முக்கியச் செய்தி:

Question No:(29) வட்டி வாங்கி வந்தவர்களை நபி (ஸல்) அவர்களுக்கு மிஹ்ராஜ் சென்ற போது காட்டப்பட்டது, அவர்களின் நிலை எவ்வாறு இருந்தது? (A) உடல் முழுவதும் இல்லை (B) வயறு ஊதிப் போய் இருந்தது (C) கால் இரண்டும் இல்லை (D) எனக்கு தெரியாது

முத்துப்பேட்டை:FLASH NEWS

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்” நடத்தும் 4-ம் ஆண்டு மாபெரும் குர் ஆன் மனனப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி வரும் 29 ஆம் தேதி கொய்யா மஹாலில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பு; பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. இப்படிக்கு தலைவர்.S .ஜஹபர் உசேன், பொதுச்செயலாளர்.M.A.K. ஹிதாயத்துல்லா, பொருளாளர்.M.சகாபுதீன் >< முத்துப்பேட்டை சதம் கிரிகெட் அணியினர் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி வரும் ஜூன் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தலைப்புச் செய்திகள்

Muthupettai Express

ஒரு நபி மொழி

"உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும். உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக் கூடியது. தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது" என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புஹாரி : 1429


குர்ஆன் வசனம்

"எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்லாத வரையில் அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை"!
. அல்-குர்ஆன்: 13 :11

இறைவேதம் அழைக்கிறது, முத்துபேட்டை இஸ்லாமிய நலசங்கம் நடத்தும் மார்க்க திறனாய்வு போட்டி...




முத்துபேட்டை, மே 27 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்” நடத்தும் 4-ம் ஆண்டு "மாபெரும் திருக்குர்ஆன் ஓதுதல் மற்றும் பேச்சுப்போட்டி சிறப்பு விழா நிகழ்ச்சி".நாள்: 29-05-2012 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, இடம்: முத்துப்பேட்டை ”கொய்ய மஹால்”நமதூர் அனைத்து பள்ளிவாசல் மதரஸா, நிஸ்வான் மாணவ, மாணவியர் மற்றும் நம்ம வீட்டுக் குழந்தைகள் பங்கேற்கும் திருக்குர்ஆன் ஓதுதல், பேச்சுப்போட்டி மற்றும் உலமா பெருமக்களின் சிறப்புரைகள் நடைபெற இருக்கிறது. வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசளிப்பும் நடைபெறுகிறது.அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இன்நிகழ்ச்சியை சிறப்பித்தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு; பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு:
S. ஜஹபர் உசேன்
தலைவர்
M.A.K ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
M. சகாபுதீன்
பொருளாளர்
மற்றும் சங்க உறுப்பினர்கள் & பிரதிதரநிதிகள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
முத்துப்பேட்டை J .ஷேக் பரீது
7:16 AM | 0 comments | Read More

+2 தேர்வில் சதம் அடித்த திருவாரூர் மாவட்டம்..


திருவாரூர், மே 27 : திருவாரூர் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதிய 11 பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் . முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 32 பேரும் ,பாமணி அரசு மேனிலை பள்ளியில் 46 பேரும் ,வலங் கைமான் மகாதேவ குருஜி பள்ளியில் 36 பேரும் ,பேரளம் சங்கரா பள்ளியில் 28 பேரும் ,திருவாரூர் மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் 2 பேரும் மன்னார்குடி மேல மரவக்காடு பள்ளியில் 20 பேரும் ,மன்னார்குடி சண்முகா மெட்ரிக் பள்ளியில் 45 பேரும் ,மன்னார்குடி பாரதிதாசன் பள்ளியில் 138 பேரும் ,நீடாமங்கலம் நீளம் மெட்ரிக் பள்ளியில் 76 பேரும் ,தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

முத்துபேட்டை ஜே. ஷேக் பரீத்
7:05 AM | 0 comments | Read More

பெட்ரோல் டீசல் விலை ஏறுமுகம் ...மத்திய அரசுக்கு SDPI கடும் கண்டனம்.!!!



சென்னை, மே 27 : மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவில் 7 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி பொதுமக்களின் மீது கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மாத்திரம் 17 முறை பெட்ரோலிய பொருட்களின் மீது விலை உயர்வை அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும், வங்க தேசம் உள்ளிட்ட சிறிய நாடுகளே அதனை சமாளித்து இந்தியாவை விட குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை செய்கின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். அதன் சுமையை மக்களிடம் திணிப்பது நியாயம் இல்லை.
பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன் மடங்கு உயரும். ஏற்கனவே மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையினால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு அறிவிப்பு மக்களுக்கு பேரிடியாகவே அமையும்.
இது போன்ற விலை உயர்வு அறிவிப்புகள் மீண்டும் மதவாத பாஜக வை ஆட்சியில் அமர்த்தவே உதவும் என்பதை காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோலிய பொருட்களின் விலையை மாற்றி அமைக்கும் உரிமையை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.
தாறுமாறாக விலை உயர்வை அறிவித்துவிட்டு மக்கள் கொந்தளிக்கும் போது, சிறிய அளவிலான விலை குறைப்பு நடவடிக்கையை அறிவித்து மக்களை ஏமாற்றும் போக்கை இம்முறை மத்திய அரசு செய்யாமல் முற்றிலுமாக இந்த விலை ஏற்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோத விலை ஏற்ற அறிவிப்பை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து மக்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். எஸ்.டி.பி.ஐ மத்திய அரசின் இந்த விலை ஏற்ற அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை ஜே. ஷேக் பரீது

இப்படிக்கு
கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி
மாநில தலைவர்
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
தமிழ்நாடு
5:57 AM | 0 comments | Read More

இஸ்லாமிய இயக்க தலைவர்களை இணைத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மணமேடை!






