடத்தில் ஒருவிஷயத்தை சொல்லவிரும்புகிறேன். எனக்குதெரிந்த ஒரு டாக்டர், முப்பது வருடங்களுக்குமுன் அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அவர் ஒரு முஸ்லிம். அமெரிக்க குடிஉரிமை பெற்றவர். வருடம் ஒருமுறை இந்தியா வந்து செல்வார். இவ்வாறு அவர், ஒவ்வொரு முறையும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பும்போதும், அமெரிக்க குடிஉரிமை அதிகாரிகளால் தேவையில்லாத கேள்விகள் கேட்கப்பட்டு, கிட்டத்தட்ட அவமான படுத்தபடுவாராம். எதிர்கேள்வி கேட்டால் தேவையில்லாத பிரச்சனை என்று அவர் அதை ஒவ்வொருமுறையும் சகித்துகொள்வாராம். அவரின் வீட்டு மற்றும் அலுவலக தொலைபேசிகள் ஒட்டு கேட்கபடுகிறதாம். அவரின் வங்கி கணக்கும் கண்காணிக்க படுதாம். இத்தனைக்கும் அவர், மதத்தின் மீது அவ்வளவு பற்றான நபரும் கூட கிடையாது. இவருக்கே இந்த நிலைஎன்றால், மதத்தின் மீது பற்றுள்ள அப்பாவி முஸ்லிம் மக்களின் கதி என்ன என்பதை யோசித்துபாருங்கள்.
எனவே இத்தடைக்கு எதிரா, முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தவரும், மதமே இல்லைன்னு சொல்றவங்களும் குரல் கொடுக்கணும்! ஏனென்றால் இது ஒரு மதத்தை தழுவிய மக்களுக்கு எதிரான அடக்குமுறை. உலகில் அடக்குமுறை எந்தவடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்த்து குரல் எழுப்பபடவேண்டும்.
நமது நிருபர்

உமர் முக்தார்

பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதற்கான ஆதாரம்

ஆகஸ்ட்18: அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்...
பர்தாவைப் பற்றியும் அதன் அவசியம் மற்றும் அதன் அளவு பற்றியும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.பெண்கள் அவர்களுடைய அழகை அந்நிய ஆண்களுக்கு மத்தியில் வெளிப்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.இந்நிலையில் முகத்தையும் முன்கைகளையும் மறைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதில் உலமாக்களிடையே கருத்து வேறுபாடுள்ளது.

ஆனால் முகத்தையும் முன்கைகளையும் மறைக்கக்கூடாது என்று தமிழகத்தில் ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. ஏனென்றால் இஸ்லாத்தில் இதற்கான ஆதாரமில்லை என்றும் இதன் மூலம் திருட்டு,விபச்சாரம்,நடிகைகள் தவறாக பயன்படுத்துதல்,தவறு செய்வதற்கு வாய்ப்பு தருகின்றது போன்ற கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.ஆனால் முகத்தையும் முன்கைகளையும் மறைக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் இருக்கின்றது.

அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா கூறுகின்றான்

நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்(33:53)

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.(33:59)

இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்.தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்…………….(வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.(24:31)

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.(33:33)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறுகின்றார்கள்

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி-1838

மேற்கண்ட ஹதீஸில் பெண்கள் முகத்திரையையும்கையுறைகளையும் பயன்படுத்தியுள்ளார்கள்.அதனாலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இஹ்ராமில் தடுத்துள்ளார்கள். ஆனால் இந்நேரங்களில் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மனைவியர்களும் மற்ற முஸ்லிமான பெண்களும் தங்களுடைய முகங்களை மறைத்துள்ளனர். அதற்கான ஆதாரம்

ஆயிஷா ரதியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்.

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடன் இஹ்ராமில் இருந்தபோது,வாகனக்காரர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் எங்களுக்கு நேராக வருகின்ற போது பெண்களில் ஒவ்வொருவரும் தம் முகமூடிகளைத் தலைகளிலிருந்து முகங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்வார்கள்.அவர்கள் எங்களை கடந்து சென்று விட்டால் முகங்களை திறந்துக் கொள்வோம்.- அபூ தாவூத்

இவ்விஷயத்தில் புரிந்துக்கொள்வதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.மேலும் இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எல்லா உலமாக்களும் குழப்பம் ஏற்படுமென்ற பயமிருக்கின்றபோது பெண் தனது முகத்தை மறைப்பது கட்டாயம் என்பதில் ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.சில நிர்பந்தமான நேரங்களில் முகத்தைத் திறந்து கொள்ளலாமென்ற விஷயத்திலும் ஒத்துப்போகின்றனர்.(உதாரணத்திற்காக சிகிச்சைக்காக மருத்துவரிடம் தனது முகத்தை திறந்துக் கொள்ளலாம்).

இந்தக் காலத்தில் குழப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.எங்கும் பரவலாக காணப்படுகின்றது.தீயவர்கள்தான் கடைவீதிகளிலும் மற்ற இடங்களிலும் திரிகின்றனர்.அழகை வெளிப்படுத்துவதில் முகமே முக்கிய பங்கு வகுக்கின்றது.


இந்த சூழ்நிலையில் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியில் செல்வதே சிறந்ததாகும்.

குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய ஊர்களில் திருமணமாகாத பெண்கள் இப்பொழுது முகத்தை முழுவதுமாக மறைத்துக்கொண்டே வெளியில் வருகின்றனர்.ஆனால் முகத்தை மூடக்கூடாது என்ற கருத்தின் மூலமாக முஸ்லிம் பெண்களின் கண்ணியம் சீர்குழைவதற்கான வாய்ப்புகள்இருக்கின்றன.ஆகையால் இதுபோன்ற விஷம கருத்துக்களுக்கு எதிராக நாம் நம்முடைய பெண்களை பாதுகாப்பது முக்கியமான கடமையாகும்.
இளம் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு மத்தியில் முகத்தை வெளியில் காட்டக்கூடாது என்பதற்கான ஆதாரம் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் (எந்த) சில சந்தர்பங்களில் இளம் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு மத்தியில் முகத்தை வெளிக்காட்டலாம் என்பதற்கான ஆதாரமும் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு:
ரிப்போட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)