மதுரை, மே 27 : நேற்று மதுரையில் நடந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத்தலைவர் முனிரின் தம்பி திருமண நிகழ்ச்சி முஸ்லிமல்லாதவர்களுக்கு திருமறை வழங்கும் நிகழ்ச்சியாகவும்,திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியாகவும், திருமணத்திற்கு வந்தவர்கள் இரத்ததானம் வழங்கும் நிகழ்சியாகவும் எல்லாவற்றிற்கும் மேல் இஸ்லாமிய இயக்க தலைவர்களை ஒருங்கிணைத்த நிகழ்ச்சியாகவும் ஆனது! எஸ்.எம். பாக்கர், காதர்மைதீன், ஜவாஹிருல்லாஹ்,தேசிய லீக் பஷீர், இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அப்போலோ ஹனிபா ஆகியோரை ஒரே மேடையில் பார்த்த போது சமுதாயம் ஒன்றிணைந்தது போல் சந்தோஷம் ஏற்பட்டது! அல்ஹம்து லில்லாஹ்.
source from:www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

மதுரை மூசா
5:14 AM | 0 comments | Read More

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்: வினா விடை போட்டி: Question No: 28

முத்துப்பேட்டை, மே 27 : (28) ஐவேலை தொழுகையில் மொத்தம் எத்துனை ரக்ஆத்துகள் உள்ளன? (A) 17 ரக்ஆத்துகள் (B) 15 ரக்ஆத்துகள் (C) 16 ரக்ஆத்துகள் (C) 18 ரக்ஆத்துகள்.
குறிப்பு: (1) இந்த கேள்விக்கு பதிலை ஒருவர் ஒரு முறைதான் அனுப்ப வேண்டும்.2) பதில்களை public.mttexpress@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். 3) பதிலை அனுப்பும் போது MTTEXPRESS.QNO.1 என்று டைப் செய்து A அல்லது B அல்லது C அல்லது D இதில் எந்த பதில் சரியானவை என்பதை 95513 88406 என்ற தொலைபேசி எண்ணுக்கு SMS மூலம் அனுப்பி வைக்கவும்.மேலும் தங்களுடைய பெயர், தெரு ஊர் இவற்றை மறக்காமல் இணைத்து அனுப்பவும். 4) இந்த கேள்வி பதில் போட்டி 30.04.2012 முதல் 30.05.2012 வரை 3o நாட்கள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேள்விகள் மட்டுமே கேட்கப்படும்.5) பதில்கள் 24 மணி நேரத்திற்குள் வந்து சேர வேண்டும் ஓவ்வொரு கேள்விக்கும் இரவுக்குள் விடைகள் வந்து சேர வேண்டும். அதற்க்கு மேல் வரும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.6) முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் தீர்பே இறுதியானது.
3:34 AM | 0 comments | Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன்!


இந்தியா, மே 27 : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் – கல்விகடன் பெற இணைக்க வேண்டிய இணைப்புகள் விவரம்முழுமையாக நிரப்பப்பட்ட கல்விகடனுக்கான விண்ணப்ப படிவத்துடன் கீழ்காணும் இணைப்புகளை முறையாக இணைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். 1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 5 காப்பி மாணவருக்கும் பெற்றோர்க்கும். 2.அட்டர்ஸ்டட் பெற்ற இரண்டு காப்பி ரேசன் கார்டு ஜெராக்ஸ். 3. அட்டர்ஸ்டட் பெற்ற இரண்டு காப்பி அடையாள அட்டை மாணவருக்கும் பெற்றோர்க்கும். 4. பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஒரிஜினல் 5. அட்டர்ஸ்டட் பெற்ற இருப்பிடச் சான்றிதழ் 6.கடைசியாக செலுத்திய வீட்டு வரி ரசீது அல்லது வாடகை வீட்டிற்கான ஒப்பந்தம் வீட்டு உரிமையாளரிடம் இருந்து. 7. அட்டர்ஸ்டட் பெற்ற பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது பட்டம் படிப்பு மதிப்பெண் பட்டியல். 8.கல்லூரியில் இருந்து பெற்ற போனாபிட் சான்றிதழ் ஒரிஜினல் 9.கல்லூரியில் இருந்து பெறப்பட்ட வருட வாரியான கட்டண விபரங்கள் ஒரிஜினல். 10. பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட கவுன்சிலிங் கடிதம் ஒரிஜினல். 11. அட்டர்ஸ்டட் பெற்ற பெற்றோரின் பிறந்த தேதிக்கான சான்று. 12. அட்டர்ஸ்டட் பெற்ற சாதி சான்றிதழ் 13.அட்டர்ஸ்டட் பெற்ற கடைசியாக பெற்ற மாற்றுச்சான்றிதழ் 14. கல்லூரியில் கட்டணம் செலுத்திய ரசீது ஒரிஜினல் (ஜெராக்ஸ் எடுத்த பின் கொடுக்கவும்) 15.அட்டர்ஸ்டட் பெற்ற முதல் பட்டதாரி சான்றிதழ் (பொருந்துமானால் மட்டும்) (அட்டர்ஸ்டட் : பச்சை மையினால் கையொப்பம் இடும் அரசு அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள். அரசு மருத்துவர்கள் என யாராவது ஒருவரிடம் அசல் சான்றுகளை காண்பித்து நகல்களில் சான்றொப்பமும், முத்திரையும் பெற வேண்டும் )
தகவல்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
தகவல் தொகுப்பு : அப்துல் சலாம், கிராம வள மையம் , தங்கச்சிமடம்
source from: wwww.muthupettaiexpress.blogspot.com,wwww.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EKA .முனவ்வர் கான்,அபு மர்வா
3:25 AM | 0 comments | Read More

நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?


உலகம், மே 27 : உலகத்தில் எல்லா பெற்றோர்களும் தம் குழந்தைகள் மீது பாசம், அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பார்கள். இது இயற்கையான ஒன்று, இந்த அன்பில், அக்கறையில் எந்த கலப்படமும், வேறுபாடும் இருக்காது. ஆனால் எல்லா பெற்றோர்களுக்கும் கருத்துக்கள், எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், கனவுகள், பண்பாடுகள், யுக்திகள் இப்படி எல்லாமே வித்தியாசப்படும். அவரவர் விருப்பப்படி தம் குழந்தைகளை வளர்ப்பார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் பலவித யுக்திகளை கையாள்வார்கள். இப்படி குழந்தைகளின் வளர்ப்பில் பல வித்தியாசங்கள் காணப்படும். இதில் சரியான முறையில் வளர்ப்பவர்கள் யார்? யார்? இதனால் பெற்றோருக்கு என்ன லாபம், தொடர்பு இவைகளை நாம் காணலாம்.

என்னைப் பொருத்தவரையில் எனது கருத்துப்படி எல்லா பெற்றோர்களுக்கும் சில தகுதிகள் அவசியம் தேவை. அது முதலில் அவரவர் தத்தம் குழந்தைகளின் மனதை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் நல்ல குணங்களை கண்டறிந்து ஊக்கமளித்து வழிநடத்தி செல்ல முடியும். அதுபோன்ற ஊக்கமும், ஒத்துழைப்புகளும்தான் அவர்களை வாழ்க்கையில் மென்மேலும் உயரச்செய்யும். இது போன்ற நற்காரியங்கள்தான் ஒரு பெற்றோரை நல்லவர்கள் என அடையாளங் காட்டும்.

தகுதிகள்

ஒரு நல்ல பெற்றோருக்கு அவசியம் சில தகுதிகள் வேண்டும். அது போன்ற தகுதிகள் தான் அவர்கள், குழந்தைகளை வளர்த்து பெரிய மனிதர்களாகச் செய்வதுடன் நல்ல குடும்ப தலைவர்களாகவும் நல்ல கணவன், மனைவியாகவும் இருக்கச் செய்யும்.

ஒரு நல்ல பெற்றோர் எப்போதும் தனது குழந்தைகளை அடுத்தவர் முன்பு தரம் தாழ்த்தி பேச மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. மற்றவர் முன்பு தம் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது தரம் தாழ்த்தி பேசுவது மரியாதைக் குறைவாக பேசுவது, குற்றம் சொல்வது, கிண்டல், கேலி இதுபோன்ற காரியங்கள் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதுடன் பெற்றோர்கள் மீது வெறுப்பையும், இடைவெளியையும் உண்டாக்கும். அதுபோல் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவதும் கூடாது.

மேலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பங்கள், ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது, அவ்வாறு கட்டாயப்படுத்துவதால் அவர்களால் எதையும் ஒழுங்காக செய்ய இயலாமல் போய்விடும். எனவே குழந்தைகளின் மனதை நன்கு அறிந்து அவர்கள் விருப்பத்தை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும். சிலர் குழந்தைகளிடம் சரிசமமாக ‘இந்த சிறு வயதில் உனக்கு இவ்வளவு பிடிவாதமா?’ ‘உனக்கு என்ன தைரியம் எங்களைவிட நீ பெரிய மனுஷனா’ என்று வாதம் செய்வதுண்டு. இது மிகவும் நல்லதல்ல குழந்தைகளின் அறிவையும் முடக்கிவிடும். குழந்தைகள் தானே என்று குறைவாக எண்ணாமல் அவர்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட விடவேண்டும். அவர்களையும் மதித்து சிறுவயதில் அவர்களை மரியாதையோடு நடத்தினால் அதற்கான பெருமைகள் அனைத்தும் பெற்றோரையே சாரும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்கள் பற்றியும் மனம் விட்டு பேசுவது, நல்லது மற்றும் கெட்டது போன்றவற்றை விவாதிப்பது போன்ற காரியங்கள் குடும்பத்தில் நன்மையை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடைவெளியை விட்டு நெருக்கத்தை உண்டாக்குவது மட்டுமல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும். மேலும் குழந்தைகள் முன் பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வது தவறாகப் பேசிக்கொள்வதும் கூடாது, இதுவும் குழந்தைகளின் மனதை பாதிக்கும். குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது போன்றவைகளும் பெற்றோர்களின் முக்கியமான தகுதிகள் ஆகும்.

பெற்றோர்களின் முக்கியமானகடமைகள்

பெற்றோர்களின் மிக முக்கியமான கடமையாவது, தாம் பெற்ற குழந்தைகளுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, தங்குவதற்கு இடம், அறிவு, கல்வி, ஆதரவு, அன்பு மற்றும் பாசம் போன்றவைகளை அளிப்பது மிக முக்கியமான கடமைகளாகும். எத்தனையோ பெற்றோர்கள் எவ்வளவு பெரிய கஷ்டத்திலும், தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்களின் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்று அவர்களுக்கு கஷ்டம் தெரியாமல் நல்லபடியாக படிக்க வைத்து அவர்களை நல்வழியில் வழிநடத்தி பெரிய மனிதர்களாகவும் நல்ல மனிதர்களாகவும், செய்வதுண்டு. இது பெற்றோர்களின் தியாகம் மட்டுமல்ல இதுவும் கடமைகளில் ஒன்று என்பது எனது கருத்து.

மேலும், ஒருவருக்கு இரண்டு குழந்தைகளோ அதற்கு மேற்பட்டோ இருப்பின் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையில் பாகுபாடு காட்டக்கூடாது. இது மனித இயல்பு நம்மில் எல்லோர்க்குமே ஒன்றின் மீது மட்டுமே ஆசையும், கவனமும் அதிகம் இருக்கும் அவ்வாறு ஒரு குழந்தையின் மீது மட்டும் நாம் அதிக பாசம், அன்பு கொள்ளலாம் அவ்வாறு இருப்பினும் நாம் அதை அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது. எல்லோரையும் ஒரே சமமாக நடத்தவேண்டும் அது அவர்களின் மனநிலையை அதிகம் பாதிப்பதுடன் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.

நாம் நம் குழந்தையை கண்டிப்பாக நம்ப வேண்டும். அவ்வாறு நம்புவதால் மட்டுமே குழந்தைகள் சரியாக இருக்கும் என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஆதலால் நாம் அவசியம் அவர்களை படிக்கின்ற இடம், விளையாடுகின்ற இடம், பழகுகின்ற இடம், பழகும் நண்பர்களையும் கண்கானித்து வரவேண்டும். நம்புவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோர்களின் கடமைகளில் ஒன்று. பெற்றோர்கள் முடிந்தவரை பெற்றோராக, தாயாக, தந்தையாக, அவர்களே சகோதர, சகோதரிகளாக, நண்பர்களாக, நல்ல ஆலோசகராக, ஆசிரியர்களாக, வழிகாட்டியாக, சில நேரங்களில் குழந்தையாக நடந்து கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும்.

இஸ்லாமியப் பார்வையில் ஒரு நல்லபெற்றோர்

எல்லா மதமும் அன்பையே போதிக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் எல்லாவற்றிற்கும் நேர் மாறானது. உண்மையும்கூட, உலகத்தில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் மனிதர்களால் மனிதர்களுக்காக உண்டாக்கியது. ஆனால் இஸ்லாமிய சட்டதிட்டங்களோ இறைவனால் மக்களுக்காக இறக்கி வைக்கப்பட்டது. மற்ற மதங்களைப்போல இஸ்லாமியர்கள் அவரவர் விருப்பத்திற்கு வாழமுடியாது. இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களின் வழியே நடக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஒரு நல்ல பெற்றோர் எப்படி இருக்கவேண்டும். உண்மையான, அன்பான, முறையான கணவன் மனைவியாக இறைவனை ஜந்து வேளை தொழுது குழந்தைகளையும் சிறு வயது முதலே தொழவும், ஓதவும், இறை(தீன்) வழியில் ஈடுபடவும் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் கடமைகளை பெற்றோர்களும் பின்பற்றி பிள்ளைகளையும் கட்டாயமாக பின்பற்றச் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் மார்க்க விஷயங்களை பிள்ளைகளுக்கு போதித்து அதை முறையாக பின்பற்ற செய்யவைப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை மார்க்க விஷயங்களைக் கற்று அதைப் பின்பற்றச் செய்வதில் பிள்ளைகளை ஆர்வம் காட்ட வேண்டும்.

நாமும் நல்ல கணவன்-மனைவியாக நல்ல பெற்றோராக பிள்ளைகளிடம் இருப்பதுடன் இஸ்லாத்தின் மார்க்க வழிப்படி பிள்ளைகளை வளர்ப்பதுடன் அதுபோல வாழவும் செய்ய வேண்டும். மறுமை நாளில் பெற்றோரின்; கடமையாக இறைவன் எதை எதிர்ப்பார்க்கின்றானோ அதை சரிவர அறிந்து செய்ய வேண்டும். இஸ்லாம் என்ற போர்வையில் பிள்ளைகளை சமுதாயத்தின் வெளியே தெரியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வைப்பதும் தவறு. இஸ்லாத்தின் முறைப்படி முஸ்லிம்கள் எல்லாத் துறையிலும் படித்து வளர்த்து எல்லோரும் இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், சமுதாயத்தில் நியாயமான, முறையான, உண்மையான முறையில் நல்ல அந்தஸ்தில் முஸ்லிம்களும் வளர்ந்து வர வேண்டும். முடங்கிக் கிடக்காமல் முஸ்லிம்கள் முன்னேறி வர வேண்டும்.

உலகத்தில் எல்லோரும் நல்ல பெற்றோரே! இருப்பினும் எல்லோருக்கும் ஒரு மதிப்பீடு உண்டு. நூறு சதவிகிதம் யாரையும் மதிப்பிட முடியாது எல்லா பெற்றோரும் ஒரு சில தவறு செய்வதுண்டு நூறு சதவிகிதம் சரியாக இருப்பது ஒரு சில பெற்றோர்களே! பாசம், நேசம், அன்பு, அக்கறை, எண்ணங்கள், விருப்பம், கனவு, திட்டம், ஆசைகள், இப்படி எல்லோருக்கும் பலவிதமான கருத்துக்கள் பலவாறு வித்தியாசப்படும். அவ்வாறு அவரவர்கள் யுக்திப்படி தங்களின் குழந்தைகளை வளர்ப்பதுண்டு இதில் முறையாக பின்பற்றி வெற்றி பெறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. தவறான வழிகாட்டல்களை கொடுக்கும் பெற்றோரை பின்பற்றி தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் வெற்றி பெறும் பிள்ளைளும் உண்டு. அது அவரவர் சூழ்நிலைக்கேற்ப உண்டாகும்.

ஒருவர் நல்ல பெற்றோரா இல்லையா என்பது அந்த பிள்ளைகளை பொறுத்தே தீர்மானிக்கப்படும். பிள்ளைகள் செய்யும் நற்காரியங்கள், புகழ், பதவி, பணம், உதவி இவைகளும் பெறறோரை நல்லவர்களாக்கலாம். பெற்றோர்களின் உண்மையான வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல குழந்தைகளை பெற்று வளர்ப்பது, உதவி செய்தல், தர்மம் செய்தல் இஸ்லாத்தை முறையாக பின்பற்றுவதும் கூட நல்ல பெறறோருக்கு அடையாளமாகும். குழந்தைகள் செய்யும் சில தவறுகள் கூட பெற்றோருக்கு கெட்ட பெயர் வாங்கித் தரும்.

எனது பெற்றோர்கள் என்னை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி, எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்ததுடன், அவர்களும் நல்லமுறையில் நல்லவர்களாக, இஸ்லாத்தை முறைப்படி பின்பற்றி என்னையும் பின்பற்ற செய்தார்களே, அதேபோல் நானும் எனது பிள்ளைகளையும் நல்லமுறையில் இஸ்லாத்தின் சட்டதிட்டம் நெறிமுறைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழியிலும் தீன் வழியினை போதித்து பின்பற்ற செய்வதுடன் என் எண்ணம், கனவு, ஆசைகள் விருப்பப்படி சமுதாயத்தில் எனது பிள்ளைகளின் திறமைகளை உணர்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை நியாயமான முறையான, உண்மையானவர்களாக சமுதாயத்தில் நல்ல பொறுப்பில் அமர்த்தி, நல்ல பெற்றோருக்கான கடமையை எனது பெற்றோர்களைப் போல இன்ஷா அல்லாஹ் நான் சரியாக செய்வேன் என நம்புகிறேன்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EKA .முனவ்வர் கான், அபு மர்வா
3:14 AM | 0 comments | Read More

திருச்சி ஏர்போர்ட்டில் தலை விரித்தாடும் லஞ்ச ஊழல்.


திருச்சி, மே 27 : இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!


சம்பவம் ஒன்று.
விமானத்தை விட்டு இறங்கி ஒரு பேருந்தில் கொண்டு போய் குடிநுழைவு வாசலில் ( Immigration Check point ) இறக்கிவிட்டனர். என்னதான் அடிக்கடி வந்துபோனாலும் விமானத்தில் ஏறியதுமுதல் சொந்த பந்தங்களை காணும் ஆவல்தான் வீடு போய் அவர்களை பார்க்கும்வரை இருக்கும்! ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான்! அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம்! ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் கொடுமை!

நாங்கள் வரிசையில் நிற்கும்போதே ஒருவர் உள்ளே இருந்து வந்து ஒரு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டே வந்தார், உடனே அவர் பெயர் சொல்லி அழைத்த நபர் தன் மனைவியோடு வரிசையின் கடைசியில் இருந்து வந்து எந்தவித கூச்சமும் இல்லாமல் வாயெல்லாம் பல்லாக வரிசையில் நிற்பவர்களை கடந்து அந்த ஊழியரை பின்தொடந்து சென்றார்! அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர்! அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார்! எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது! அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று! அப்படியே உறவு இல்லையென்றாலும் இதேபோல் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்!

அதாவது, நம்மை வரவேற்க வந்தவர்கள் இதற்கென சிலரை பிடித்து தள்ளுவதை தள்ளி நாம் பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும், அவர்களும் கடமை தவறாமல் நம்மை வரிசையில் நிற்கவிடாமல் உறவு என்று சொல்லி அழைத்துவிடுவார்கள்! இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், சிங்கபூர் நான் பிழைக்க வந்த நாடுதான், ஆனால் நிரந்தரவாசியாக இருந்தால்கூட போதும் எந்த நாட்டிற்கு போனாலும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் குடிநுழைவுக்கு எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம், எனது இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து ஆட்டோ ஸ்கேனிங்கில் வந்து விடலாம். ஆனால் சொந்த நாட்டில் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துகொண்டு இந்த அவலங்களை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

சம்பவம் இரண்டு.

ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து வந்தால் அடுத்து லக்கேஜ் கலெக்சன். இந்த முறை எனக்கு ஒரே ஒரு செக் இன் லக்கேஜ் மட்டுமே, இங்கு ஐ.டி. ஷோவில் வாங்கிய ஒரு LED T.V . இங்கு அதை செக் இன் செய்து கன்வேயரில் அனுப்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், இதுபோல எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களுக்கு தனி கன்வேயர்! ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங்?! அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! சரி.. அதைப்பற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு! பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த காரணங்களால் டிவி போன்ற ஹேண்டில் கேர் ஐட்டங்களை கன்வேயரில் அனுப்பாமல் தனியாக சைடில் உள்ள வாசல் வழியாக எடுத்து வைப்பார்கள், எனது டிவி யையும் எடுத்து வைப்பார்கள் என்று காத்துகொன்டிருந்தேன், ஆனால் எடுத்துவைத்தபாட்டைக் காணும்! ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து " உங்களது என்ன பொருள் சார்?" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன்! ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார்! வேகமாக வெளியில் வந்து " இருக்கு சார், கொஞ்சம் கவனிங்க எடுத்துட்டு வர்றேன்" என்றார்!

எனக்கு முதலில் புரியவில்லை, பின்னர்தான் கவனித்தேன் அருகில் இருப்பவர்கள் நூறு ரூபாயை அவர் கைகளில் திணித்துவிட்டு தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டனர்! நான் அவரிடம் கேட்டேன் " ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா? எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை? என்றேன், அவரும் " சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே வச்சு சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ் ஆயிருச்சுன்னு சொல்வாங்க" என்றார்! அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன்! இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் " தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா? என்றார்! இத்தனையும் கன்வேயர் ரூமுக்குள் இருந்த ஒரு கஸ்டம் ஆபிசர் நன்றாக கண்காணித்துக் கொண்டிருந்தார்! யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று! கூட்டுக்கொள்ளை!

சம்பவம் மூன்று.

டிவியை எடுத்துகொண்டு அடுத்து சுங்கச் சோதனை! கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள்! எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப் பில் கொடுத்துவிடுவார்கள்! ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது! சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால் வந்து மெதுவாக " தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர்! அவர் இப்ப போயிருவார், அவர் போனதும் 2000 மட்டும் கொடுத்திட்டு உங்க டிவிய எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்!

மேலும் " நேரம் காலம் தெரியாம இங்க வந்து உக்காந்துகிட்டு எங்க பொழப்புல மண்ண போடறான்" என்று அந்த சீனியர் ஆபிசரையும் திட்டிக்கொண்டே சென்றார்! இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே " உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு! சரி நீ ஆணியே புடுங்க வேண்டாம்னு முழு தொகையும் கட்டிட்டு டிவியை எடுத்துக்கிட்டு வெளில வந்துட்டேன்!

சம்பவம் நான்கு.

எல்லாத் தொல்லைகளும் முடிந்து அப்பாடான்னு வெளில வந்து லக்கேஜ் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு திரும்பினா, நான் கொண்டுவந்த ட்ராலிய வாங்குறதுக்காக ஒரு ஊழியர் தயாராக நின்றார்! பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி! ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், " என்னப்பா என்ன வேணும்?" என்றேன், "பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்" என்றார்! நானும் விடாமல் " போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க?" என்றேன்,

" என்ன சார் நீங்க? ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப் போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க?" என்றார் சாதரணமாக! எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன் " அண்ணே. இன்னும் சிங்கபூர்ல தினக்கூலிக்கு வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஒரு நாள் சம்பளமே 18 வெள்ளிதான்! இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும் ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்" என்றேன்! அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார்! கண்டிப்பாக கெட்ட வார்த்தையில் திட்டியபடியே சென்றிருப்பார்!

சம்பவம் ஐந்து.

எல்லாவற்றையும் கடந்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வத்தோடு விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், கொஞ்ச தூரத்தில் போலிஸ் செக் போஸ்ட்! அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை! டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் " என்ன புதுசா? கவனிச்சிகிட்டு போய்க்கிட்டே இருங்க, ஐயா உள்ளதான் இருக்காரு" என்றார்!

உடனே என் மாமாவும் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டவும் " ஓக்கே ரைட்..போய்க்கிட்டே இருங்க" என்று கை காட்டி அனுப்பி வைத்தார்! நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பார்த்துக் கொண்டிருந்தார்! மாமாவிடம் கேட்டேன் " நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க?" என்று, "என்ன பண்ணுவாங்க? சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கார்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க" என்றார்! அரசாங்க அதிகாரிகளைப் பற்றிய மக்களின் இந்தப் பயம்தான் அவர்களை மேலும் லஞ்சமயமாக வாழவைத்து கொண்டிருக்கிறது!

சம்பவம் ஆறு.

விடுமுறையை சந்தோசமாக கழித்துவிட்டு திரும்ப சிங்கை வர அதே திருச்சி விமான நிலையம்! சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை! ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது! இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை! இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே! நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம்! ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து உள்ளே போகும் முன் ஒரு கஸ்டம் ஆபிசரும் அவருக்கு துணையாக ஒரு போலிசும் இருந்து பாஸ்போர்ட்டை செக் செய்து அனுப்புவார்கள்.

என் பாஸ்போர்ட்டை வாங்கி புரட்டிப் பார்த்த அந்த போலிஸ் " என்ன தம்பி.அடிக்கடி வந்து போவீங்க போல? உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்! அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில் ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை என் பின்னாடியே வந்துவிட்டார்! " தம்பி..கவனிச்சிட்டு போங்க" என்று! திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன்! உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரும்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார்! என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள்? பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள்! இவர்களுக்கு ஏன் இந்தப் பிழைப்பு? இந்த நீண்ட கட்டுரையை படித்து முடிக்கும் உங்களுக்கே இவ்வளவு ஆயாசமாக இருக்கும்போது, இதை ஒவ்வொரு பயணத்திலும் அனுபவிக்கும் பயணிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்! பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள்! இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம்! லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் சேர்க்கிறோம்! லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார்! லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது! சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர்! ஆக மொத்தம் இந்தியாவிற்கு தேசிய வியாதி என்று ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு சரியான தேர்வு இந்த லஞ்சம்!
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

சேக் முஹைதீன்
11:32 AM | 1 comments | Read More

முத்துப்பேட்டை: கொய்யா குரூப்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி இறகு பந்து போட்டி



முத்துப்பேட்டை,மே 26 : முத்துப்பேட்டை கொய்யா குருப்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி இறகு பந்து போட்டி இன்று மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் பரிசு 5001 , இரண்டாம் பரிசு 3001 , மூன்றாம் பரிசு 2001 , நான்காம் பரிசு 1501 . இடம்: பூகொய்யா மைதானம், நாள்:26 .05 .2012 .நேரம்: 8

source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
AKL.அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)
9:40 AM | 0 comments | Read More

முத்துப்பேட்டையில் 108 ஆம்புலன்சில் இரட்டை ஆண் குழந்தை.!!



முத்துப்பேட்டை, மே 26 : முத்துப்பேட்டை அடுத்த திருத்துறைப்பூண்டி தாலுக்கா பெரிய நாயகி புரத்தை சார்ந்த ராஜீவ் காந்தி இவரது மனைவி மைத்திலி 26 . இவறுக்கு நேற்று நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டத்து. உடனே இவரது கணவர் ராஜீவ் ஆந்தி அவர் திருத்துறைப்பூண்டி 108 ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அந்த வாகனம் விபத்துக்காக சென்றுள்ளது என்று தகவல் தெரிகின்றது. மீண்டும் திருக்குவளை 108 க்கு தகவல் கொடுக்கப்பட்டது அதுவும் அவசர வேலையாக வெளியில் சென்றுள்ளது என்று தெரிகிறது. பிறகு முத்துப்பேட்டை 108 தொடர்பு கொண்ட உடன் ராஜீவ் காந்தி வீட்டுக்கு வந்தது 108 டிரைவர் சேகர், மருத்துவ உதவியாளருடன் சுந்தராஜன் மைத்திலியை ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற போது ஆபத்தான கட்டத்தை தாண்டி உள்ளது.குழந்தை இரட்டை குழந்தையாக உள்ளதால் இடமாறி உள்ளது. உடனடியாக திருவாரூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறினார்கள். உடனடியாக திருவாரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மைத்திளிக்கு கடுமையாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சரி ஆபத்துக்கு பாவம் இல்லை என்று எண்ணி டிரைவர் சேகர் மற்றும் மருத்துவ உதவியாளர் சுந்தராஜன் ஆகியோர் பிரசவத்தை கவனித்ததில் மைத்திளிக்கு 2 அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மைத்திலி, மற்றும் குழந்தை ஆகியோரை திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொன்று சேர்த்தனர். இந்த உதவியை இவர்களின் உதவியை கண்ட மருத்துவர், மைத்திலி சொந்தங்கள் மற்றும் போது மக்கள் பாராட்டினர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

அகல்.அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)
8:38 AM | 0 comments | Read More

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்: வினா விடை போட்டி: Question No: 26,27

முத்துப்பேட்டை, மே 26 : (26) எந்த நபி இவ்வுலகில் ஆயிரம் வருடம் தூதுச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள், அந்த நபியின் பெயர் என்ன?
(A) நபி மூசா அலை (B) நபி நூஹு அலை (C) நபி சுலைமான் அலை (D) நபி ஆதம் அலை.
(27) திருமறைக் குர்ஆன் முழுமையாக (இவ்வுலகிற்கு) இறக்கி அருளப்பட்ட ஆண்டு?
(A) 21 ஆண்டு (B) 22 ஆண்டு (C) 23 ஆண்டு (D) 28 ஆண்டு

குறிப்பு: (1) இந்த கேள்விக்கு பதிலை ஒருவர் ஒரு முறைதான் அனுப்ப வேண்டும்.2) பதில்களை public.mttexpress@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். 3) பதிலை அனுப்பும் போது MTTEXPRESS.QNO.1 என்று டைப் செய்து A அல்லது B அல்லது C அல்லது D இதில் எந்த பதில் சரியானவை என்பதை 95513 88406 என்ற தொலைபேசி எண்ணுக்கு SMS மூலம் அனுப்பி வைக்கவும்.மேலும் தங்களுடைய பெயர், தெரு ஊர் இவற்றை மறக்காமல் இணைத்து அனுப்பவும். 4) இந்த கேள்வி பதில் போட்டி 30.04.2012 முதல் 30.05.2012 வரை 3o நாட்கள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேள்விகள் மட்டுமே கேட்கப்படும்.5) பதில்கள் 24 மணி நேரத்திற்குள் வந்து சேர வேண்டும் ஓவ்வொரு கேள்விக்கும் இரவுக்குள் விடைகள் வந்து சேர வேண்டும். அதற்க்கு மேல் வரும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.6) முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் தீர்பே இறுதியானது.
9:56 PM | 0 comments | Read More

மனையியல் பாடத்தில் மாநில அளவில் 2 வது இடம் பிடித்த முஸ்லிம் மாணவி.

காயல்பட்டினம், மே 22 : நடந்து முடிந்த +2 தேர்வில் மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா அவர்கள் தெரிவித்ததாவது. மாநிலத்தில் இரண்டாமிடம் என்ற இந்த சாதனை எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது... இதற்காக முதலில் என்னைப் படைத்து பராமரிக்கும் இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
தொகுப்பு
AKL .அப்துல் ரஹ்மான்.
9:30 AM | 0 comments | Read More

+2 தேர்வு முடிவுகள் முதல் 3 இடத்தை பிடித்த நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகள்


சென்னை, மே 22 : +2 தேர்வின் முடிவுகள்: தமிழகத்தில் +2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2 ந்தேதி தொடங்கி 25 ந்தாம் தேதிவரை நடைபெற்றது. இதில் 3 .38, லட்சம் மாணவிகளும் தேர்வு எழுதினர். +2 தெருவுக்கான முடிவுகள் இன்று காலை 11 மணி அளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் இதில் மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்களில் 6 ,55 ,594 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 2518 மாணவர்கள் 200 / 200 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் முதல் 3 இடங்களை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். முதல் இடத்தை சுஷ்மிதா (1189) மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை கார்த்திகா, அசோக்குமார், மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் (1188) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தை மகேஸ்வரி, பிரபா சங்கரி என்று இரண்டு மாணவிகளும் (1187) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1:13 AM | 0 comments | Read More

முத்துப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி சிலைக்கு அஞ்சலி



முத்துப்பேட்டை, மே 22 : முத்துப்பேட்டை காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நகர தலைவர் வி.சி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நகர காக்ன்கிராஸ் அலுவலக வாசலில் கோடியை மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் எஸ்.எ.டி. அண்ணாமலை ஏற்றி வைத்தார். பின்னர் அதே இடத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் காமராஜ், முஹைதீன் பிச்சை, நாட்சிகுலம் தாகிர், மெட்ரோ மாலிக், பேரூராட்சி தலைவர் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொகுப்பு

யூசுப் அலி (ஆலிம்), AKL . அப்துல் ரஹ்மான்.
10:22 PM | 0 comments | Read More

மவுத்து அறிவிப்பு: "ரபி அஹமது"

முத்துப்பேட்டை, மே 21 : முத்துப்பேட்டை S.P.K.M.தோட்டவிளாகம் M.M.தாவூது (சென்னை)அவர்களின் மகனாரும், H.M.அன்வர் பாட்சா,H.M.ஹாஜா முஹைதீன், H.M.பஷீர் அஹமது(பிரிலியண்ட் ஸ்கூல்),H.M.சாதிக் அலி, H.M.ஜாகிர் ஹுசைன் இவர்களின் மருமகனும், A.P.N.முஹம்மது இலியாஸ் அவர்களின்மச்சானும், D.ஹலில் ரஹ்மான், D.அப்துல் சுக்கூர் இவர்களின் சகோதருமாகிய, D.ரபீ அஹமது அவர்கள் நேற்று (20.05.2012)அன்று காலை 11.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று (21.05.2012) காலை9.00 மணியளவில் முஹைதீன் பள்ளி மையவாடியில்நல்லடக்கம் செய்யப்பட்டது. அறிவிப்பவர்M.M.தாவூது (சென்னை)நமது நிருபர்KM . காதர் கனி (பாடகர்)
8:25 AM | 0 comments | Read More

ஆப்கானில் இவ்வாண்டு பிரெஞ்சு படை வாபஸ்!

வாஷிங்டன்,மே 21 : முன்னரே திட்டமிட்டபடி ஆப்கானில் இருந்து அனைத்து பிரெஞ்சு ராணுவத்தினரும் இவ்வாண்டு இறுதியில் வாபஸ் பெறுவார்கள் என்று பிரான்சின் புதிய அதிபர் ஃபிரான்சுவா ஹாலந்த் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் ஜி-8 உச்சிமாநாட்டில் பங்கேற்க வந்த ஹாலந்த், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ராணுவத்தினரை வாபஸ் பெறும் முந்தைய தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.

பிரான்சு அதிபர் தேர்தலில் ஹாலந்தின் முக்கிய வாக்குறுதியே ஆப்கானில் இருந்து பிரஞ்சு படைகளை வாபஸ் பெறுவதாகும்.

நேட்டோ ஆக்கிரமிப்பு படையில் அங்கம் வகிக்கும் பிரான்சு ராணுவம், நேட்டோ கூட்டணியின் பொதுவான நிலைப்பாட்டிற்கு மாற்றமாக முன்னரே படையை வாபஸ் பெறுவது ஒபாமாவுக்கு பின்னடைவாகும்.

2014-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலும் வாபஸ் பெறப்போவதாக நேட்டோ அறிவித்திருந்தது. ஆனால், நேட்டோவில் அங்கமான பிரான்சு, நேட்டோ கூட்டணியின் பொதுவான நிலைப்பாட்டிற்கு ஒப்ப நிற்கும் என நம்புவதாக பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பாரக் ஒபாமா தெரிவித்தார்.

ஜி-8 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் இருவரும், யூரோசோனில் பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் விவாதித்தனர். பிரச்சனைக்கு தீர்வு காண அவசர நடவடிக்கைகள் அத்தியாவசிமானது என்பதை இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

5:25 AM | 0 comments | Read More